செவ்வாய், 30 ஜூலை, 2013

வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் !


அருட்பெருஞ் ஜோதி !     அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங் கருணை !    அருட்பெருஞ்ஜோதி !  


வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் !

ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம் !

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள்,உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால்,இந்த உலகிற்கு வருவிக்க உற்றவராகும்.உலக மக்கள் அனைவரும் உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடித்து பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் எனற பெருங்கருணை யோடு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூரில் 1872,ஆம் ஆண்டு தோற்று வைத்துள்ளார்.அவை உலகப்  பொது நெறியாகும்.

உலக மக்கள் அனைவரும் உண்மையானக் கடவுளைக் கண்டு வழிபட வேண்டும் என்ற பெருங் கருணையோடு வடலூர் பெருவெளியில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை ''யை எண்கோண வடிவத்தில் அமைத்து ,அதன் மத்தியில் ''அருட்பெருஞ்ஜோதி ''என்னும் ''ஒளியே கடவுள்'' என்பதை அறிந்து கொள்ள ''தீபத்தை'' உண்மையின் விளக்கமாக வைத்துள்ளார்.

இறைவன் அருளைப் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ள '' ''திருஅருட்பா'' என்னும் ஆறு திருமுறைகள்,எழுதி வைத்துள்ளார் .அதில் ஆறாம திருமுறையில்,முடிந்த முடிவாக சன்மார்க்க கொள்கைகளையும்,சன்மார்க்க ஒழுக்க நெறிகளையும் ,மனிதன் மரணத்தை வெல்லும் அருள் வல்லபத்தையும் எழுதி வைத்துள்ளார்.

அதில் உள்ள முக்கிய உண்மைக் கருத்துக்களை ,மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வேண்டும் எனற பெருங் கருணையோடு ''வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் " என்ற தலைப்பில் இச்சிறிய நூலை.''திருஅருட்பா ஆராச்சி மையத்தின் ''சார்பாக முதல் நூலாக,முதல் பதிப்பாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.அனைவரும் பெற்று படித்து,பயன் அடைந்து இறைவன் அருளைப்பெற்று பேரின்ப லாபம் அடைய விரும்புகிறேன்.

இச்சிறிய நூல் விலையில்லா ,விலை மதிப்பு இல்லா நூலாகும்.அவரவர்கள் விரும்பிய பொருள் உதவிச் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

மலேசிய நாட்டில்;-- ,அருள்திரு டாக்டர் லலிதா அவர்கள் தலைமையில் நடைபெறும்,ஆறாவது உலக சுத்த சன்மார்க்க மாநாட்டில் ,''வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் ''என்னும் இச்சிறிய நூல வெளியிடப்படுகிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் கிடைக்கும் பொருளைக் கொண்டு ''வள்ளலார் வாழ்கிறார் ''என்ற தலைப்பில் அறிய பெரிய உண்மைகளைக் கொண்டு, அடுத்த நூல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையோடு வெளிவர இருக்கின்றன..என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்மநேயன் அன்புடன்;---

 செ,கதிர்வேலு.
''திருஅருட்பா ஆராய்சசி மையம் ''
108,c,நந்தா இல்லம்,
வையாபுரி நகர் ,வள்ளலார் தெரு,
46, புதூர் அஞ்சல்.
ஈரோடு ,..638002,
தமிழ் நாடு ,..இந்தியா .
செல்--9865939896,..போன்,0424 2401402,...



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு