வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ரமலான் பண்டிகை வாழ்த்துக்கள்.!

ரமலான் பண்டிகை வாழ்த்துக்கள்.

ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாம் சகோதரர்கள் சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் .
ரமலான் பண்டிகை என்பது நம்மை எல்லாம் படைத்த கடவுளுக்கு நன்றி சொல்லும் பண்டிகையாகும்.கடவுள் உயிர்களை எல்லாம் படைத்து ,அவைகள் யாவும் துன்பம்,துயரம்,அச்சம்,பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் ,என்பதற்காக கடுமையான விரதம் (நோம்பு ) இருந்து ரமலான் பண்டிகை கொண்டாடுகிறோம்.மிகவும் மகிழ்ச்சியான செயற்பாடுகள் ஆகும்.

அதே நேரத்தில் வாயில்லாத இறைவன் படைத்த உயிர்களை உயிர்களை கொன்று தின்பது ,மக்களுக்கு பிரியாணி செய்து பரிமாறுவது மிகவும் பாவச்செயல்களாகும் ,இறைவன் எந்த உயிர்களையும் கொலை செய்ய சொல்லவில்லை.நபிகள் அவர்களும் உயிர்களைக் கொன்று படையல் செய்யச் சொல்லவில்லை .

உயிர்களை நேசிக்க சொல்கிறார்.துன்பப்படும் உயிர்களுக்கு உபகாரம் செய்யச்சொல்கிறார் .இறைவனை இடைவிடாமல் தொழச்சொல்கிறார்.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க சொல்கிறார்.

இஸ்லாம் சகோதரர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் ,நபிகள் அவர்கள் எழுதிய குர்ரானை நன்கு படியுங்கள்.எந்த நேரத்தில் எந்தக் காலக்கட்டத்தில் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதை என்ற நோக்கத்தில் சொன்னார் என்பதை புரிந்து கொண்டால்,நமக்கு நன்கு விளங்கும்.

வள்ளலார் அவர்கள வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார்.எல்லாம் உயிர்களும் இறைவன் படைப்பு எந்த உயிர்களையும் கொலை செய்யும் உரிமை நமக்கு இல்லை.அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு தாவரங்கள் இறைவனால் படைக்கப் பட்டுள்ளது.

தாவரங்களும் உயிர்கள்தான் ,ஆனாலும் அதில் கிடைக்கும் இலை,பூ,காய் ,கணி,தானியங்கள் போன்ற உயிர் இல்லாத பொருள்களை உண்ணவேண்டும் என்கிறார்.அவை கொலை அல்ல என்கிறார்.அவைகள் யாவும் உயிர்களைக் காப்பாற்றும் உணவாகும் என்கிறார் .

அடியேன் சொல்வதை தவறாக எண்ணவேண்டாம் .எல்லோரும் எங்களுடைய சகோதரர்கள் என்ற ஆன்மநேய உரிமையுடன் இதைச்சொல்கிறேன். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

அனைருக்கும் ரமலான் வாழ்த்துக்கள் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லாநெறியே குவலையம் எல்லாம் ஓங்குக !
ஜீவ காருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல் !;---வள்ளலார்

ஆன்மநேயன்;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு