ஞாயிறு, 13 ஜூன், 2021

உலக அதிசயம் ! உலக ரகசியம்!

 *உலக அதிசயம் ! உலக ரகசியம்!*


வடலூரில் வள்ளலார் தோற்றுவித்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் காட்டும் மேடைக்கு (முன்பு) வெளியே  சிற்சபை பொற்சபை என்று வலதுபுறமும் இடதுபுறமும் ஒருசிறிய கோபுரம் போல் அமைத்து கதவு வைத்து பூட்டு போட்டு இருப்பார்கள்.

தினமும் கதவு திறந்து ஞானசபை பூசகர் சிற்சபை பொற்சபை தீபாராதனை காட்டிவிட்டு ஜோதிதரிசனம் காட்டுவது வழக்கம்.


அந்த *சிற்சபை பொற்சபைக்குள் துருபிடிக்காத   இரண்டு இரும்பு பெட்டிகள் இருக்கிறது.* *அதன் உள்ளே என்ன இருக்கிறது என்ற விபரம் இதுவரையிலும் ஒருவருக்கும் தெரியாது*  


அந்த பெட்டியில் மூடியோ சாவிபோடும் துவாரமோ கிடையாது *நான்கு சதுரமாய் மோல்டா கனமான பெட்டி இருக்கும்* அவற்றை திறந்து பார்க்கும் வாய்ப்புக்கள் தைரியம் எவருக்கும் கிடையாது.

இதுவரையில் எவரும் உடைத்து பார்க்கவும் இல்லை. ஏன்? என்றால் அதனுள் என்ன இருக்குமோ என்ற பயம்தான் காரணம்.


*மேட்டுகுப்பம் சித்திவளாகத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற அறையில் இருந்த பெட்டிகள்தான் அந்த இரண்டு பெட்டிகளும்.* 


*இரண்டு பெட்டிகளும் சத்திய ஞானசபைக்கு எப்படி வநத்து* ?


வள்ளலார் சித்தி அடைந்தபின் வள்ளலார் உடன் இருந்த அன்பர்கள் அவரவர் ஊர்களுக்கு சென்று அவரவர் பணிகளை கவனிக்க சென்றுவிட்டனர்.


வள்ளலார் உடன் இருந்தவர்களில் சபாதி சிவாச்சாரியாரும் ஒருவர். அவர் மட்டும் வடலூர் விட்டு வெளியே செல்லவில்லை.உள்ளூர் மக்கள் ஆதரவுடன் ஞானசபையை தன்வசமாக வைத்துக் கொண்டு வழிபாடு செய்ய துவங்கிவிட்டார். வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமாக வழிபாட்டு முறைகளை தனக்கு சாதகமாக சிலவற்றை  மாற்றிக் கொண்டார்.( அவற்றைப்பற்றி வேறு கட்டுரையில் தெரிந்து கொள்வோம் ) 


*சபாபதி குருக்கள்  செய்த சூழ்ச்சி!*


மேட்டுகுப்பம் வள்ளலார் சித்திபெற்ற சித்தி வளாகத்தின் அறை சாவி அவ்வூர் மணியக்காரரிடம் பாதுகாப்பாக இருந்தது. சபாபதி குருக்கள் மணியக்காரரிடம் அன்பாக பேசி அறை சாவியை பெற்றுக்கொண்டார்.வள்ளலார் உடன் இருந்தவர் என்பதால் நம்பிக்கையுடன் சாவியை கொடுத்து விட்டார்.


ஒருநாள் யாருக்கும் தெரியாமல் வள்ளலார் சித்திபெற்ற திருவறையை திறந்து அங்கு இருந்த இரண்டு பெட்டிகளிலும்.

வள்ளலார் என்ன வைத்துள்ளார் என்பதை அறிந்து   கொள்ளவும் கைபற்றவும் உடைக்க முயன்று பெரிய இரும்பு சுத்தியால் தட்டி உள்ளார்.உடைக்க முடியவில்லை சத்தம்தான் வெளியில் வந்த்து.


*மணையக்காரர் வீடு அருகில்*.


அருகில் வசித்துவரும் மணியக்காரர் காதில் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டு சித்திவளாகத்திற்கு வந்துள்ளார் .

மணையக்காரர் வருவதை அறிந்து கொண்ட சபாபதி குருக்கள் உடனே ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.


அய்யா வாங்க வாங்க நல்ல நேரத்தில் வந்தீர்கள்.இந்த இரண்டு பெட்டியையும் வடலூரில் சத்திய ஞானசபையில் உள்ள சிற்சபை பொற்சபைக்குள் வைத்து மக்கள் வழிபாட்டிற்கு வைத்துவிடலாம் என்றார்.

குருக்கள் சொல்வது நல்லதுதானே என எண்ணி இரண்டு பெட்டிகளையும் மணையக்காரர் வண்டிகாரனிடம் சொல்லி தங்கள் மாட்டு வண்டியிலே ஏற்றி வடலூர் கொண்டுவந்து சத்திய ஞானசபையில் சேர்த்துள்ளார். 


இப்போதும் சிற்சபை பொற்சபையில்  வைத்து வழிபாடு செய்துவருவது அந்த இரண்டு பெட்டிகளேயாகும்.


*இந்த விபரம் 40 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுகுப்பம் மணியக்காரர் பேரன் மகன் வாயிலாக எங்களிடம் சொல்லக் கேட்ட உண்மை செய்தியாகும்* அவரும் மரணம் அடைந்துவிட்டார்.


*இரகசியம் அதிசயம்!* 


*இன்றுவரை அந்த பெட்டிகளின் உள்ளே வள்ளலார் என்ன வைத்துள்ளார் என்பது ஒருவருக்கும் தெரியாது* *உடைக்கவும் முடியாமல் திறக்கவும் முடியாமல் அப்பெட்டிகள் உள்ளன*. *இதுவே உலக அதிசயமாகும். உலக ரகசியமாகும்.* 


வள்ளலார் போல்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பூரண அருள்பெற்று மரணத்தை வென்ற அருளாளர்கள் வந்தால்தான் அந்த இருபெட்டிக்குள் என்ன இருக்கின்றது என்பது தெரியவரும்.


*அவ்வாறு அருள் பெறும் தகுதி உங்களில் ஒருவராகவும் இருக்கலாம்.* *நானாகவும் இருக்கலாம்* 


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யாரைத் தேர்வு செய்வார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்


அதுவரையில் காத்திருப்போம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !.


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு