வியாழன், 8 ஆகஸ்ட், 2013

வள்ளலார் அழைக்கிறார் !ஆறாவது உலக சுத்த சன்மார்க்க மாநாடு !


அருட்பெருஞ் ஜோதி            அருட்பெருஞ் ஜோதி !
தனிப்பெருங் கருணை         அருட்பெருஞ் ஜோதி !



வள்ளலார் அழைக்கிறார் !ஆறாவது உலக சுத்த சன்மார்க்க மாநாடு ! 

எல்லாம் செயல் கூடும் என்னானை அம்பலத்தே 
எல்லாம் வல்லான் தனையே எத்து ! 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

''வள்ளலார் அழைக்கிறார் '' மலேசியா நாட்டில் ஆறாவது உலக சுத்த சன்மார்க்க மாநாடு ''வள்ளலார் வாழ்கிறார் ''என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.

உலக மக்களையும் உலக உயிர்களையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் நியதியின் படி வாழ வைக்க வேண்டும் என்ற,பெருங்கருணையோடு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆணைப்படி ,இந்த உலகிற்கு வருவிக்க உற்றவர்தான் அருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள்.

உயர்ந்த அறிவுடைய மனிதர்கள் அனைவரும் இறைவன் அருளைப் பெற்று பேரின்ப வாழ்வு என்னும்,மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ வைக்க வேண்டும் என்ற பெருங் கருணையோடு,உலகப் பொது நெறியான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற ஒரு தனிநெறியை தோற்றுவித்து உள்ளார்.

வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க அருள் நெறியை,சுத்த சன்மார்க்க மரபை,உலக மக்கள் அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடு ''வள்ளலார் அழைக்கிறார் ''என்ற தலைப்பின் கீழ் மலேசிய நாட்டில் ஆறாவது  உலக சுத்த சன்மார்க்க மாநாடு வருகிற ,
5--10--2013,  முதல் 6--10--2013,வரை இரண்டு நாட்கள் ,''கலா மண்டபம் பிரிக் பீல்ட்ஸ்'' என்ற மண்டபத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.

வள்ளல்பெருமான் காட்டிய அருள் நெறியை விளக்கும் மாநாட்டில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளப் பெற்று ஆன்ம லாபம் அடைய அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு ;--''வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் '' என்ற தலைப்பில் முழுமையான சுத்த சன்மார்க்க கருத்துக்களை தொகுத்து ... சுத்த சன்மார்க்க அருளாளர் ஈரோடு திரு ,செ, கதிர்வேலு அவர்கள் .எழுதிய நூலை,அருள் திரு ,டாகடர் லலிதா அவர்கள் ,அருள்திரு NCR, நாதன் அவர்கள் தலைமையில் மாநாட்டில் வெளியிடப்படுகிறது. அனைவரும் பெற்று படித்து அதன்படி வாழ்ந்து ஆண்டவரின் அருளைப் பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.

இடம் ;--கலா மண்டபம் பிரிக்பீல்ட்ஸ் / KALA MANDAPAM BRICKFIELDS,
தேதி ;---5--10--2013,சனிக்கிழமை காலை ,7.00,மணி முதல் இரவு 10,00,மணி வரையும் .
                6--10--2013,ஞாயிற்றுக் கிழமை காலை ,6,00,மணி முதல் மாலை 7,00.மணி வரையும் நடைபெற உல்லது. மேலும் இரண்டு நாட்களிலும் அருட்பா இன்னிசை நடைபெறும்.

நமது மலேசிய நாட்டு அறிஞர்களும்,தமிழ்த் திருநாட்டின் சன்மார்க்க சான்றோர்களும்,இலங்கை,சிங்கப்பூர் ,பியன்மார்,பிரான்ஸ் நாட்டு சான்றோர்களும் வந்து அளிக்கும் அருள் விருந்தை சுவைக்க அன்புடன் அழைக்கிறோம். 

அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர் ! ,இது மேலேறும் வீதி வாரீர் ! சுற்றத்துடன் வாரீர் ! நண்பர்களுடன் வாரீர்.! வாரீர் !வாரீர் !

வருங்காலம் பொற்காலம் ,சுத்த சன்மார்க்க காலம்,சிந்திப்பீர் செயல்படுவீர் .

அன்பெனும் பிடியுள் ;--

Pusat Jagaan Vallalar 
No,14,Lengkok Cumarasami
4th mile,Jalan lpoh,51200 Kuala Lumpur.
Contact;Mr,NCR Nathan ; 012-2182111
Dr,Lalita Veeriah ; 012-3160470
Dr,Dinakren ; 012-639 1511 

மகத்தான அறிய வாய்ப்பு ,திரளாக வாருங்கள் !முன் கூட்டியே இருக்கைகளுக்கு... குறைந்த கட்டணம் ,ரி ம்.100,00,பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள்.

நன்றி வாழ்த்துக்கள் ,வந்தனம் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு