வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுதந்திரம் கிடைத்தது எப்படி !

சுதந்திரம் கிடைத்தது எப்படி !

உலக நாடுகள் எல்லாம் மனிதாபமுள்ள  இயற்கை குணங்கள் இல்லாமல் ,மக்களை அழித்து மற்றைய நாட்டைப் பிடித்து ஆட்சி செய்யும் அதிகார வெறியர்களாக இருந்தார்கள்.இதற்கு அடிப்படைக் காரணம்,ஆண்டவரைப் பற்றிப் பேசும் சாதிகள்,மதங்கள்,சமயங்களாகும்.ஒவ்வொரு மதங்களும் அனைத்து நாட்டையும்,நாட்டு மக்களையும் அடிமைப் படுத்திக் தங்களுடைய மதக் கொளகைகளை மக்கள் மனதிலே விதைக்க வேண்டும் எனற வெறிக் கொண்டு,செயல்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நம்முடைய இந்தியாவில் உள்ள மதக் கொள்கைகள் மக்களுக்கு உண்டான நன்மைகள் செய்யாமல் ,மதம் என்ற போர்வையில் இருந்த சந்நியாசிகள் ,குருமார்கள்,அருளாளர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சுயநலத்திற்காக மதத்தை பயன் படுத்தியதால் ,மக்கள் வறுமையில் உண்ண உணவு இல்லாமலும்,உடுக்க உடை இல்லாமலும்..இருக்க இடமில்லாமலும்,வாழ்வதற்கு வசதி இல்லாமலும் துன்பபட்டுக் கொண்டு இருந்தார்கள் .

இந்தியாவின் ஆன்மீகக் கொள்கைகள் மக்களுக்கு நன்மை செய்யவில்லை எனற ரகசியத்தை உணர்ந்து ,மக்களுக்கு நன்மை செய்வது போல் ஆங்கிலேயர்கள் .தங்களுடைய மதத்தை இந்தியாவிற்கு வந்து ,மக்கள் மனதில் பதிய வைத்து, நாட்டைப் பிடித்து விடலாம்.எனற எண்ணத்தால் .இந்தியாவிற்கு வியாபாரம் செய்யும் நோக்கத்தில் வந்து நாட்டையே பிடித்து விட்டார்கள்.இதேபோலத்தான் நம்முடைய நாட்டை,இஸ்லாம் மதத்தை சேர்ந்த முகலாய மன்னர்களும்,குறுநில மன்னர்களும் நாட்டைப் பிடித்து பலநூறு ஆண்டுகள் ஆட்சி செய்து மக்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டு இருந்தார்கள் .

இன்றுவரை மனிதன் நாட்டை ஆட்சி செய்யவில்லை மதங்கள்தான் நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறன்றன.எந்த நாட்டை ஆளுபவனாக இருந்தாலும், ஏதாவது ஒரு மதத்தை சேர்ந்தவராகத் தான் இருக்க முடியும்.அவன் மத வெறிப் பிடித்தவனாகத்தான்  இருக்க முடியும்.இன்றுவரை மதவெறியர்களின் ஆட்டம் குறைந்தபாடில்லை.

ஆனால் அனைத்து மதங்களும் ஆண்டவரைப் பற்றித்தான் பேசுகின்றன.ஆண்டவர் யார் என்பதே தெரியாது அவரவர்கள் ஒவ்வொரு  கடவுளைப் பற்றி பேசுகின்றன.உங்கள் கடவுள் பெரியவர் ,எங்கள் கடவுள் பெரியவர் என்றும் கடவுள்களிலே வித்தியாசம் காட்டி,சண்டையிட்டு போரிட்டு,அழிந்து  வீண் போய் கொண்டு இருக்கின்றார்கள்.

உலக நாடுகளின் கடவுள் கொள்கைகளைப் பார்த்தால் ஒட்டுமொத்தமாகக் கற்பனைக் கடவுள்களையே மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இதற்கு அடிப்படைக் காரணம் மதத்தை தோற்றுவித்த அருளாளர்கள்,அவர்கள் எதோ ஒன்றைப் பார்த்து இதுதான் கடவுள் என்றும் ,அந்த மதத்திற்கு உண்டான சில அற்பத்தனமான கொள்கைகளை மக்கள் மனிதிலே விதைத்து விட்டார்கள்.அதையும் உண்மை என்று நம்பி அந்தந்த மதத்தின் கொள்கைகளைப் பிடித்துக் கொண்டு அவற்றை பின்பற்றி வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

இந்த நிலைப்பாடு மனிதனுக்கு அறிவு தோன்றிய காலத்தில் இருந்தே நடைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

உண்மையானக் கடவுளை எப்போதுதான் மக்கள் தெரிந்து கொண்டு வாழ்வார்கள்.என்ற வேதனை கடவுளுக்கே இருந்தது.

இந்த உலகையும் உலக மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணங் கொண்டு இறைவனே ! இந்த உலகத்திற்கு பக்குவமுள்ள ஓர் ஆன்மாவை அனுப்பி வைக்கிறார் , அந்த ஆன்மாதான் இராமலிங்கம் எனற பெயர்தாங்கி ,தமிழ் நாட்டிலே உள்ள மருதூரில் 1823,ஆம் ஆண்டு பிறந்தார் .பின் அருட்பிரகாச வள்ளலார் என்ற அருள் பெயர் தாங்கி உலக மக்களுக்கு உண்மையான கடவுளை அறிமுகப்படுத்தி உள்ளார் .

அந்த உண்மையான கடவுள்தான் ,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்பவராகும்.உலக மக்கள் யாவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு சாதி,சமயம்,மதம் அற்ற ஒரு பொதுக் கொள்கையை மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.அந்தக் கொள்கைதான் '' ஆன்மநேய ஒருமைப்பாடு ''என்னும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' எனற ஒரு அமைப்பை அமைத்துள்ளார் ,அதன் வாயிலாக அனைத்து மக்களும் உண்மையானக் கடவுளை அறிந்து சாதி சமயம்,மதம் என்ற பிடியில் இருந்து விலகி ஒழுக்க நெறியோடு வாழ வேண்டும் என்பதை போதித்தார்.

அவருடைய கொள்கைகளை பின்பற்றியவர்தான் நமது தேசப்பிதா என்னும் ''மகாத்மா காந்தி''ஆவார்கள்..அதனால்தான் ,சாதாரண ஆன்மா ,மகாஆத்மா என்று பெயர் பெற்றது.

சாதி,சமய மதம் என்ற பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் எனற எண்ணங் கொண்டு ''சுதந்திரம்'' என்ற கருவியை தன்னுடைய ஆன்மாவில் இருந்து எடுத்து மக்களுக்கு போதித்தார்.மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பொதுவான சத்தியம்,நேர்மை அகிம்சை,கொல்லாமைப் போன்ற ஒழுக்கமான கொள்கைகளை மக்களுக்கு போதித்தார்.அதேபோல் தானும் வாழ்ந்து காட்டினார்.

மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமானால் ஆங்கிலேய அந்நியர்களை நம்முடைய நாட்டைவிட்டு வெளியேற்றி தனிமனித சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்பதை தம்முடைய முழு மூச்சாக செயல் பட்டார் .மக்கள்..கத்தி இன்றி ,ரத்தம் இன்றி,அகிம்சை என்ற சத்தியத்தின் வழியிலே சுதந்திரம் பெற்று மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அரும்பாடு பட்டார்.

இருப்பினும் நம்முடைய நாட்டிலே பல்லாயிரம் உயிர்களின் தியாகத்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.பல தியாகச் செம்மல்களால் கிடைத்ததுதான் நமது சுதந்திரம்.ஒவ்வொரு தனிமனிதனும் சுதந்திரமாக வாழ வேண்டும் ,சாதி,சமயம்,மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் வாழ்வதுதான் சுதந்திரம்.எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.இல்லாமை என்பது இல்லாமையாக இருக்க வேண்டும்.என்பதுதான் சுதந்திரம்.

பல தியாகிகளால் வாங்கிக் கொடுத்த சுதந்த்தை பாது காப்பது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும்..இன்று உலகம் எங்கும் சுதந்திர தினவிழா கொண்டாடப் படுகிறது.அரசு பள்ளிகளிலும் அரசு அலுவகங்களிலும் ,அரசு விழாவாக எடுக்கப் படுகின்றன.ஒரு சடங்காகக் கொண்டாடப் படுகின்றன்.
அதை மாற்றி ஒவ்வொரு இல்லங்களிலும் சுதந்திர தின விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

உலக நாடுகளும், நமது நாடும், நாட்டு மக்களும்,பசி பட்டினி வறுமை,வேலை இல்லாத் திட்டாங்கள் இல்லாமல்,அனைத்தும் பெற்று மக்கள் சுதந்திரமாக  மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் ,எக்காலத்தும் மக்கள் பயம் இல்லாமல் வாழ வேண்டும் அதுவே மக்களுக்கு கிடைத்த சுதந்திரம்.தனிமனித ஒழுக்கமுடன் வாழ்ந்து சுதந்தரத்தை பாது காக்க வேண்டும் .உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழக !

உங்கள் ஆன்மநேயன்;--கதிர்வேலு.  

  

   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு