ஞாயிறு, 21 மே, 2023

அரசு விழா !

 *அரசு விழா !*


*தமிழக அரசு எடுக்கும் வள்ளலார் 200 விழா இவ்வாண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை அன்று மாரியம்மன் கோவில் விழாபோல்,  வள்ளலாரின் சிலை ஊர்வலம் மேளம், தாளம், தப்பட்டை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கோலாட்டம், குத்தாட்டம், கிரகாட்டம் யாவும் சிறப்பாக நடந்து கொண்டு உள்ளது.* 


*மேலும் சுத்த சன்மார்க்கிகளின் அற்புதமான ஆழமான முற்போக்குத் தனமான கலப்படம் இல்லாத வள்ளலார் அறிவுறுத்திய  சுத்த சன்மார்க்கத்தின் அற்புதமான சிறப்பு  பேச்சு. மேலும் மாலை மரியாதை சிறப்பு விருந்து சிறப்பு விருது மூத்த சுத்த சன்மார்க்க சான்றோர்களுக்கான பாராட்டுக்கள், மேலும் விழாக் குழுவினர்கள, மற்றும் அரசு நிர்வாகிகள் வசம் சிக்கித் தவிக்கும் பணம் படுத்தும்பாடு யாவும் அபாரமாக நடந்து கொண்டு உள்ளது*


*அரசுபணம் அழகாக குற்றம் காணமுடியாத,கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ரசீதுகள் யாவும் சரியாகப் போடப்படுகிறது அற்புதம் அற்புதமே*


*சன்மார்க்கிகளின் கூட்டம்,பொது மக்களின் கூட்டம் எங்கு பார்த்தாலும் விழாவைக் காண அலை மோதுகிறது,விழாக்களை கண்டு களித்து லட்சக் கணக்கான மக்கள் வடலூரை நோக்கி வந்த வண்ணமாக உள்ளார்கள்.*


*அப்பப்பா பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.*


*சுத்த சன்மார்க்கம், உலகம் முழுவதும் விரைவில் வெளிப்படும் காலம் நெருங்கி விட்டது*


*எல்லாவற்றையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், கண்டு களித்து கண்காணித்துக் கொண்டுதான் உள்ளார்*


*வள்ளலார் புகழ் வாழ்க !*


*சுத்த சன்மார்க்கம் வளர்க  !*


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு