திங்கள், 30 ஜூலை, 2012

மனிதன் மனிதனாக வாழ்வோம் !


மனிதன் மனிதனாக வாழ்வோம் !

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் .

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த நாம் ,மனிதனாக வாழ வேண்டும் .மனிதனாக வாழ்வது எப்படி ?எல்லா உயிர் இனங்களை காட்டிலும் உயர்ந்த அறிவு மனிதனுக்கு கொடுக்கப் பட்டு உள்ளது .இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு எல்லா வசதிகளும் கொடுக்கப் பட்டு உள்ளது .மனிதன் அனுபவிக்கலாம் ஆனால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பது இயற்கையின் சட்டமாகும்.

எல்லா உயிர்களிலும் இயற்கை என்னும் ''ஒளி ''இயற்கையால் படைக்கப் பட்டுள்ளது.அந்த உயிர் ஒளியை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை --உயிர்களை அழிக்காமல் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் தவறு இல்லை --ஆனால் வாய் இல்லாத, பேச இயலாத உயிர்களை அடித்து கொன்று உண்பது பெரிய குற்றமாகும் --உணவு என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது --பசி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது --பசியை போக்கிக் கொள்ள இயற்கையில் தாவரங்கள் என்னும் இலை,பூ,காய்,கனிகள் போன்ற அளவில்லா உணவு வகைகள்,  இயற்கையில் எல்லா  உயிர்களுக்காகவும்  உணவாக படைக்கப் பட்டு உள்ளது.

மேற்படி தாவர உணவை உட்கொள்ளாமல் உயிர்களை அழித்து உண்ணுவது பெரிய குற்றமாகும்.அதனால்தான் உலகில் உண்டாகும் அனைத்துக் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும்,அச்சங்களுக்கும் பயங்களுக்கும்.காரணமாகும் --இதை அறியாமல் மனிதன் வாழ்வது மனித செயல்கள் அல்ல-- என்பதை உணர வேண்டும் --இதுவே மனித பிறப்பின் பண்பாகும்.

அடுத்து சாதி,சமய ,மதக்  கொள்கைகளை மனிதனால் உருவாக்கியதாகும் அதைப் பிடித்துக் கொண்டு மனிதன் அழிந்து கொண்டு உள்ளான் --உலகில் உண்டாகும் அனைத்து போராட்டங்களுக்கும் அடிபடைக் காரணம் சமய ,மத,சாதி,வேற்றுமைகளாகும்.--இதை உணாடாக்கியவர்கள் மதவாதிகள் ,பொய்யான மதங்களை உண்மை என்று எண்ணி --அவர்கள் காட்டிய கொள்கையில் வாழ்வதால் மனித நேயம் இல்லாமல் -ஒற்றுமை இல்லாமல் வேறுபட்டு வாழ்ந்து வருகிறோம் --அவற்றை முழுதும் பற்று அற விட்டு விட்டால் ,மனிதன் மனிதனாக வாழ்ந்தவனாகக் கருதப்படுவான் ,

அடுத்து பொருள் என்பது அனைருக்கும் பொதுவானது --அதை அனைவருக்கும் பொதுவாக,-- சமமாக பகிர்ந்து வாழப்  பழகிக் கொள்ள வேண்டும்,அதுவே மனித பண்பாகும் ,உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் என்பது பொருளின் அதாவது பணத்தின் அடிப்படையில் பிரிக்கப் படுகிறது ,அந்த நிலையை மாற்றுவது மனிதப் பண்பாகும் ,-எவ்வளவுதான்  பணம்,பட்டம்,பதவி,படிப்பு -- இருந்தாலும் எல்லோரும் இறுதியில் மரணம் என்னும் பிணியில் அகப்பட்டு அழிந்து விடுகிறோம் ,---அந்த பணமோ,பதவியோ,மரணத்தைக் காப்பாற்றுவது இல்லை --மரணத்தைக் காப்பாற்றாத ,பணம்,பதவி இருந்து என்ன பயன்? என்பதை மனிதனாக பிறந்த அனைவரும் சிந்திக்க வேண்டும்.இவையே மனித பண்பாகும் ,

மனிதன் பொருளை வைத்துக் கொண்டு வாழ்வதால் --இறைவன் என்னும் அருள்  ஒளி அவனுக்கு  நன்மை செய்யாது,இறைவனால் அளிக்கப்படும் அருள என்னும் உயர்ந்த நிதி --கிடைக்காது , எந்தக் கடவுளும் உங்களை காப்பாற்ற மாட்டார் ,உண்மையான கடவுள் யார்? என்றால் எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக இயங்கிக்  கொண்டு இருக்கும் --ஆன்மா என்னும் ஒளிதான் கடவுள் .--அதனால் ஒரு உயிரை அழித்தால் கடவுள் வாழும் ஆலயத்தை அழித்தது போலாகும்

.இதை அறிந்து வாழ்வதுதான் மனித பிறப்பின் ஒழுக்கம் --பண்புகளாகும் --கொல்லா நெறியே குவலயம் ஓங்க வேண்டும் --எல்லா உயிர்களும் இன்புற்று வாழ  வேண்டும் ,--இவை இயற்கையின் சட்டமாகும்.

இவற்றை உலகை ஆளும் ஆட்சி யாளர்களும் ,அறிவு படைத்த அறிவியல் வல்லுனர்களும்,,இயற்கையை கணக்கிடும் விஞ்ஞானிகளும்,ஆராய்ச்சி செய்ய வேண்டும் .இதை விடுத்து எதைக் கண்டு பிடித்தாலும் ,கணக்கு போட்டாலும் ,சட்டம் போட்டாலும் எதுவும் வேலைக்கு உதவாது .மனிதன் உண்மை அறிவை தெளிவு படுத்தி --வெளிக்குள்  வரவேண்டும் ,பொருள் அறிவு பொய்யான அறிவாகும் --அருள் அறிவு மெய்யான அறிவாகும்.--அருள் அறிவை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது தான் மனிதப் பண்பாகும்

அருள் அறிவைப் பெற்று மனிதன் மனிதான வாழ வேண்டும் .அருள் அறிவை பெறுவதுதான் மனிதப் பிறப்பின் உயர்ந்த அறிவாகும் --உயர்ந்த கொள்கையாகும்

 மனிதன் மனிதனாக வாழ்வோம்!  

உங்கள் அன்புள்ள ஆன்மநேயன் ;--கதிர்வேலு.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு