செவ்வாய், 25 ஜூன், 2013

பொருள் சிறந்ததா ?அருள் சிறந்ததா !

பொருள் சிறந்ததா ?அருள் சிறந்ததா !

பொருள் இந்த பஞ்ச பூத உலகத்தில் கிடைப்பது.மற்ற உயிர்களின் வழியாகவும் பல உடம்பின் வழியாகவும்,பல அணுக்களின் வழியாகவும் கிடைப்பதாகும்.இந்தப் பொருள் நம்முடைய உயிரையும் உடம்பையும் அழித்து,பின் மரணம் வந்து விடும்.மறுபடியும் உயிர் வேறு ஒரு உடம்பு எடுத்து தன்னுடைய வினைக்கு தகுந்தாற் போல் வாழ்ந்து வாழ்ந்து அழிந்து கொண்டே இருக்கும். இந்த உலகம் என்னும் எல்லைக் கோட்டிற்கு வெளியே செல்லமுடியாது இதுவே பொருளின் தன்மையாகும்.

அருள் என்பது நம்முடைய ஆன்மா என்னும் உள் ஒளியில் ஆண்டவரால் பதிய வைக்கப் பட்டுள்ளது.இதை எடுக்க வேண்டுமானால் உலக போகத்தில் உள்ள மனதை அடக்கி,ஆன்மா இருக்கும் இடமான சிற்சபையில் பதிய வைக்க வேண்டும்.அதனுடன் இடைவிடாமல் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்.அப்படி மனதை ஆன்மாவில் பதிய வைத்தால் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் விலகி,ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.அதுதான் அருள் என்பதாகும் ,

அந்த அருளை யார் புசிக்கின்றார்களோ அவர்களுக்கு மரணம் இல்லை அழிவு இல்லை ,அவர்கள் தேகம் ஒளி உடம்பாக மாறிவிடும் .அவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல்,எந்த துணைக் கருவிகளும் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.பல கோடி அண்டங்களுக்கும் ,பலகோடி உலகங்களுக்கும் செல்லலாம்.அவர்கள்தான் கடவுளைக் கண்டவர்கள்.அவர்களை எவரும் எந்த சக்திகளும் அழிக்க முடியாது.

இதுவே பொருளுக்கும் அருளுக்கும் உண்டான வித்தியாசமாகும்.உங்களுக்கு எது தேவையோ அதை பின் பற்றுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு