வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

ஆண்டவர் சொல்லியது !

ஆண்டவர் சொல்லியது !

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்றுகிறேன் தயவினொடும் கேட்பீர்
என் மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கதவர் போல் வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்குச் சுத்த சிவம் ஒன்றே
தன்னாணை என்னாணை சார்ந்து அறிமின் நீண்டே !

எல்லாம் வல்ல சர்வ சித்தியை உடைய அருட்பெருஞ் ஜோதி தனித்தலைமைப் பெரும் பதியாகிய ஆண்டவரை நோக்கி வேண்டித் தபசு
( தவம் ) செய்து சிருட்டிக்கும் ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்ட,பிரம்மாவும் ,இரண்டு சித்தியை உடைய விஷ்ணுவும் ,மூன்று சித்தியை உடைய ருத்திரனும் .இது போன்ற மற்றையர்களும்,

இவர்கள் ஏற்படுத்திய சமய ,மத மார்க்கங்களை அனுஷ்டித்து இருக் கின்றவர்கள் .இவர்களை அந்த அந்த சமய,மதங்களுக்குத் தெய்வங்களாக பாவித்து வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள்.

இம் மூர்த்திகள் உடைய சித்திகள் சர்வ சித்தியை உடைய அருட்பெருஞ்ஜோதி கடவுளின் சித்தியின் இலேசங்கள்.அதில் ஏக தேசம் கூட அல்ல ! ஆகையால் இவர்கள் அந்தச் சர்வ சித்தி உடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள் .

கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள்.ஆகையால் சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து ,அந்தச் சமயத் தெய்வங்களிடம் பெற்றுக் அற்ப சித்தியில் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலே ஏறவேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு நிற்றல் போல் நில்லாமல்.

சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும்.அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டும் என்றும்.கொள்ள வேண்டுவது சுத்த சன்மார்க்க சங்கத்தவர்கள் உடைய கொள்கையாகும்.

இதை ஆண்டவர் தெரிவித்தார் என்று வள்ளல்பெருமான் சன்மார்க்க சங்கத்தவர்கள் தாள் வணங்கி சொல்லுகின்றார்..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.     

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு