ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சமரச சுத்த சன்மார்க்க சத்திய யுகம் ஆரம்பம் !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய யுகம் ஆரம்பம் !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !



நாம் வாழும் இந்த உலகம் நான்கு யுகங்களை கொண்டது !

சத்திய யுகம் !-----17,28,000.--வருடங்கள்
திரேதாயுகம் !----- 12,96,000--வருடங்கள்.
துவாபரயுகம் !-----8,64,000---வருடங்கள்.
கலியுகம் !----------4,32,ooo---வருடங்கள் .

என்பதாகும் .இவை அணு பஷ காலம் ,சம்புபஷ காலம் என்பதாகும் .இந்த காலங்கள் நான்கு சுழற்ச்சியைக் கொண்டது இந்த காலங்களில் மனிதர்களும் உலக உயிர்களும் துன்பமும் துயரமும் அச்சமும் பயமும் கொண்டதாகும் .

இப்பொழுது கலியுகம் நடந்து கொண்டு இருப்பதாக உலக வரலாறுகள் கூறுகின்றன .கலியுகம் முடிய 5000.ஐந்து ஆயிரம் ஆண்டுகள் இருக்கின்றன அப்படி அந்த கலியுகம் நீடித்தால் உலக உயிர்கள் யாவும் அழிந்துவிடும் .

உலக உயிர்களை காப்பாற்ற ,உலகைப் படைத்த அருட்பெரும்ஜோதி ஆண்டவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் உண்மை அருளாலரை இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார் .

உண்மைப் பத்திரிகை !

1871,ஆம் ஆண்டு பிரஜோத்பதி வருடம் ,சித்திரை மாதம் ஒன்றாம் தேதி வள்ளலார் கொடுத்த உண்மை பத்திரிகை என்னும் வாக்குமூலம்.

சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் .இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு ,அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும் .அதன் மேன் மேலும் வழங்கும்.

இதுவரையில் உள்ள பலவகைப்பட்ட சமய மதங்களும் ,சாத்திர பேதங்களும் ,ஜாதி பேதங்களும்,ஆசார பேதங்களும்,போய்,சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும் .அது கடவுள் சம்மதம்,இது --29,வருஷத்திற்கு மேல் {இவை கலியுகம் -5000--க்கு மேல் }

இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய மத சாத்திர புராணங்களில் வந்ததாகச சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள் ,கடவுள்,தேவர்,அடியார்,யோகி,ஞானி,முதலானவர்களில் ஒருவர் அல்ல ,

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும்,எல்லாக் கடவுளரும் எல்லாத் தலைவர்களும் ,எல்லா யோகிகளும்,எல்லா ஞானிகளும், தாங்கள்,தங்கள் அனுபவங்களைக் குறித்து அவர்கள் எதிர் பார்க்கின்றபடி எழுந்து அருளுகின்ற கடவுளும் அதே அருட்பெரும்ஜோதி  தனித் தலைமைப் பெரும்பதியாகும்.அதுவே அருட்பெரும் ஜோதியாகும்.
.
இது உண்மை உண்மையாயின் அந்தப் பதியின் முழுமையான அருளை நான் பெற்றேன் !பெறுவேன் !! பெறுகின்றேன் !!! என்னை அடுத்தவர்களும் பெறுதற்கு யாதொரு தடையும் இல்லை .பெறுவீர்கள் !பெருகின்றீர்கள் !பெற்றீர்கள் !!அஞ்சவேண்டாம்

இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம் .

மேலே கண்ட வாசகத்தை 1874,ஆம் ஆண்டு ,சித்திரை மாதம் ஒன்றாம் தேதி சித்திவளாக திருமாளிகையில் வெளியிடுகிறார் .

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது யாதெனில் கலியுகம் தொடங்கி 5000,ஆண்டுகள் தொடரும் தருவாயில் கலியுகத்தை தொடர விடாமல் தடை செய்து உள்ளார் வள்ளலார் இது கடவுள் சம்மதம் என்கிறார்

ஏன் அப்படி செய்துள்ளார் என்றால் கலியுகம் முடியும் வரை நீட்டித்தால் உலக உயிர்கள் அழிந்து விடும் .,உலக உயிர்களைக் காப்பாற்ற ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கத்தை ''ஆரம்பித்து உள்ளார் .

உண்மைக கடவுளான ''அருட்பெரும்ஜோதி என்னும் ஒளியை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தி உள்ளார் .இன்று நடந்து கொண்டு இருப்பது! இனி வருவது ,!எக்காலத்தும் நிலைத்து நிற்பது! வள்ளலார் காட்டிய ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமாகும் .இதற்கு எவ்வகைப்பட்ட தடைகளும் கிடையாது .இது சாத்தியமாகும் .

1874,ஆம் ஆண்டு, ஸ்ரீமுக வருடம் ,தை மாதம்,19,நாள் வெள்ளிக்கிழமையில்  இருந்து உலக மாற்றம் உருவாக்கப் பட்டுள்ளது.இதை உலக மக்கள் அனைவரும் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ளவேண்டும்.

உங்கள் ஆன்மநேயன் கதிர்வேலு.





2 கருத்துகள்:

9 ஜூன், 2012 அன்று PM 7:37 க்கு, Blogger saalaikannan கூறியது…

ஐயா , மிக்க நன்று, ஒரு சிறிய திருத்தம் - உண்மைப் பத்திரிகை வெளியாக்கப் பெற்றது 1871 பிரஜோபர்தி வருடம் சித்திரை மாதம் (ஆதாரம் திருவருட்பா, ஆறாம் திருமுறை வசனபாகம்)

- கண்ணன்
9445558640

 
10 ஜூன், 2012 அன்று PM 5:58 க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

உங்கள் பதிலுக்கு மிக்க நன்று .உங்கள் கருத்துப்படி தேதியையும் வருடத்தையும் மாற்றி விட்டேன் .

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு