வெள்ளி, 16 ஜூலை, 2010

''ஆன்மாவும் தேகங்களும் ''

        
''நாம் வாழும் வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை அல்ல'' 

வள்ளலார் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ள பாடல் ;---

உடம்பு வருவகையரியீர் உயிர்வகையை யறியீர்

உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே யறிவீர்

மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்று அறியீர்

இடம் பெருபொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் மடுத்தே

எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே

நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே .
    
         என்று உலக மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் .

வள்ளலார் ஆன்மாவை உயிரொளி என்பார், .ஆன்மா என்று

ஜீவ காருணிய  ஒழுக்கத்திலும் , உரை நடைப்பகுதியில்

சில இடங்களில் ஆன்மா என்ற வார்த்தையை பயன்

படுத்தியுள்ளார் .

      ஆறாம் திருமுறை அருட்பாவின் பாடல்களில், எந்த

இடத்திலும் ஆன்மா என்ற வார்த்தைகள் இல்லை .

ஆன்மா என்ற வார்த்தையை விட, உயிர்ஒளி என்ற

வார்த்தை சரியானது என்று தெளிவு படுத்தி உள்ளார்

நம் அருட் பிரகாச வள்ளலார் .

அதிலே சில வரிகள் ;--

உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுக என செப்பிய சிவமே .

பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்சசிவமே,

உயிருள்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய்சிவமே ,

இயல் அருள் ஒளி யோர் ஏகத்தேசத்திநாம்
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய்சசிவமே,

உலகு உயிர்த் திரளெலாம் ஒளி நெறிபெற்றிட
இலகு ஐந்தொழிலையும் யான செய்த தந்தனை ,

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையுறு எல்லாம்
விலக நீ யடைந்து விளக்குக மகிழ்க ,

சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தமனாகுக ஓங்குக வென்றனை ,

என்று ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன .
ஆதலால்ஆன்மா என்பதை விட ,
தமிழில் உயிரொளி என்பது சரியான
வார்த்தையாகும் என்பதை
தெளிவுப்படுத்தியுள்ளார்  போலும்


        அருட்பெரும்ஜோதி என்னும் கடவுள் உண்மையை ,

அகத்தில் கொண்டுள்ள உயிரொளி அணுக்கள் இல்லாத

இடமே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும் ,

எல்லாமும் உயிரொளி அணுமயம்என்றே கூறிவிடலாம் .

புரோடான்துணுக்குகளுக்கு ஆதார காரணமாயுள்ளதே

நம் உயிரொளி அணுக்களாகும்.இந்த புரோட்டான் மட்டும்

நிறைந்திருக்குமாயின் அண்டவெளி முற்றும்

அருட்பெரும்ஜோதி மயமாகவே திகழும் .அருள் உண்மை

கணடவர்க்குத் தோற்றம் முழுவதும் அருட்பெரும்ஜோதிக்

காட்சி அகத்தில் தெரியவரும் .

அந்த காட்சியை கண்ட வள்ளலார் ஒருபாடலில்


பதிவுசெதுள்ளார் ;---

ஈற்று அறியேன் இருந்திருந்திங்கு அதிசயிப்ப தென்நீ

என்கின்றாய் நீ எனைவிட்டேகு தொறும் நான்தான்

காற்று அறியாத் தீபம்போல் இருந்திடும் அத் தருணம்

கண்ட பரிசு என்புகழ்வேன் அண்டபகிர் அண்டம்

தோற்ற அறியாப் பெரும்ஜோதி மலை பரநாதத்தே

தோன்றியதாங்கு அதன் நடுவே தோன்றியது அதுதான்

மாற்று அறியாப் பொன் ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்

வள்ளல் அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே .

        இது நம் திருஅருட்பிரகாச வள்ளலார் கண்ட உண்மை

ஜோதிக்காட்சி விளக்கமாகும் ஒவ்வொரு சுத்த உயிர் ஒளியும்

இக்காட்சியை அனுபவத்தில்காண  வேண்டியதாகும்.

         இதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே

உயிரொளி வருவிக்கபட்டதாகும்,இந்த பிரபஞ்ச காரியங்கள்

யாவும் உயிர் ஒளியை சுற்றி நடந்து கொண்டு இருக்கிறது .

பஞ்ச  பூத அணுக்கள் உயிர்ஒளிக்கு, அதன் அதன்

தன்மைக்கு தகுந்தாற் போல்  உடம்பு கொடுத்துக்

கொண்டு இருக்கின்றன .

ஜீவனை சுற்றியுள்ள அணுக்களும் ஒளிக் கொண்டதாகும் .

ஜீவன் அணுவில் ஒடுங்கி பலகோடி ஆண்டுகளாக

உரு மாறிக்கொண்டே இருக்கிறது ,இதைத்தான்

பிறப்பு இறப்பு என்கிறோம் .ஜீவனுக்கு பிறப்பு இறப்பு

என்பதில்லை ,பக்குவத்திற்கு தகுந்தாற்ப்போல்,

பஞ்ச  பூத அணுக்கள் சேர்கிறது, பிரிந்து விடுகின்றது.

ஆதலால் உயிர் ஒளியான ஜீவனை கண்ணால் காண

முடிவதில்லை .

        இந்த உயிரொளியானது அருட்பெரும்ஜோதி சமூகத்தில்

நிறைந்து இருக்கின்றன் ,அருட்பெரும் ஜோதியின் அருள்

சக்தியால், பஞ்ச  பூத அணு அண்டத்திற்கு அனுப்பி

வைக்கப்படுகின்றது .

பூதஅண்டத்திற்கு வந்த உயிர் ஒளியானது பல ஆயிரம்

ஆண்டுகள் உருவம் எடுக்காமல் அஞ்சான இருளில் ஒன்றும்

தெரியாது இருந்தது .அந்த இருளை விட்டு நீங்கிய காலத்தே ,

இவ்வுலகனிடத்து புல்,நெல் ,மரம் ,செடி ,பூண்டு,

முதலியவாகவும்,கல், மலை,குன்று முதலியவாகவும்,

பிறந்து ,பிறந்து ,களையுண்டல்,அறுபபுண்டல்,வெட்டுண்டல்,

கிள்ளுண்டல்,உலர்ப்புண்டல்,உடைப்புண்டல்  ,வெடிப்புண்டல் ,

முதலிய பல்வேறு உருவங்கள் எடுத்து ,அத்தாபர யோனி

வர்க்கங்களேல்லாம்,சென்று ,சென்று ,உழன்று ,உழன்று,

அலுப்படைகின்றன .

         பின்னர் ,எறும்பு ,செல் ,புழு ,பாம்பு ,உடும்பு ,பல்லி

முதலியவாகவும் ,தவளை ,சிறுமீன் ,முதலை ,சுறா ,

திமிங்கலம் முதலியவாகவும் ;பிறந்து ,பிறந்து ,

தேய்ப்புண்டல்,நசுக்குண்டல் ,அடியுண்டல் ,பிடியுண்டல் ,

முதலிய பல்வேறு உருவங்களாகவும் ,பின் இறந்திறந்து,

அவ்வூர்வன ,நீர்வாழ்வன ,முதலிய யோனி வர்க்கங்கள்

எல்லாம் சென்று ,சென்று ,உழன்று ,உழன்று ,

அலுப்படைகின்றது .

        பின்னர் ஈ ,வண்டு ,தும்பி ,குருவி ,காக்கை ,பருந்து ,

கழுகு முதலியவாகப் பிறந்து ,பிறந்து ,அடியுண்டல் ,

பிடியுண்டல் ,அலைப்புண்டல் ,உலைப்புண்டல்

முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து ,இறந்து,

அப்பறவை யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று ,

சென்று ,உழன்று ,உழன்று அலுப்பு அடைகின்றது .

       பின்னர் அணில் ,குரங்கு ,நாய் ,பன்றி ,பூனை,

ஆடு ,மாடு,யானை ,குதிரை ,புலி ,கரடி முதலியவாக

பிறந்து ,பிறந்து ,பிடியுண்டல் ,அடியுண்டல் ,

குத்துண்டல் ,வெட்டுண்டல் ,தாக்குண்டல் ,

கட்டுண்டல் ,தட்டுண்டல் ,முதலிய பல்வேறு

அவத்தைகளால் இறந்து ,இறந்து ,அவ்விலங்கு

யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று ,சென்று ,

உழன்று ,உழன்று அலுப்படைகின்றன .

        பின்னர் பசாசர் ,பூதர்,இராக்கதர் ,அசுரர் ,சுரர் ,

முதலியவாகப் பிறந்து ,பிறந்து ,அலைப்படுதல் ,

அகப்படுதல் ,அகங்கரித்தல் ,அதிகரித்தல் ,

மறந்துநிற்றல் ,நினைந்து நிற்றல் ,மயக்குறுதல் ,

திகைப்புருதல்,போரிடுதல் ,கொலைப்படுதல் ,

முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து ,இறந்து ,

அத்தேவ யோனி வர்கங்கள் எல்லாம் சென்று ,சென்று ,

உழன்று ,உழன்று அலுப்பு அடைகின்றன .

         பின்னர் ,காட்டகத்தார் ,கரவுசெவார் ,கொலைசெய்வார் ,

முதலியராகப் பிறந்து ,பிறந்து ,பயப்படல் ,சிறைப்படல்,

சிதைப்படல் ,முதலிய அவத்தைகளால் இறந்து ,இறந்து ,

அன்நரக யோனி வர்க்கங்கள் எல்லாம் சென்று ,சென்று ,

உழன்று ,உழன்று அலுப்படைகின்றன .அங்கனம்

அப்பிறவிகள் தோறும அடைந்த அலுப்பும் அச்சமும் ,

அவலமும் ,களைப்பும் ,துன்பமும் அடைந்து ,

அவதிப்பட்ட [ஆன்மா வாகிய ]உயிர்ஒளியானது ,

மேலே கண்ட பிறவிகள் எடுத்த,  கணக்கை சொல்லி

அளவிடமுடியாது .பலகோடி ஆண்டுகளாகும் .

அப்படி துன்பமும் ,துயரமும், அவதியும்அடைந்த

ஆன்மாவாகிய உயிஒளியை, கருணையே வடிவாகிய

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,

அழியாப்  பெருவாழ்வைப் பெறுவதற்குரிய ,

உயர்வு உடையதாகிய இம் மனித தேகத்தில்,

செலுத்தி அருளியுள்ளார் ,மனிதர்களாகிய நாம்

தேவரீரது பெருங்கருணைக்கு என்ன கைம்மாறு

செய்யப்போகிறோம் ,ஒன்றும் தெரிந்தோமில்லை,

       நமக்காக வள்ளலார் அருட்பெரும்ஜோதியிடம்

எப்படி வேண்டுகிறார் என்பதைப்பார்ப்போம் .

     '' அருட்பெரும்ஜோதி ஆண்டவரே ''

இம்மனித தேகத்திற் செலுத்திய காலத்தும் ,

தாய்வயிர்றிலும்,சிசு பருவத்திலும் ,குமார பருவத்திலும்,

பல்வேறு அவத்தைகளால் அறிவின்றி இருந்தோம் ,

ஆகலின் ,''தேவரீர் பெருங்கருணைத் திறத்தை ''

அறிந்து கொள்ளாமல் வீண் போது கழித்தோம் .

அப்பருவம் கழிய இப்பருவத்தினிடத்தே,எல்லா

அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும் ,

எல்லா உயிர்களையும் ,எல்லா பொருள்களையும் ,

மற்றை எல்லாவற்றையும் தோற்றுவித்தும் ,

விளக்கம் செய்வித்தும் ,துருசு நீக்குவித்தும் ,

பக்குவம் வருவித்தும் ,பலன் தருவித்தும் ,எங்கும்

''பூரணமாகி விளங்குகின்ற 
ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும் ''
 
அக் கடவுளை உண்மையன்பால் கருத்தில் கருதி

வழிபாடு செய்யின் ''அக்கடவுள் திருவருள் '' நமது

கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும்,

அத்திருவருள் விளக்கத்தால் ;--

மரணம் ,பிணி ,மூப்பு ,பயம் ,துன்பம் ,முதலிய

அவத்தைகள்  எல்லாவற்றையும் தவிர்த்து

எக்காலத்தும் ,எவ்விடத்தும் ,எவ்விதத்தும் ,

எவ்வளவும் ,தடைபடாத் பேறின்ப சித்திப்

பெருவாழ்வை அடைதல் கூடுமென்றும்,

எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால்

உண்மைப்பட உணர்த்தி அருளபபெற்றோம்,

அவவுணர்ச்சியைப் பெற்றது தொடங்கி க்

''கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செவோம் ?

கடவுள் திருவருள் விளக்கம் என்னாள்அடைவோம் ?''

மரணம் ,பிணி ,மூப்பு ,முதலிய அவத்தைகள்

எப்போது நீங்கும் ?என்றும் அழியாத பேறின்ப சித்தி

எக்காலம் கிடைக்கும் ?என்று எண்ணி எண்ணி ,

வழிதுறை தெரியாமல் வருந்துகின்றோம்.

         நமக்காக வள்ளலார் அருட்பெரும்ஜோதியிடம்

வேண்டுகின்றார்.அதற்க்கு கடவுள் வள்ளலாரிடம்

ஒரு பணியை தருகிறார் .அப்பணி என்ன என்பதை

பின் வருமாறு பதிவு செய்துள்ளார் .

''களைப்பறிந்து உதவும் கருணைக்கடலாகிய கடவுளே ''

         தேவரீர் 'நெடுங்காலம் மரண முதலாகிய

அவத்தைகளால் ,துன்பமுற்றுக் களைப்படைந்த

உங்களை அவ வத்தைகளினின்றும் ,நீக்கி

களைப்பும் கலக்கமும் ,தவிர்த்து,அழியாத

பேரின்பசித்தியை அடைவிததர் பொருட்டாகவே ,

பூர்வஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதி புரமென்று

குறிக்கப்படுகின்ற உத்திர ஞான சித்திபுரத்தில் ,

யாம் அளவுகடந்து நெடுங்காலஞ் சித்தியெலாம்

விளங்கத் திருவருள் நடஞ் செயவோ'மென்றும் ,

அது தருணம் மிகவும் அடுத்த சமீபித்த தருணம்

என்றும் ,அப்பதியினிடத்தே,யாம் அருள்நடம்

புரிதற்கு அடையாளமாக ''ஓர் ஞானசபை '' காணுதல்

வேண்டும் என்றும், திருவருட் குறிப்பால் அறிவித்தது மன்றி ,

அத்திருஞான சபையும் தோன்றி விளங்கச செய்வித்தருளிய ,

''தேவரீர் பெருங்கருனையைக் கருதுந்தோரும்

பெருங்களிப்படைகின்றோம்''இனி அத்திருஞான சபையை

அலங்கரித்தல் வேண்டுமெனக் குறிப்பித்த வண்ணம்

அலங்கரிக்கத் தொடங்குகின்றோம் .

          'அருட்பெரும்ஜோதி ஆண்டவரே ''

       தேவரீர் அருளுருவாகி எங்கள் அகத்தும் புறத்தும்

அமர்ந்தருளி ,யாங்கள் செய்யும் இவ்வலங்காரத்

திருப்பணியில் எவ்விதத்தாலும் யாதொரு தடையும்

வாராத வண்ணம் செய்வித்து ,அவ அலங்காரத்

திருப்பணியை முற்றுவித்து தருளல் வேண்டும் .

''சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுளே ''

        அத்திருவல்ங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே

தேவரீர் அமர்ந்த்தருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால்

எங்களையும் ,இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற

மற்றவர்களையும் ,உண்மையடியர்களாக்கி,உண்மை

அறிவை விளக்கி ,உண்மை இன்பத்தை யளித்துச

சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச சத்திய

வாழ்வை யடைவித்து ,நித்தியர்களாக்கி,வாழ்வித்தல்

வேண்டும் .


''எல்லாமுடைய அருட்பெரும்ஜோதி அற்புதக் கடவுளே '''

       இது தொடங்கி எக்காலத்தும் ,சுத்தசன்மார்க்கத்தின்

முக்கியத் தடைகளாகிய சமயங்கள் ,மதங்கள் ,மார்க்கங்கள்,

என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் ,வருணம் ,

ஆசிரமம் ,முதலிய உலகாசார சங்கற்ப விகர்பங்க்களும்,

எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல்

வேண்டும் .சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய

ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை ,எங்களுக்குள் ,

எக்காலத்தும் ,எவ்விதத்தும் ,எவ்வளவும் விலகாமல்

நிறைந்து விளங்கச செய்வித்தல் வேண்டும் .

      மேலே கண்ட ஞான சபையை வள்ளலார் அமைத்ததின்

நோக்கம் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார் .

     நமக்கு கிடைத்த இம்மனிதப்பிறவி சாதாரணமாக

கிடைத்து அல்ல .பல கோடி பிறவிககுபின் கிடைத்ததாகும் .

இந்த பிறவி பேரின்பத்தை அடைய வேண்டியதாகும் .

இந்த பிறவியை தவறவிட்டால் மறுபடியும் ,

என்ன பிறவி என்பது தெரியாது ,ஆதலால் காலம்

உள்ள போதே அருட்பெரும்ஜோதி ஆண்டவரின்

அருளைப்பெற்று மரணமில்லாத பேரின்பசித்திப்

பெருவாழ்வில் வாழ்ந்திடுவோம் .

             அருட்பெரும்ஜோதி .

 நன்றி ;----மீண்டும் பூக்கும்.    

    

  

      

/  
    

                
    
    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு