திங்கள், 31 அக்டோபர், 2022

அன்புடைய நம்மவர்களுக்கு !

 *அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் !*


முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


சாதி சமய மதங்களை பின்பற்றுபவர்கள் அவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களை விடாமல் பின்பற்றுபவர்கள் மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பற்றி பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் உணர்வதற்கும் தங்களை தூய்மை உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.


உலகில் உள்ளோர் எல்லோரும் சாதி சமய மதங்களைச் சார்ந்தவர்கள்தான்,என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.


சன்மார்க்கத்திற்கு வந்த பின்பு விட வேண்டியவைகளை அகமும் புறமும் விட்டுவிட்டேன் சுத்த சன்மார்க்கி என்று என்னால் உறுதியாக சொல்ல முடிகிறது. என்னைப்பற்றி எனக்குத்தான் தெரியும்,என்னுடன் பழகிக் கொண்டு இருக்கும் சன்மார்க்கிகளுக்குத் தெரியும்


முடிந்த அளவு பற்று அற்ற வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறேன்.


வேஷம் போட்டு எனக்கு நடிக்கத் தெரியாது.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார் என்ற உணர்வு வந்தால் தவறு செய்வதற்கு தோன்றாது.


ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் காலம் நேரம் வரும்போது அவரவர்களுக்கே உண்மைகள் வெளிப்படும்.


அப்போது பாடுபட்டோம் பயன் அறியோம் பாழ்க்கு இறைத்து கழித்தோம் என்ற வேதனையும் வருத்தமும் உண்டாகும். 


காலம் உள்ளபோதே வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின்பற்றுவோம்


கூச்சல் குழப்பம் வேண்டாம். 


அன்பு தயவு கருணைக்கு தடையாக இருப்பவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றின் தொடர்புகள் யாவையும் விட்டுவிட்டால்தான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கின்ற அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகள் விலகி அருள் சுரக்கும் என்ற உண்மை விளங்க வேண்டும்.


உடம்பு உயிர் ஆன்மா அணுக்களின் மாற்றங்கள் தன்னைத்தானே சுழற்சி முறையில்( வேதியல்) தயார் படுத்திக் கொள்ளும்.


அவ்வாறு முயற்சியுடன் இருந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம் வெற்றி நிச்சயம்.


இதற்கு படிப்பு அறிவை விட,ஒழுக்கம் நிறைந்த ஆன்ம அறிவு மிகவும் முக்கியம்.



ஆன்மநேய அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் 

நன்றி

 

அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

*9865939896.*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு