செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

முருகன் ,சாந்தன் ,பேரறிவாளன் தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது


முருகன் ,சாந்தன் ,பேரறிவாளன் தூக்குத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது !
தமிழக முதல்வருக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் வள்ளலார் கொலையை,. எந்த வித தந்திரத்திலாவது நிறுத்த வேண்டும் என்கிறார் .அவருடைய கொள்கையின் வழிகாட்டுதலின் படி எந்த உயிருக்கும் மனிதனால் அழிவு ஏற்படக் கூடாது என்ற வகையில் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் முதல்வர் அறிவில் வேலை செய்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை .அதேபோல் தமிழக மக்களின் ஏகோபித்த குரல் ஒளியை கேட்டு முதல்வர் சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவந்தது அனைத்து தமிழ் மக்களின் உள்ளத்தில் முதல்வர் நிலையாக நின்று விட்டார்கள் .அவர்களுக்கு என்னுடைய அறிவார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .தமிழகம் மூன்று உயிர்களை காப்பாற்றி உள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது . அன்புடன் ;-ஆன்மநேயன் கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு