ஞாயிறு, 29 ஜூலை, 2012

பக்தி ,தவம் ,தியானம்,யோகம் வழிபாடு தேவையா ?


பக்தி ,தவம் ,தியானம்,யோகம் வழிபாடு தேவையா ?

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் ,நாம் கடவுளைக் கானபதற்கோ! அறிந்து கொள்வதற்கோ! எதையும் தேடுவதில்லை --நமக்கு துன்பம் துயரம்,அச்சம்,பயம்,வரும்போதுதான் அதைத் தவிர்த்துக் கொள்ள ஏதோ ஒன்றை தேடுகிறோம் நாடுகிறோம்.--அந்த நிலையில் உள்ள மக்களை தன் வசமாக்க,வசப்படுத்த,  பல அமைப்புகள் இன்று நிறைய உள்ளது, அவர்கள் இலவசமாக எதையும் சொல்லித் தருவதில்லை பணம் பெற்றுக் கொண்டு ஏதோ ஒன்றை சொல்லித் தருகிறார்கள்.அவர்களுக்கும் அதன் பயன் என்னவென்று தெரியாது ,அவர்களால் கேட்பவர்களுக்கும் எந்த பயனும் தெரியாது.இன்று பணம் சம்பாதிக்கும் கூட்டம்-- ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

மக்கள் அறியாமையில் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை அறியாமையில் இருந்து மீட்க வேண்டும் , திருத்த வேண்டும் என்றும் என்பதற்காகத்தான் வள்ளலார் இந்த உலகத்திற்கு --இறைவனால் வருவிக்க உற்றவராகும்.மக்களை கவ்விக் கொண்டு இருந்த மூட நம்பிக்கைகளையும் --சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கற்பனைக் கதைகளையும் குழித் தோண்டி புதைக்க வேண்டும் என்றார் .அதை வாயால் சொன்னால் மக்களுக்கு தெரியாது என்பதால் --திருஅருட்பா என்னும் அருள் நூல் வாயிலாக எழுதி வைத்து உள்ளார் .எழுதி வைத்தால் மட்டும் போதாது .அதே போல் வாழ்ந்தும் காட்டி உள்ளார் .

மக்களுக்கு உண்மையை தெரியப் படுத்த வேண்டும் என்பதற்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "' என்ற அமைப்பை அதாவது சங்கத்தை வடலூரில் ஆரம்பித்து உள்ளார் --அந்த சங்கத்தில் சேருவதற்கு தகுதி என்ன என்றால் அன்பு,தயவு வேண்டும் என்றார் ,மேலும் உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு  முக்கிய தடையாக இருக்கும் சமயம்,மதம்,முதலிய மார்க்கங்களை முற்றும் பற்று அற கை விட்டவர்களும்,காமம் ,குரோதம்,முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் ,கொலை புலை {அதாவது உயிர்க்கொளையும் செய்யாமலும், புலால் உண்ணாதவர்களும்} தவிர்த்தவர்களும்,ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள் என்பதை சன்மார்க்க சட்டமாக ''திருஅருட்பாவிலே''  பதிவு செய்து உள்ளார்கள்.

வள்ளலார் சொல்லியபடி சன்மார்க்கத்திற்கு வருபவர்கள்  புலை,கொலை தவிர்த்து உறுப்பினராகி இருக்கிறார்கள்.ஆனால் வள்ளலார் சொல்லியபடி வாழ்கிறார்களா ?என்றால் இல்லை என்றுதான் அனைவருடைய பதிலாகவும் இருக்கிறது.வள்ளலார் சொல்லியபடி வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை ,ஆனால் அவர் கொள்கைகளை தவறாக பயன் படுத்தி --சமய மத வாதிகளைப் போல் பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டார்கள்--இப்படி செய்பவர்கள் சன்மார்க்கிகளா ?சமய,மத மார்க்கங்களைச் சார்ந்தவர்களா? என்பது புரியாத புதிராக உள்ளது ,பணம் சம்பாதிக்க சமய,மத வாதிகள் சன்மார்க்கர்கள் போல் வேடம் போட்டுக் கொண்டும்  சன்மார்க்கள் என்ற முகமூடியை போட்டுக் கொண்டும்  சன்மார்க்கத்தில் நுழைந்து உள்ளார்கள்

சுத்த சன்மார்க்கத்தில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை செய்ய மாட்டார்கள் .வள்ளலார் கொள்கையை பின்பற்று பவர்கள் .ஆன்மநேயத்தோடும்,உயிர் இரக்கத்தோடும் வாழ வேண்டும் .மற்ற எதிலும் பற்று வைக்க கூடாது,பொய்யான வழிகளை மக்களுக்கு சொல்லித் தர வேண்டாம் .உண்மை அன்பு ,உண்மை தயவு ,உண்மை கருணை ,இவைகளை மட்டும் போதிக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் எந்த தவறான வழிகளையும் பின் பற்றக் கூடாது.அப்படி மீறியும் செயல் பட்டால் ஆண்டவர் நம்மை காப்பாற்ற மாட்டார் .பின் வரும் துன்பங்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும் .

கடவுள் பெயரைச் சொல்லி நாம் எந்த தவறான பாதையிலும் செல்லக் வேண்டாம் .மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .உண்மை மார்க்கம் சன்மார்க்கம் --ஞான மார்க்கம் சன்மார்க்கம் --அருளைத் தேடும் மார்க்கம் சன்மார்க்கம்.----ஒழுக்கம் உள்ள மார்க்கம் சன்மார்க்கம்.---தன்னை அறியும் மார்க்கம் சன்மார்க்கம் ,

தன்னை அறிய ---சுத்த சன்மார்க்க சாதனம் என்ன என்பதை வள்ளலார் விளக்குகிறார் !

சாதனம் ஒன்றும் வேண்டாம் --ஏதாவது சாதனம் சொல்லக் கேட்டு ,அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும் ,அதைக் கண்டு பல் இளித்து இறுமாந்து கெட நேரிடும் .ஆதலால் காலம் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன் உயிரைப்போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ள வேண்டும் .இதுவே சாதனம்.

மேலும் எல்லா உயிரிகள் இடத்தும் தயவும் ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் அன்புமே முக்கியமானவை ;--கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக --மற்று எல்லாம் மருள் நெறி என எனக்கு அறிவித்த வண்ணமே பெற்று இருக்கின்றேன் ,என்று வள்ளலார் அனுபவித்து நமக்கு தெளிவுபட தெரிவித்து உள்ளார் .அதன் படி அனைவரும் செயல்படுவோம் .

உங்கள். ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு