திங்கள், 31 அக்டோபர், 2022

கடவுளைக் கண்டேன் ! தொடர்ச்சி 8.

 *கடவுளைக் கண்டேன் !*


தொடர்ச்சி பாகம் 8.


*1970 ஆம் ஆண்டு கர்பமான என் மனைவி அமுதாவிற்கு 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் திங்கட்கிழமை அழகான பெண் குழந்தை பிறந்தது, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது. உற்றார் உறவினர்கள் நண்பர்களை அழைத்து விருந்துவைத்து பெண் குழந்தைக்கு *"சுமதி"என்று பெயர் சூட்டினோம். அன்று ஏழை எளியவர்களுக்கு எங்களால் முடிந்த உதவி செய்தோம்.*


*வள்ளலார் பாடல் !*


திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்

சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்


தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே

திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே


*உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க*

உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்


மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க

வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே! 


*மேலே கண்ட பாடலில் கண்டபடி எங்களின் அன்புகலந்த உடல் உறவின் உணர்ச்சியால் இறைவனுடைய திருஅருளால்,இரண்டாவதாக கிடைத்த பரிசு பெண் குழந்தையாகும்*எங்கள் வீட்டில். உருவிளங்கியது, உயிர் விளங்கியது உடம்பு காட்சியாக சாட்சியாக தோற்றம் அளித்தது.* 


*அன்பு பாசம் ஆனந்தம் மகிழ்ச்சி திருப்தி இன்பம் பொங்கி,பெண் குழந்தை பிறந்த தருணத்தில் வீட்டில் எல்லோருக்கும் பேரானந்தம் தனிச்சிறப்பு மகிழ்ச்சியுடன் விளங்கியது.*


*ஆண் ஒன்று,பெண் ஒன்று இரண்டு குழந்தைகள் போதும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளலாம் என்று எனது மாமனார் மாமியார் சொன்னார்கள்.காரணம் மகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக,* 


*நாங்கள் மேலும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பியதால் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்பவில்லை*


*நான் விரும்பிய கடவுள்!*


*எங்கள் அப்பா பெயர் சென்னிமலை, என்பெயர் கதிர்வேல்,என் அண்ணன் பெயர் சண்முகம் ஆதலால் முருகர்கடவுள் மேல் எனக்கு பக்தியும் ஆர்வமும் அதிகமானது. ஆதலால் பழனி முருகன்மேல் கண்மூடித்தனமான அளவுகடந்த பக்தி உண்டாயிற்று. ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்திற்கும் தவறாமல் பழனி முருகன் கோயிலுக்குச் சென்று  வழிபடுவது வழக்கமாக வைத்திருந்தோம்.*


*மூன்றாவது குழந்தை பிறந்தது!*


*மீண்டும் என்மனைவி கர்பமானாள் 1973 ஆண்டு ஆகஸ்டுமாதம் 27 ஆம் தேதி திங்கட்கிழமை அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனந்தம் ஆனந்தம் அளவில்லா ஆனந்தம்* 


*குடும்பமே கோலாகலம் உற்றார் உறவினர் நண்பர்கள் அழைத்து விருந்து வைத்து "நந்தகுமார்" என்று பெயர் சூட்டினோம்* 


*இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை போதும் என்று முடிவு செய்து மனைவிக்கு குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டோம்*


*அப்போது எனக்கு 25 வயது என் மனைவிக்கு 23 வயது, எங்களது இளமை வயதிலே மூன்று குழந்தைகளுக்கும் தாயாகவும் தந்தையாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் போதும், மேலும்   குழந்தை வேண்டாம் என்பதை உணர்ந்து குழந்தை பாக்கியத்தை நிறுத்திக் கொண்டோம்*


*மூன்று குழந்தைகளுக்கும் நல்ல தாயாகவும், நல்ல தந்தையாகவும் திருவருள் துணையுடன்  பாதுகாப்புடன் நல்ல அறிவு சார்ந்த குழந்தைகளாக படிக்க வைத்து வளர்த்து வந்தோம்.* 


*வள்ளலார் பாடல்!*


தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்


வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்


காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்


சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!


*உண்மை தெய்வம்!*


*நாம்தான் குழந்தைகளை பெற்று வளர்க்கின்றோம், தாங்குகின்றோம் காப்பாற்றுகின்றோம்,பாதுகாக்கின்றோம் என நினைத்துக் கொண்டுள்ளோம் அது உண்மையல்ல.ஆன்மாக்கள் உயிர்எடுத்து உடம்பு உண்டாவதற்கு மனித தேகத்தில் உள்ள தாயும்தந்தையும் ஒரு உபகாரக் கருவியாக  இருக்கின்றோம் அவ்வளவுதான்*,


*தாயாகவும் தந்தையாகவும்  தாங்குகின்ற ஒரே தெய்வம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற அருள்பேரொளியாகும்.அந்த ஒளியின் ஏகதேசமே ஆன்மாக்களாகும் இந்த உண்மை சன்மார்க்கத்திற்கு வந்த பிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது விளங்கியது. நாம் செய்யும் நன்மை தீமைகளுக்குத் தகுந்தாற்போல் ஆன்மாக்கள் நமக்கு குழந்தைகளாக வந்து பிறக்கும். இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் நன்மையே செய்து  வாழ்ந்து பழகிக்கொண்டால், நமக்கு பிறக்கும் குழந்தைகளாலும் மற்றவர்களாலும் நமக்குத் துன்பம் துயரம் அச்சம் பயம் வராது பாதுகாத்துக் கொள்ளும் சூழ்நிலையைஎல்லாம் வல்ல பரம் பொருளான இறைவன் உண்டாக்குவார் என்ற உண்மையை தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.* 


*(எங்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகளும் நல்ல குழந்தைகள்தான் இறுதியாக பிறந்த ஆண்மகன் நந்தகுமார் வீட்டில்தான் நானும் என் மனைவியும் தற்சமயம் இருக்கிறோம்.எங்களுக்கு எந்த குறைபாடும் இல்லாமல் தேவையான எல்லா வசதிகளும் செய்து கொடுத்துக்கொண்டு வருகிறார்கள் நாங்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றோம்)*


*மூன்று குழந்தைகள் பிறந்ததும் குழந்தைகளின் படிப்பு  வசதிக்காக  சிறிய வாடகை வீட்டில் இருந்து,பள்ளியின் அருகாமையில் உள்ள பெரிய வீட்டிற்கு குடி பெயர்ந்தோம்.மனைவியின் வேலை பளுவை உணர்ந்து வீட்டுவேலைக்கு வேலைக்காரியை வைத்துக் கொண்டோம்.*

*குழந்தைகளை அருகாமையில் உள்ள பாரதிய வித்யாபவன்,கலைமகள் கல்வி நிலையம்,செங்குந்தர் கல்வி நிலையம் போன்ற பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தோம்.*


*நமக்கும் பிறக்கும் குழந்தைகளை வேற்றுமை பாராமல் அனைவரையும் சமமாக பாவிக்கும் உரிமையை வளர்த்து கொள்ள வேண்டும் அதுவே தாய் தந்தையரின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்*


*அதேபோல் கணவன் மனைவியின் அன்பு பாசம் இரக்கம் ஈகை கருணை  ஒத்து இருக்க வேண்டும்.அதுவே நல்ல இல்லறமாகும்.நாங்கள் இதுவரை எல்லாவற்றிலும் அப்படித்தான் ஒத்த கருத்துடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையுடன் அறிவு தெளிவுடன் வாழ்ந்து வருகிறோம்.*


*முதன் முதலில் ஸ்கூட்டர் வாங்கியது !*


*ஈரோட்டில் தையல் தொழில் செய்பவர்களில் முதன் முதலில் பைக் வாங்கியவன் நான்தான் என்ற பெருமை, லேம்ரெட்டா என்ற நீளமான ஸ்கூட்டர் வாங்கினோம்.அதில் நான் என்மனைவி மூன்று குழந்தைகளும் சேர்ந்து ஐந்து பேறும் செல்வோம், நாங்கள் செல்லும்போது எங்களை எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள்.*


*குழந்தைகள் வளர்ந்தன குடும்பம் பெரிதாகியது,குடும்பசெலவு அதிகமானது, தொழிலும் வளர்ந்தது ஓய்வு இல்லாத உழைப்பு, நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை.*


*எங்கள் கடைக்கு போன் !*


*செல்போன் இல்லாத காலம், மத்திய அரசாங்கத்தின் லேண்ட் லைன் போன் மட்டுமே உண்டு. வசதியானவர்கள்,பெரிய  வியாபாரிகள் மட்டும்தான் வைத்திருப்பார்கள்.அக்காலக் கட்டத்தில் தையல் கடைக்கு முதன் முதலில் போன் வைத்தது *ஸ்பென்ஸர்ஸ்* *என்ற எங்கள் தையல் கடைக்குத்தான் மத்திய அரசின் தொலைத்தொடர்பு  வாங்கினோம் போன் நெம்பர் 5657 என்ற எண்.* 


*தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பவானி குமாரபாளையம் மக்களின் விருப்பத்திற்காக பவானி மெயின்ரோட்டில் ஒரு பெரிய ஷோரூம் "ஸ்பென்ஸர்ஸ" கிளை என்ற பெயரில் JKK முனிராஜா அவர்களால் திறப்புவிழா செய்து ஆரம்பித்தோம்* *தொழில் ஈரோட்டிலும் பவானியிலும் அமோக வளர்ச்சி அடைந்தது* 


*தொழில் வளர்ச்சி அடைந்தும் வருமானம் பெறுகியும் சொந்த வீடுகட்டவோ வாங்கவோ சூழ்நிலை அமையவில்லை.* அதன் காரணத்தை அடுத்த கட்டுரையில் தெரியப் படுத்துகிறோம்


*வருமானவரி அதிகாரிகள் சோதனை*


தொடரும்...


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு