திங்கள், 9 பிப்ரவரி, 2015

அருள் உணவு !

அருள் உணவு !

உடற் பிணி அனைத்தையும் உயிர்ப் பிணி அனைத்தையும்
மடர்பு அறத் தவித்த அருட் சிவ மருந்தே !------அகவல்.


நம்மை பிடித்துக் கொண்டு இருக்கும் தீராத பிணிகள் இரண்டு ,உயிர் என்னும் பிணி,உடம்பு என்னும் பிணி.இந்த பிணியை நீக்க வேண்டுமானால் அருள் உணவு தேவை.
இந்த பஞ்ச பூத உலகில் பொருள் உணவு மட்டுமே கிடைக்கும்.அருள் உணவு கிடைக்காது .பொருள் உணவு உண்ணுகின்ற வரையில் அருள் உணவு கிடைக்காது.
அருள் உணவு உண்ணாத வரையில் பிறப்பும் ,இறப்பும் வந்து கொண்டே இருக்கும்.
உயர்ந்த அறிவு படைத்த மனிதர்களுக்கு அருள் உணவு கிடைக்கும் வழியை வள்ளல்பெருமான் ஒருவரே அனுபவித்து வாழ்ந்து, மரணத்தை வென்று தெளிவாக வழியைக் காட்டி உள்ளார் .
அவர் காட்டிய தெளிவான பாதையை அறிந்து கொள்ளாமல்,கண்டது,,கேட்டது,கற்றது ,களித்தது எல்லாம் பற்றிக் கொண்டு மலமாகும் உணவை உட்கொண்டு வாழ்வதால் எந்த பயனும் இல்லை.
நான் யார் ?என்பதை அறிந்து,நாம் எங்கு இருந்து வந்தோம் என்பதை அறிந்து ,நம்மை அனுப்பியவர் யார் ? என்பதை அறிந்து ,எதற்க்காக அனுப்பினார் என்பதை அறிந்து ,உயிர் எப்படி வந்தது ? உடம்பு எப்படி வந்தது ? பசி எப்படி வந்தது ? பசிக்கு உணவு கொடுக்க வேண்டிய அவசியம் எப்படி வந்தது ?
உணவால் என்ன என்ன நன்மை தீமைகள் வருகின்றன ? எவ்வளவு நன்மை தீமைகள் வந்தாலும் இறுதியில் மரணம் ஏன்? வருகின்றது. மரணம் வந்தால் மீண்டும் நாம் எங்கு செல்கிறோம் ? போன்ற அளவிறந்த கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
பொருள் உணவு உண்ணுகின்ற வரையில் நமக்கு எந்த உண்மையும் அனுபவத்தால் அறிய முடியாது.மற்றவர்கள் சொல்லியதை கேட்டு படித்து அறிந்து விடை தெரியாமல் அலைந்து கொண்டே உள்ளோம் .
அருள் உணவு என்பது ஒன்று உண்டு,அதை அருட்பெருஞ்ஜோதி என்னும் உண்மைக் கடவுளிடம் இருந்து பெற வேண்டும் என்றார் வள்ளல்பெருமான்.அந்த அருள் உணவைக் கொடுக்கும் அதிகாரமும்,தகுதியும்.அந்த அருட்ஜோதி என்னும் கடவுளுக்கு மட்டுமே உண்டு.
வேறு எந்த கற்பனைக் கடவுள்களுக்கும் அந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்பதை உயர்ந்த அறிவு படைத்த மனித குலம் அறிந்து கொள்ளவேண்டும்.என்றார் .
எனவே அருள் உணவு பெறுவதற்கு அந்த உண்மையான கடவுளிடம் தொடர்பு கொள்ளவேண்டும்.தொடர்பு கொள்ளும் வழியைத்தான் வள்ளலார் எழுதிய திருஅருட்பா சொல்லுகின்றது.
திரு அருட்பாவை படித்து தெரிந்து கொள்வதற்கு முதலில் சுத்த சன்மார்க்கம் சொல்லும் ஒழுக்க நெறிமுறைகளை, கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்.அப்படி கடைபிடித்தால் பொருள் உணவை தடுத்தி நிறுத்தி அருள் உணவு அருட்பெருஞ் ஜோதி என்னும் உண்மைக்கடவுளால் கொடுக்கப்படும்.
அருள் உணவு உட்கொண்டால் மட்டுமே மரணம் என்னும் பெரும் பிணி நம்மை விட்டு விலகி விடும்.அந்த பிணி நீங்கினால் மட்டுமே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப வாழ்க்கையும்,பேரின்ப லாபமும் பேரின்ப சித்தியும் பெறமுடியும்
எனவே ஆன்மநேய சகோதரர்கள் பொருள் உணவை உட்கொள்ளாமல் அருள் உணவை உட்கொள்ளும் வழியை தெரிந்து அருள் உணவை உண்டு.அருள் தேகத்தைப் பெற்று மரணம் இல்லாமல் வாழ்வோம்.
அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ்ஜோதி ....அகவல்
ஆன்மநேயன்.ஈரோடு கதிர்வேல் . .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு