செவ்வாய், 20 ஜனவரி, 2015

வள்ளலார் கூறும் உணவு முறைகள் !

வள்ளலார் கூறும் ஆரோக்யத்திற்கு மற்றும் மரணமிலா பெருவாழ்விர்கான உணவுகள் 
==================================================
1.கிழங்கு வகைகள் உண்ணாமல் இருக்க வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்
=====================================
2. பழ வகைகள் உண்ணாதிருத்தல்வேண்டும். அவற்றில் பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் - இவை நேர்ந்தால் சிறிது கொள்ளுதல் கூடும். 
====================================
3.பழைய கறிகளைக்(இரவு சமைத்த உணவுகள் ) கொள்ளாதிருத்தல் வேண்டும்.
=========================================
4.பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். மிளகு சீரகம் அதிகமாகச் சேர்த்தல் வேண்டும்.
==========================================
5. கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
============================
6. எந்த வகையிலும் உப்பு(NO MORE SALT) மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு (LONG LIFE BODY)ஏதுவாம்.
=====================================
7.தாளிப்பில் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பக்ஷத்தில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவுங் கூடும். வெங்காயம் வெள்ளைப்பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும்.
===============================================
8.கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், கலியாணபூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் - இவைகள் பதார்த்தஞ் செய்தல் கூடும். இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் - இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்து கொள்ளலாம். மற்றவைகளை ஏகதேசத்தில் செய்து கொள்ளலாம்.
=======================================
9. வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளவுங் கூடும்.
============================================
10. சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளலாம்.
===============================================
11.புளியாரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று. கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை - இவைகளைப் பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும், புளியிட்டும், தனித்தும், கறிசெய்து கொள்ளக் கூடும். மற்றைக் கீரைகள் ஏகதேசத்தில் நேரில் சிறிது சேர்த்துக் கொள்ளவுங் கூடும்.
=======
====================================================
வள்ளலார் வாழ்வியலில் நின்று ஆரோகோமாகவும் பிறவி பிணி நீக்கியும் வாழ்வோம்
====================================================
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி



வள்ளலார் கூறும் உணவு முறைகள் தொடரும் ,,,,,,,,,

4 கருத்துகள்:

18 டிசம்பர், 2020 அன்று PM 10:21 க்கு, Blogger Unknown கூறியது…

பழம் வேண்டாம் என குறிப்பிடுவது வாழை பழத்தை மட்டும் தானே.

 
12 அக்டோபர், 2022 அன்று PM 8:36 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

No all fruits

 
20 செப்டம்பர், 2023 அன்று PM 3:25 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

ஏகதஏசம் என்றால் என்ன

 
25 செப்டம்பர், 2023 அன்று PM 7:43 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

use rarely

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு