ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

தெரிந்து கொள்ளுங்கள் !

தெரிந்து கொள்ளுங்கள் !

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே 
 எல்லாம் வல்லான் தனையே யேத்து!

      இந்த உலகத்தை தோற்றுவித்தும் ,இயக்குவித்தும் 
அடக்குவித்தும்,மயக்குவித்தும்,தெளிவித்துலுமாகிய 
தொழில்களை செய்து கொண்டு இருக்கும் கடவுளாகிய 
அருட்பெருஞ் ஜோதியாகிய கடவுளே ,இந்த மக்களை 
அதாவது உலக உயிர்களை,காப்பாற்ற எடுத்த முயற்ச்சிகள் 
எல்லாம் தோல்வியடைந்து,இறுதியாக இராமலிங்கம் 
என்னும் ''திருஅருட் பிரகாசவள்ளலாரை'' அனுப்பி,உலக
உண்மைகளையும் 
கடவுளின் உண்மை நிலைகளையும் எடுத்து சொல்லி 
மக்களை நல்வழிப்படுத்த வேண்டும்,அதற்கு நீயே 
சாட்சியாக வாழ்ந்து காட்டவேண்டும்,அப்பொழுதுதான் 
மக்கள் உண்மையை உணர்வார்கள் என்ற கடவுளின் 
ஆணையை சிரமேற்க் கொண்டு வாழ்ந்து வழி காட்டினார்.

     5 --10 --1823 -ஆம் ஆண்டு முதல் 30 --1 --1874 - வரை 
வாழ்ந்து மரணத்தை வென்று,இறைவனோடு இரண்டறக்
கலந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிம்மாசனத்தில் 
இன்று வரை அமர்ந்து ஆட்சி செலுத்துக் கொண்டும் இருக்கிறார்.
அவர் மக்களுக்கு சொல்லிய கருத்துக்களை.திருஅருட்பா
என்னும் நூல் வாயிலாக எழுதி வைத்துள்ளார்கள் .அது 
வேறெங்கும் இல்லை நம் தமிழ் நாட்டில்.நம் தமிழ் 
மொழியில்,எளிய முறையில் எழுதி வைத்துள்ளார்.
அனைவரும் படித்து பயன் பெறவேண்டும் .

உலகில் உள்ள அரசியல் வாதிகளோ,ஆன்மீககவாதிகளோ 
அனைத்தும் தெரிந்த அறிஞர் பெருமக்களோ.அறிவியல் 
விஞ்ஞான,அறிவாளிகளோ படித்தார்களா!சிந்தித்தார்களா 
என்றால் இன்று வரை இல்லை என்பது, அனைவரும் 
அறிந்ததே.இனிமேலாவது ''திருஅருட்பாவை ''படித்து
அதில் உள்ள உண்மைகளை அறிந்து மக்களுக்கு தெரியப்
படுத்த வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

ஆண்மநேயன்.கதிர்வேலு.

மிண்டும் பூக்கும் 
.           
   
            

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு