வியாழன், 19 பிப்ரவரி, 2015

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு !

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு !

மூவரும் தேவரும்,முத்தரும்,சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை
அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ் ஜோதி.
உலகு உயிர்த் திரள் எலாம் ஒளிநெறி பெற்றிட
இலகும் ஐந்து தொழிலையும் யான் செய்யத் தந்தனை .
போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி !

வள்ளல் பெருமான் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வை இன்று வரையில் யாரும்,எவரும் பெறவில்லை.

இந்த உலகத்தில் உள்ள உயிர்களை படைத்து ,காத்து,அழித்துக் கொண்டு இருக்கும்,பிரம்மா விஷ்ணு சங்கரன்,என்னும் தத்துவங்களும்.முத்திப் பெற்றவர்களும்,சித்திப் பெற்றவர்களும் ,மற்றும் உள்ள மதத்தலைவர்களும்,பதத் தலைவர்களும் , அருளாளர்களும், எவருமே பெறமுடியாத,எவராலும் அழிக்க முடியாத மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப வாழ்க்கையைக் கொடுத்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை போற்றி புகழ்கின்றார் வள்ளல்பெருமான்.

அறிவு !

அறிவு என்பது விரிந்து கொண்டே இருக்கும். உலக அறிவு என்பது தாவரங்கள் முதல் ஒவ்வொரு அறிவாக விளங்கி இறுதியில் அருள் அறிவு விளங்க வேண்டும்.

அருள் அறிவு என்பது கடவுள் அறிவாகும் .அருள் அறிவு விளங்கும் போதுதான் கடவுளின் பூரண அருளைப் பெறமுடியும்.

கடவுள் அறிவு என்னும் அருள் அறிவை ,பூரணமாகப் பெற்று அருள் பூரணத்தையும் பெற்று அனுபவித்து ,சித்துக்கள் எவையும் செய்யாமல் ,அருளைப் பாதுகாத்தவர்தான் வள்ளல்பெருமான்.

அவருடைய எண்ணம் சொல் யாவையும் உலக உயிர்கள் மேலே இருந்தது..அதைவிட மேலாக ஆன்மாக்கள் யாவும் ஆன்மநேயம் இல்லாமல் ,ஒருவரை ஒருவர் யார் ? என்பதை புரிந்து,அறிந்து கொள்ளாமல்,உயிர்களை அழித்துக் கொண்டே உள்ளார்கள் .

உயிர்கள் வந்த விதத்தையும் ,உடம்பு வந்த விதத்தையும்,மனித குலத்தின் மேன்மையும் உண்மையானக் கடவுள் யார் என்பதையும்.. மக்களுக்குப் போதித்து ,ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் ஒளிவு மறைவு இல்லாமல்,மக்களுக்கு தெரிவித்து, தெளிவுப் படுத்தியவர் வள்ளல்பெருமான்.

கருணை ஒன்றால் தான் கடவுளைக் காணமுடியும்,கருணை ஒன்றால்தான் ,அன்பு,தயவு என்னும் அறிவு விளக்கம், உண்டாகும்,அறிவு விளக்கத்தால்தான் அருளைப் பெரும் அருள் அறிவு உண்டாகும் .அந்த அருளைப் பூரணமாகப் பெற்றால்தான் மரணத்தை வெல்லமுடியும்.என்ற உண்மையை வெளிப்படையாக சொல்லி,சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டியவர் வள்ளல்பெருமான்.

கடவுள் நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டவர் .அதற்கு ''கடவுள் நிலை அறிந்து அதன் மயமாதல்'' என்ற தலைப்பையும் தெரிவித்து உள்ளார்.

எனவே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தன்னுடைய ஐந்தொழில் வல்லபத்தையும்,வள்ளல்பெருமானிடம் ஒப்படைத்து தானும் அவரும் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து.கடவுள் வேறு, தான் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு இப்போது இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை அறிவு சார்ந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் எவரும் பெறமுடியாத அருளையும் ஆற்றலையும் ஐந்தொழில் வல்லப்பத்தையும் கொடுத்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை போற்றி புகழ்கின்றார்.நமது வாளால்பெருமான்.

''நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்சான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் ---தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யாருளர் நீ சற்றே அறை ! ''

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு