திங்கள், 17 செப்டம்பர், 2012

அறிவு எங்கே இருக்கிறது !


அறிவு எங்கே இருக்கிறது !

அறிவு என்பது நமது ஆன்மாவில் உள்ளது !அவைதான் உண்மையான அறிவாகும், நமது உடம்பில் நான்கு அறிவு உள்ளது ....அதில் பொய்யான அறிவு என்றும் ....உண்மையான அறிவும் இரண்டு கூறுகளாக உள்ளது .

இந்திரிய அறிவு --கரண அறிவு ,--ஜீவ அறிவு ,--ஆன்ம அறிவு .என நான்கு அறிவும், நான்கு விதமான வேலை செய்கின்றன.

இதில் இந்திரியங்கள் என்னும் கண் --காது --மூக்கு--வாய் --உடம்பு ,இவைகளால் அறிவது இந்திரிய அறிவு என்பதாகும் . ,

கரணங்கள் என்னும், மனம்--புத்தி--சித்தம் --அகங்காரம் ,இவைகளால் அறிவது கரண அறிவு என்பதாகும் ,

ஜீவன் என்னும் உயிரால் அறிவது ஜீவ அறிவு என்பதாகும்.

 ஆன்மா என்னும் உள் ஒளியால் அறிவது ஆன்ம அறிவு என்பதாகும்.

இதில் எது உண்மையான அறிவு ? எது பொய்யான அறிவு ? என்பதைப் பார்ப்போம் .

இந்திரியங்களாலும்,கரணங்களாலும் அறிவது பொய்யான தோற்றங்களாகும்.பொய்யான தோற்றங்களை அறிவதால் ..அதற்கு பொய் அறிவு என்பதாகும் .

ஜீவனும்... ஆன்மாவும் அறிவது உண்மையான தோற்றங்களாகும்.ஆதலால் அவற்றிக்கு உண்மையை அறியும் அறிவு என்பதாகும் .

உயிராலும்,... ஆன்மாவாலும் ..அறிவதுதான் உண்மையான அறிவாகும் .இதை அறிந்தவர்கள் சுத்த ஞானிகள் ....ஆதலால்தான் சுத்த ஞானிகள் பின் செல்கிறோம்.

நம்முடைய தலைப் பாகத்தில் மூலையின் மத்தியில்..கண்களுக்கு தெரியாமல், வட்டம் போன்று... ஒரு சக்கரம் சுற்றிக் கொண்டு உள்ளது ...அதன் உள்ளே நான்கு பாகமாக நான்கு வட்டங்கள் சுற்றிக் கொண்டு உள்ளன.

அவை.. அகம் ...அகப்புறம் என்றும் ...புறம் ..புறப்புறம் என்றும் நான்கு வட்டங்களுக்கும் நான்கு பெயர் உள்ளன .

இந்திரியங்கள் என்னும் ,கண்..காது...மூக்கு...வாய் ...மெய் (உடம்பு )என்னும் புற உறுப்புகளால் அறிந்து உணர்ந்து அனுபவிப்பது எல்லாம் ,புறப்புறம் என்னும் வட்டத்திற்குள் பதிவாகிக் கொண்டு இருக்கும்...

கரணங்கள் என்னும் ..மனம்...புத்தி ...சித்தம் ...அகங்காரம் என்னும் கருவிகளால் அறிந்து ,உணர்ந்து ,தெரிந்து அனுபவிப்பது எல்லாம் ...புறம் ..என்னும் வட்டத்தில் பதிவாகிக் கொண்டு இருக்கும் .

ஜீவன் என்னும் உயிரால்,அறிந்து ,உணர்ந்து ,தெரிந்து,தெளிந்து அனுபவிப்பது எல்லாம்,..அகப்புறம் ...என்னும் வட்டத்திற்குள் பதிவாகிக் கொண்டே இருக்கும் .

ஆன்மா என்னும் ...உள் ஒளியால் ...அறிந்து ,உணர்ந்து,தெரிந்து ,தெளிந்து ..மெய் அறிவால்..மெய் அருளால் ..அனுபவிக்கின்ற உண்மைகள் யாவும்,--அகம் ..என்னும் உள் வட்டத்தில் பதிவாகிக் கொண்டே இருக்கும் .

உண்மை அறிவு !பொய் அறிவு !

இந்திரியங்களாலும் ,..கரணங்களாலும் ,உலக போகங்களை அனுபவிப்பது ...பொய்யான அனுபவங்களாகும் ,அந்த அனுபவங்களால் தோன்றும் அறிவு ,பொய்யான அறிவாகும் .

ஜீவனாலும் ...ஆன்மா என்னும் உள் ஒளியாலும் ..இறைவன் என்னும் கடவுள் அருளைப் பெற்று அனுபவித்து வாழ்வதாகும ...அதனால் அறியும் அறிவு உண்மை அறிவாகும் .

அதற்கு மேல் உண்டாகும் அறிவு ..அருள் அறிவாகும் அதுவே கடவுள் அறிவாகும் .அதுவே பேருண்மை அறிவாகும் .

அறிவை வெளியே எங்கும் தேட வேண்டியதில்லை .அவை நம்முடைய உடம்பிலே உள்ளன் .நம்முடைய தலைப் பாகத்தில் ..உச்சிக்கும் கீழே ..உள் நாக்கிற்கு மேலே மூளையின் மத்தியில் ஆன்மா என்னும் உள் ஒளி உள்ளது .அங்கு தான் உண்மையான அறிவை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளது .அதை இடைவிடாது தொடர்பு கொண்டால் உண்மையான அறிவு வெளிப்படும் .நம்முடைய உடம்பை இயக்கம் ஆற்றல் {சக்தி }அங்குதான் உள்ளது .

இந்திரியம் --கரணம்-- ,ஜீவன்-- ,ஆன்மா என்னும் ஒளியின் தொடர்பினால்தான் நம்முடைய உடம்பு இயங்கிக் கொண்டு உள்ளது இந்திரியங்களையும் ..கரணங்களையும் .வெளியே செல்ல வொட்டாமல் கட்டுபடுத்தி ...ஜீவ உணர்வால், ஆன்மாவின் தொடபு கொண்டால் உண்மை அறிவு இருக்கும் இடமும் ,இயங்கும் இடமும் தெரிந்து கொள்ளலாம் .

இந்திரிய அறிவுக்கும் ..மன அறிவுக்கும் ... ஆன்மா கட்டுப்பட்டால்,தவறான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும் .ஆன்ம அறிவுக்கு மனம் கட்டுப்பட்டால் உண்மையான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும் .இதை உணர்ந்து உண்மையான ஆன்ம அறிவை தெரிந்து அறிந்து அதன் வழி சென்றால் மகிழ்ச்சியுடன் வாழலாம் .உண்மை அறிவை தெரிந்து கொள்வோம் உண்மையுடன் வாழ்வோம் .

ஆன்மாவை அறிந்து கொண்டால் ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் ஒருமைத் தெரியும் .ஒருமை என்பது ,எல்லா உயிர்களும் இறைவன் இருக்கும் ஆலயம் என்பது தெளிவாகத் தெரியும்.எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உயிர்கள் என்பது புலனாகும். அந்த ஒருமை அறிந்தவர் யாரோ அவரே உலக உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். அதுவே உண்மை அறிவாகும் .

ஆன்மீகம் என்பது ஆன்மாவை அறிந்து கொள்வதே ஆன்மீகமாகும் .அதுவே  உண்மையான ஆன்மீகமாகும் ! அதுவே உண்மையான அறிவாகும் !உண்மை அறிவே அறிவாகும் .

மனிதனுக்கு ஆறு அறிவு என்பதும் ஆறாவது அறிவு என்பதும் பொய்யான கருத்துக்களாகும் .மனிதன் ஆறாவது பிறவி என்பதும் தவறான கருத்தாகும்.மனிதன் ஏழாவது பிறவியாகும் .

அறிவு என்பது.... உண்மை அறிவு ...பொய் அறிவு என இரண்டு வகைப்படும் .உண்மையை அறிந்து கொள்வது உண்மை அறிவு !பொய்யை அறிந்து கொள்வது பொய்யான அறிவு என்பதாகும் .இந்த உலகத்தை அறிந்து கொள்வதும் .உலகத்தில் உள்ள பொருள்களையும் அறிந்து கொள்வதும் பொய்யான அறிவாகும் .

இந்த உலகத்தையும் ,உலகத்தில் உள்ள பொருள்களையும் ,உலகத்தில் உள்ள உயிர்களையும் ,உயிர்களின் தோற்றங்களையும் ,மாற்றங்களையும், உலகத்தை இயக்கும் அருள் என்னும் மெய்ப் பொருளையும் (கடவுளையும் )அறிந்து கொள்வது உண்மை அறிவாகும் .இவற்றை அறிந்தவர் யாரோ !அவரே  கடவுளாவார் !

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் மாகின்றது என்னடித் தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !

அருளாலே அருளிறை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவ மாகின்ற என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பம் என்று அறியாயோ மகளே !

அறிவைக் கொண்டு அறிவை அறிகின்ற பொழுது அனுபவம் தோன்றும் .அனுபவத்தால் அருள் என்னும் உருவம் தெரியும் .

அருள் என்னும் அருளைக் கொண்டு அறிகின்ற பொழுது, அருளைத் தரும்... இறைவனுடைய திருநடனம் புரியும் உண்மைத் தெரியும்.அதுவே பேரின்பமாகும் . பேரின்பத்தை அடைவதே மனிதப் பிறப்பின் கொள்கையாகும்.மனிதப் பிறப்பின் லஷ்ணம்,லஷ்யமாகும் .

இதுவே மரணம் இல்லா பெருவாழ்வாகும் .மரணம் இல்லாமல் வாழ்வதே மனித வாழ்க்கையாகும் .இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும். மனிதனும் கடவுளாகலாம் என்பதாகும்.

உண்மை அறிவைக் கொண்டு உண்மையான அருளைப் பெற்று வாழ்வதே உண்மையான அறிவாகும் .உண்மை அறிவு நம்முடைய சிரசின் (தலைப்பாகத்தில் )சிற்சபை என்னும் இடத்தில் உள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளது .அவற்றை தொடர்பு கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .

ஆன்மநேய அன்புடைய உங்கள் தோழன்;--கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு