புதன், 14 செப்டம்பர், 2011

சாதி சமயம் மதம் சாத்திரம் .அனைத்தும் பொய் !


சாதி சமயம் மதம் சாத்திரம் .அனைத்தும் பொய் !

மனிதன் வாழ்க்கை தேவைக்கு தொழில் தேவைப்பட்டது .தொழிலுக்கு வைத்த பெயர் மனிதனுக்கு வந்து விட்டது. தொழில் வளர்ச்சி அடையும் போது ,பொருள் வளர்ச்சி உண்டானது .பொருள் அதிகம் சம்பாதிப்பவர்கள் உயர்ந்த ஜாதியாகவும் .பொருள் குறைவாக உள்ளவர்களும் ,பொருள் இல்லாதவர்களும் தாழ்ந்த ஜாதியாகவும் அமைத்து விட்டார்கள் .ஆண்டவரைப் பற்றி பேசுபவர்களை .எல்லோரையும் விட உயர்ந்த ஜாதி என்று வைத்து ,மற்றவர்கள் உழைப்பில் தான் உழைக்காமல், வாழும் வழியை அமைத்துக் கொண்டார்கள் .எல்லாமே கடவுள் விதித்த விதி என்று கடவுள்மேல் பழியைப் போட்டு ,மக்களை முட்டாள்களாக மாற்றி விட்டார்கள் .

வேதம் ஆகமம் ,புராணம் இதிகாசம் சாத்திரம் போன்ற கட்டுக் கதைகளை கட்டி ,மக்களிடம் பரப்பி .மக்களை அறியாமையில் வைத்து ஏமாற்றி விட்டார்கள் .கடவுள்,-- வேதத்தில் ,ஆகமத்தில் புராணத்தில் சாத்திரத்தில் சொல்லியுள்ளார் என்று மக்களை இதுநாள் வரை ஏமாற்றி வருகிறார்கள் .இதற்கு என்று ஒரு கூட்டம் இந்தியாவில் நிறைந்து உள்ளது.

ஆனால் இன்றைய இளைஞர்கள்.விஞ்ஞானிகள்.அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.விழித்துக் கொண்டார்கள்.எதையும் அறிவியல் உண்மையுடன் தெளிவுப் படுத்துகிறார்கள் ,இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது .சாதி,மதம் சமயம் ,சாத்திரம் எல்லாம் பொய் பொய்யே .மனிதனை மனிதன் சாதி மதம் சமயம் சாத்திரம் என்ற வகையில் பிரித்து வைப்பது ,பெரும் பாதகச செயலாகும்,கொள்ளைக் கூட்டத்தின் செயலாகும் .மோசக் காரர்களின் செயல்களாகும்.   .சாதி,மதம்,சமயம்,சாத்திரங்களை எல்லாம் குழி தோண்டி பிதைக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன .!கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதி !ஆண்டவர் .அனைவரும் அவருடைய குழைந்தைகள் .நமக்குள் எந்த வேற்றுமையும் வேண்டாம் .

அன்புடன் ஆன்மநேயன் -கதிர்வேலு.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு