செவ்வாய், 18 ஜூன், 2013

அண்டமும் பிண்டமும் கடவுளும் !

அண்டமும் பிண்டமும் கடவுளும் !

அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள் எல்லாம் பொருள்கள்
ஆன வெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற நிறைந்தே
கொண்டவெலாங் கொண்ட வெலாங்  கொண்டு கொண்டு மேலும்
கொள்வதற்கே இடங் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டமெலாங் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவுங்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண்டகு சிற்றம்பலத்தே யெல்லாம் வல்லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்
கிளத்திடு மெய்ச் சாதனமாம் அளவை அறிவு அளவை
விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு நெடுங்காலம்
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே
அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்திடக் கண்டாரேல்
அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார் இலையே
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன்
சொன்ன வெளிவரை யேனும் துணித்து அளக்கப் படுமோ !

மேலே சொன்ன பாடல்கள் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள்.!

நாம் வாழும் அண்டம் போல் பல கோடி அண்டங்கள் உள்ளன .அதில் உயிர்கள், உயிர்கள் வாழும் உடம்புகள்,அதற்கு தேவையான பொருள்கள்,அதற்கு உண்டான இடங்கள்,எல்லாம் இடைவெளி இல்லாமல் நிறைந்து கொண்டும் மேலும் மேலும் விரிந்து கொண்டும்,இடம் கொடுத்துக் கொண்டும் சலிப்பு இல்லாமல் கடந்து நின்றே செயல் பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு மெய்ப் பொருள் உண்டு.அது பலகோடி அண்டங்களிலும் பலகோடி வெளிகளில் உள்ள  எல்லா அணுக்களிலும், உள் இருந்து செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றது.அது இயங்கும் இயக்கம் இடமானது  அருள் பெரு வெளியில்,எல்லா அண்டங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு செயல்படும் சிற்றம்பலம் என்னும் இடத்தில் எல்லாம் வல்லவராய் ,ஓங்கி இடைவிடாது செயலாற்றிக் கொண்டு இருக்கும் தனிக் கடவுள் ஒருவரே !
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் ஒளிக் கடவுளாகும்.

மேலும் அந்த உண்மைக் கடவுளை அறிந்து கொள்ள,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் போன்ற மறைகளை இயற்றிய அருளாளர்கள் எல்லாம் அவரவர்களுக்கு கிடைத்த  அருளைக் கொண்டு,உண்மையான இறைவன் யார் என்பதை அறிந்து கொள்ள நெடுங்காலம் முயற்சி செய்தும்,அளந்தும் அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை,மேலும் அறிவியல்,விஞ்ஞானம்,வேதியல் போன்ற ஆராய்ச்சி யாளர்கள்,அணு ஆராய்ச்சியைக் கொண்டு அளந்து அளந்து பார்த்தும்,அவர்களது அளக்கும் கருவிகள் எல்லாம் தேய்ந்த்தே தவிர ஒருவரும் அளவை கண்டு கொள்ள வில்லை,என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்துகிறார்.நான் சொல்லிய சிறு குறிப்பிட்ட அளவையாவது உங்களால் அறிந்து கொள்ள முடியுமா என்றும் கேட்கின்றார்.

மனிதனாக பிறந்தவர்கள்  மட்டும் அறிந்து கொள்ள முடியும்,அந்த இடத்திற்கு செல்லமுடியும்.வள்ளலாரைப் போல் உலகப் பற்று இல்லாமல் கருணையே வடிவமாக வாழ்ந்தால் இறை உண்மையை அறிந்து கொள்ளலாம்.மரணத்தை வென்றவர்களால் தான் உலக உண்மையை அறிந்துகொள்ள முடியும் .பஞ்ச பூத உடம்பும்,அதனால் உண்டாக்கும் உயிருடன் வாழ்பவர்களுக்கு உண்மை விளங்காது,ஆன்மாவின் தன்மைக்கு தன்னை மாற்றிக் கொண்டு ஒளி உடம்பாக வாழ்பவர்கள் மட்டுமே அந்த இறை ஒளியை,உண்மையைக்  காணமுடியும்.என்கிறார் வள்ளல் பெருமான் அவர்கள்.

ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க
ஞான அமுதம் எனக்கு நல்கியதே --வானப்
பொருட் பெருஞ்ஜோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் ஜோதி யது,!

என்னும் பாடல் வாயிலாக தெரியப் படுத்துகிறார் .

ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு