சனி, 15 ஜூன், 2013

கடவுள் எங்கே ?

கடவுள் எங்கே ?

நாம் துன்பம் வரும்போது கடவுளைத் தேடுகிறோம்.அந்தக் கடவுள் புறத்தில் உள்ள ஆலயங்களில் மசூதிகளில்,சர்ச்சுகளில் போன்ற இடங்களில் இருபதாக எண்ணி அங்கு சென்று வழிபடுகிறோம் தோத்திரம் செய்கிறோம்.அங்கு கடவுள் இருக்கிறாரா?இல்லையா ?என்பதைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை.அங்கு ஏதோ ஒரு சக்தி இருப்பதாக எண்ணி முறையிடுகிறோம்.இவை எல்லாம் நாம் முன்னோர்கள் காட்டிய வழிமுறைகளாகும்.அதையே நாம் எதையும் சிந்திக்காமல் பின்பற்றி வருகிறோம்.

நமக்கு நம் உடம்பில் தன்னைத்தானே இயங்கும் ,இயக்கிக் கொண்டு இருக்கும் ஆன்மா என்னும் உள் ஒளியின் ஆற்றலை சக்தியை நாம் அறிந்து கொள்வதில்லை.அவற்றை அறிந்து கொள்வதற்கு அறிவு என்னும் மிக உயர்ந்த கருவி ஆன்மாவில் பதிய வைக்கப் பட்டு உள்ளது.அது அணு சக்தியாக மின்காந்த அலைகளாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அந்த அறிவு என்னும் அணு ஆற்றலை, மனம் என்னும் புறக்கருவி உள்ளே தொடர்பு கொள்ளாமல்,வெளியே தொடர்பு கொண்டு உள்ளன் .மனதை வெளியே தொடர்பு கொள்ளாமல்.ஆன்மா என்னும் உள் ஒளியை தொடர்பு கொண்டால் அறிவு என்னும் அணு ஆற்றல் உண்மையான கடவுள் யார் என்பதை தெளிவுப் படுத்தும்.

ஆதலால் புறத்திலே கடவுளைத் தேடாமல் அகத்திலே உள்ள ஆன்மா என்னும் ஒளியைத் தொடர்பு கொண்டால் ,அவை துன்பங்களை தீர்க்கும் வழியைக் காட்டுவிடும்.அகத்திலே உள்ள ஆன்மாதான் கடவுளின் துகளாகும் .அதை அறிந்து கொள்ள அறிவு என்னும் கருவியைப் பயன்படுத்த வேண்டும்.அந்த அறிவின் வழியாக ஆன்மாவை அறிந்து அதில் உள்ள அருளைப் பெற்றால் துன்பங்கள் யாவும் தொலைந்து விடும்.

வள்ளலார் பதிவு செய்துள்ளதைப் பாருங்கள்.

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு 
அனுபவம் ஆகின்றது என்னடித்தாயே 
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் 
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே.

அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு 
அனுபவம் ஆகின்றது என்னடித்தாயே 
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் 
திருநட இன்பம் என்று அறியாயோ மகளே.

என்பதை மிகத்தெளிவாக மக்களுக்கு போதித்து உள்ளார்.புறத்தில் பேசாத இயங்கத சிலைகளில் கடவுள் இல்லை .எல்லா உயிர்களிலும் கடவுள் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் .அதலால் உயிர்களை நேசித்தால் கருணை புரிந்தால் அந்த உயிர்களின் உள் இருக்கும் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் .அந்த உயிர்களின் மகிழ்ச்சி அணு ஆற்றலாக வெளியே வந்து ,கருணை செயதவர்களின் அறிவையும் ஆன்மாவையும் திறக்கும் .அதுவே கடவுள் கடவுள் வழிபாடாகும்.அதிவே நமது துன்பத்தைப் போக்கும் சிறந்த வழியாகும்.

ஆன்மநேயன்.கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு