செவ்வாய், 16 மே, 2023

வந்தால் பெறலாம் நல்ல வரமே !

 *வந்தால் பெறலாம் நல்ல வரமே !*  


*அருட்பெருஞ்ஜோதி!*

*அருட்பெருஞ்ஜோதி!*

*தனிப்பெருங்கருணை!*

*அருட்பெருஞ்ஜோதி!*


*உலக வரலாற்றில் முதன் முதலாக ஏழைகளின் பசியைப் போக்குவதற்காக 23-05-1867 ஆம் ஆண்டு அதாவது பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாளில் கடலூர் மாவட்டம் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச் சாலை என்ற பெயரில், உலக மக்களின் நலன் கருதி வள்ளல்பெருமான் அவர்கள் நிறுவினார்கள்.*


*வருகின்ற 25-05-2023 வியாழன் அன்று 157 ஆவது தருமச்சாலை துவங்கிய நாளை முன்னிட்டு வடலூரிலும், மற்றும் உலகில் உள்ள சன்மார்க்க சங்கங்களிலும்,அன்னதானமும் அருட்பெருஞ்ஜோதி வழிபாடும்  வெகு விமரிசையுடன் சிறந்த முறையில் கொண்டாடப் படுகின்றது.*


*வள்ளலார் பாடல்!*


காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே

களிப்பே என் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எலாம் தருமச்


சாலையிலே ஒருபகலில் தந்த தனிப் பதியே

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே


மாலையிலே சிறந்த மொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசே என் மாலையும் ஏற் றருளே.! 


*மேலே கண்ட பாடலில் தருமச்சாலையின் உண்மையை, அதனால் கிடைக்கும் அருளின் (நன்மையை) தன்மையைப் பற்றி தெளிவான விளக்கத்தை எளிய முறையில் வள்ளல்பெருமான் அவர்கள் வழங்கி உள்ளார்*


*அதுசமயம் வடலூரில் நமது திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாகவும் சன்மார்க்க அன்பர்களின் கூட்டு முயற்சியாலும்,24-05-2023  மாதப்பூசத்தன்றும் 25-05-2023 தருமச்சாலை துவங்கிய நாளை முன்னிட்டும், தொடர்ந்து சிறப்பு அன்னதானமும்,சன்மார்க்க ஆன்மீக சத்விசாரம் மற்றும் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறுகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்*


*அனைவரும் ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  அருள் பெறும் வரமான நல்ல வரத்தை பெற்றுக் கொண்டு வாழ்வாங்கு வழ்வதற்கு வடலூர் வடதிசைக்கு வர வேண்டுமாய் (வரவேற்கின்றோம்) அன்புடன் அழைக்கின்றோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு