செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

மருட்டு உலகில் இருட்டு உலகில் மடிவது அழகு அல்ல !

மருட்டு உலகில் இருட்டு உலகில் மடிவது அழகு அல்ல !

பொருட்டல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது தான்
புகலுவது ஏன் நாள் தோறும் நும் புந்தியில் கண்டதுவே
மருட்டு உலகீர் இருட்டு உலகீர் மடிவது அழகலவே
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ வம்மின் இங்கே
பொருள் திறஞ் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின் சிற்சபை அமுதம் அருந்துமின் அன்புடனே
அருள் திறஞ் சேர்ந்து எண்ணியவாறு ஆடுமினோ உம்மை
அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்றிலையே !

வள்ளல்பெருமான் ''ஞான சரியை'' தலைப்பின் 23,வது பாடல்.
இந்த உலக வாழ்க்கையில் நாம் தினந்தோறும் மரணம் அடைந்து மாண்டு போவதைப் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.

பார்த்துக் கொண்டே இருந்தும் மரணம் ஏன் வருகின்றது ?என்பதை சிந்திக்கவே இல்லை. மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவான இயற்கையானது என்று தவறாக எண்ணிக் கொண்டு உள்ளோம்.

மரணம் என்பது இயற்கை அல்ல ! மரணம் செயற்கையானது !
தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் ...தவறு செய்யாமல் இருந்தால் மரணம் இல்லாமல் வாழும் வழி ஒன்று இருக்கின்றது..

இந்த மருட்டு ,இருட்டு உலகத்தில் பொருளைக் கொண்டு வாழும் வாழ்க்கை மரணத்திற்குக் கொண்டு செல்லும்.அருளைப் பெரும் வழியும் வாழ்க்கையும் இவ்வுலகத்திலே உள்ளது..அருளைப் பெற்றால் மரணத்தை வெல்லலாம் .

அருளைப் பெரும் வழியை வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக படித்து,கேட்டு, உணர்ந்து,பின் அதை அனுவித்து அருளைப் பெற்று பேரின்பம் என்னும் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு வழியைக் காட்டுகின்றது .வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார் வள்ளல்பெருமான்.

இதுவரையில் சாகும் கல்வியைக் கற்று மடிந்து கொண்டே உள்ளீர்கள் .இங்கு ''சாகாக் கல்வி ''கற்றுக் கொடுக்கப்படுகின்றது.

இந்த கல்வியைக் கற்றுக் கொள்ள உங்களுக்கு எந்த தடைகளும் கிடையாது பொருள் செலவுகள் கிடையாது.உங்களை யாராலும் எவராலும் தடுக்கவும் முடியாது. நீங்கள் எண்ணியது எண்ணியபடி வாழலாம் .

நீங்கள் சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்தால் உங்களைப் பார்த்து அனைத்து மக்களும் பின் தொடர்ந்து சாகாமல் வாழும் அருள் செல்வத்தை பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி என்றும் நிலைப் பெற்ற மரணம் இல்லாப் பேரின்ப வாழ்க்கை வாழலாம் வாழ்வீர்கள் ..

எனவே இந்த இருள் சூழ்ந்த ,மருள் சூழ்ந்த உலகத்தை விட்டு வெளியே வாருக்கள்.நேரிடையாக இறைவன் அருளைக் கொடுக்க காத்துக் கொண்டு இருக்கின்றார் என்று வள்ளல்பெருமான் அழைகின்றார்.இனி தயக்கம் என்ன ?

சமய மதங்கள் சாகும் கல்வியை சொல்லித் தந்தது .சுத்த சன்மார்க்கம் சாகாக் கல்வியைத் சொல்லித் தருகின்றது.

இதுவரையில் படித்தது சந்தைக் கலவி .இனிமேல் படிப்பது சொந்தக் கல்வியாகும்.

பொருளை அருளாக மாற்றும் கல்வி ....

வாருங்கள் உடனே வந்து சேருங்கள் .அருளைப் பெறுங்கள். மரணத்தில் இருந்து விடுபடுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு