வியாழன், 12 மே, 2011

பனித்துளி சங்கருக்கு கடிதம்

ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம் நம்மை ஆள்வதற்கு போட்டிபோடும் அரசியல் கட்சிகள் ,நாளை அரண்மனையில் அமர்ந்து ஆட்சி செய்யும் அதிகாரம் யாருக்கு என்பதை மக்கள் ,அரசியல் வாதிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான்.யார் வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும்.மக்களுக்கு நன்மைசெய்யாத எந்த ஆட்சியாக இருந்தாலும் தூக்கி எறியவேண்டும் .அதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் .கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக !அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க என்றார் வள்ளலார் ,
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் குரல் கொடுத்தவர் வள்ளலார் .இவை யாருக்காவது தெரியுமா ?மக்கள் பசி பட்டினி வறுமை தாண்டவம் ஆட மக்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்த காலத்தில் .வடலூரில் 1867 ஆம் ஆண்டில் முதன் முதலாக தருமச்சாலையை அமைத்து ஏழைகளின் பசிப்பிணியை போக்கினார் வள்ளலார் .பட்டினி உற்றோர் பசித்தனர் என்று பிறரால் கேட்டபோதெல்லாம் உளம் பகீர் ஈன நடுக்குர்றேன் என்ற கருணையே வடிவமானவர் பிறந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது .மனம் மகிழ்ச்சியடைகிறோம்.
    இந்த தமிழ் நாடு உலகத்திற்கே வழி காட்டியாக இருக்கவேண்டும் .அதற்கு தகுந்தாற் போல் ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் நலனில் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்..தன்னலம் கருதாது பொது நலத்திற்கு பாடு பட வேண்டும் .மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் மக்களுக்கு உண்மை உழியர்களாக பணிபுரியவேண்டும்.அதுவே அனைவருடைய விருப்பமும் வேண்டு கோலாகும்.இது வரையில் எப்படி இருந்தாலும் இனிமேல் தவறு வராமல் மக்களுக்கு பணியாற்றி நல்ல பெயர் வாங்க வேண்டும் அதுவே என்னுடைய விருப்பமும் வேண்டுகோளாகும் ,
     நடு நிலையோடு பணியாற்றி நன்மை செய்ய வாழ்த்துகிறேன் ,மக்களை அழிக்கும் மது ,மாமிசம் அறவே ஒழிக்க வேண்டும் .கடவுள் பெயரால் உயிர்கொலை செய்வதை தடுத்து மக்களை காப்பற்ற வேண்டும் .எல்லாஉயிர்களும் இறைவன் படைப்பு .எந்த உயிரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .அதை அரசாங்கம் அமல படுத்த வேண்டும். வாடிய பயிரைக கண்டு வாடிய வள்ளலார் பிறந்த நாட்டில் ,உயிர்கொளையும் புலை புசிப்பும் இருக்கலாமா?
      எல்லாவற்றிக்கும் மன்னிப்பு உண்டு உயிர்க்கொலைக்கும்,புலால் உண்பதற்கும் மன்னிப்பு கிடையாது என்கிறார் வள்ளலார்.வள்ளுவரும் கொல்லாமை ,புலால் மறுத்தல் என்ற இரண்டு அதிகாரங்களில் ௨௦ திருக்குறள் எழுதி வைத்துள்ளார் .அதை படித்த அரசியல் வாதிகள் ஏன் அதை மக்களுக்கு எடுத்து சொல்லவில்லை .அவர்களே அந்த தவறை செய்கிறார்கள் அதனால் அவர்கள் மக்களுக்கு எடுத்து சொல்ல தயங்குகிறார்கள்.இனியாவது மக்கள் நன்மைக் கருதி ,மக்களுக்கு அதனால் வரும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
     ஆட்சி பீடத்தில் அமரும் ஆட்சியாளர்கள் மக்கள் அறியாமையை போக்கி நன்மைகள் எதுவோ அதை செயல்படுத்த வேண்டும்,காந்தி அகிம்சை,சத்தியாகிரகம்,கொல்லாமை புலால் உண்ணாமையை கடைபிடித்து நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும் .அவர் வள்ளலார் வழியை பின்பற்றியவர்.அவர் வாங்கி கொடுத்த சுதந்திரத்தை காப்பாற்றுவோம்.என்ற உறுதி மொழியை வருகின்ற ஆட்சியாளர்கள் சிரமேர்க் கொண்டு,நாட்டையும் மக்களையும் காப்பாற்றுங்கள்..

அன்புடன் உங்கள் ஆன்மநேயன் ---கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு