திங்கள், 18 மே, 2020

கொரோனோவிற்கு அருள் மருந்து !

*கொரோனோ விற்கு அருள் மருந்து* !

கொரோனோ என்னும் தொற்று வைரஸ் உயிர்க்கொல்லி.உலகம் முழுவதும் எமன் போல் மக்களை பயமுறுத்துகிறது

உலக மருத்துவ அறிவியல் ஆயவகம் இந்த வைரஸை கிருகியை அழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.எந்த வைரஸ் கிருமியையும் அழிக்க முடியாது.மனித உடம்பில் புகாமல் அகற்ற முடியும்.அதுதான் மருத்துவம்.

உயிர்க்கொலை செய்பவர்களையும்.அதன் புலால் உண்பவர்களையும் வைரஸ் கிருமி தொற்றுவதற்கு அதிக வாய்ப்பும் வசதியும் உள்ளது.

இப்போது தமிழ்நாட்டில் சென்னையில் அதிகமாக கொரோனோ வைரஸ் கிருமி தொற்று மக்களை பயமுறுத்திக் கொண்டு உள்ளது.மக்கள் மரண பயத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்

அரசாங்கமோ மருத்துவகழகமோ மருந்துகளோ மக்களை காப்பாற்றுவது மிகவும் கடினமானதாகும் இறைவன் அருள்தான் காப்பாற்ற முடியும்.

வள்ளலார் காலத்தில் நடந்த அதிசய சம்பவம்!

 திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன்தார் *திரு.அப்பாசாமி பண்டாரியார்* அவர்களுக்கு இரண்டு மனைவிமார்கள்.

*ஒருமனைவிக்கு பிரம்ம ராட்சதபேய்.ஒருமனைவிக்கு தீராத வயிற்றுவலி*.

*பார்க்காத மருத்துவம் இல்லை.வணங்காத கடவுள்கள் இல்லை.செய்யாத பரிகாரங்கள் இல்லை.எந்த வழியாலும் குணப்படுத்த முடியவில்லை*.

வள்ளல் பெருமகனார்க்கு நெருக்கமான அன்பர் ஒருவர் ஜமீன்தாரிடம் .ஐய்யா நான் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள் நல்லது நடக்கும் என்றார்.சொல்லுங்கள் என்றார் ஜமீன்தார்.

வடலூரில் வள்ளலார் என்ற ஒரு அருள் ஆற்றல் மிகுந்த ஞானி உள்ளார் அவரைத் தொடர்பு கொண்டு வரவழைத்தால் உங்கள் மனைவிமார்கள் இருவரும் நிச்சயம் குணமடைவார்கள் என்றார்.

சரி அப்படியே செய்கிறேன் என்று அதற்குண்டான ஏற்பாடுகளை செய்தார்.

வேட்டவலம் ஜமீன் பங்களா முன் அருகில் வள்ளலார் வந்தார்.மாடியில் பேய் பிடித்து ஆடிக்கொண்டு இருந்த மனைவி இங்கே வராதே !  இங்க வராதே! என்று வள்ளலாரைப் பார்த்து சத்தம் போட்டு கத்திக் கொண்டே மாடியில் இருந்து வள்ளலார் கால்கள் முன் விழுந்தது.

ஜமீன்தார் முதல்கொண்டு எல்லோரும் பயந்து போனார்கள் அருகில் சென்று அந்த பெண்ணை தூக்கச் சென்றார்கள்..
வள்ளலார்.பிச்.என்ற வார்த்தையை அதட்டாலாகச் சொல்லி அருகில் செல்லாதீர்கள் தூக்காதீர்கள் தொடாதீர்கள் என்றார்.

சற்று நேரத்தில் பேய்பிடித்த மனைவி எழுந்து கணவர் ஜமீன்தார் பக்கத்தில் மிகுந்த அடக்கத்துடன் அச்சம் நாணம் மடம் பயிற்பு போன்ற அடக்கத்துடன் சென்று நின்று கொண்டார்.கீழே விழுந்ததுதில் உடம்பில் எந்தவிதமான அடியோ காயமோ தோன்றவில்லை.பேய் எப்படி போனதென்றே தெரியவில்லை.

மேலும் வள்ளலார் அரண்மனையின் உள்ளே சென்றார்.கட்டிலில் தீராத வயிற்று வலியுடன் துடித்துக் கொண்டு இருந்த மனைவி.வள்ளலாரைக் கண்டவுடன் எழுந்து வணக்கம் சொல்லி காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்று கணவரின் அருகில் சென்று நின்றுகொண்டது.

இவற்றை எல்லாம் நேரில் கண்ட ஜமீன்தார் ஆனந்த கண்ணீர் மல்க தன்னுடைய இரண்டு மனைவிமார்களுடன் வள்ளலார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்கள்.

மேலும் ஜமீன்தார் வள்ளலாரை வணங்கி என்னுடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் துன்ப்பட்டுக் கொண்டு இருந்தேன்.உங்கள் வருகையால்  அருளால் இருள் அகன்று ஒளியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாக்கி விட்டீர்கள் எனவே என் சொத்துக்களை எல்லாம் நீங்கள் விரும்பிய வண்ணம் எழுதிவைத்து விடுகிறேன் ஆணை யிடுங்கள் என்றார்.

அவற்றை கேட்டுக் கொண்டுஇருந்த வள்ளலார் நீங்கள் எப்போதும் போல் ஏழை எளிய மக்களுக்கு நன்மை செய்து வந்தாலே போதுமானது எதற்கும் எழுதிவைக்க வேண்டாம்.

.அதேநேரத்தில் ஒரு வேண்டுகோள் செய்வீர்களா ?என்றார் வள்ளலார். சொல்லுங்கள் அய்யா கண்டிப்பாக செய்கிறேன் என்றார்.

உங்கள் ஜமீனுக்கு உட்பட்ட ஆலயங்களில் *கடவுள் பெயரால் எங்கும் உயிர்பலி செய்யக்கூடாது என்றார் வள்ளலார்.அதேபோல் ஜமீன்தார் *ஆலயங்களில் உயிர்பலி செய்வதை நிறுத்திவிட்டார்.*

ஜமீன்தார் வடலூரில் உள்ள சத்திய தருமச்சாலை. சத்தியஞானசபை.மேட்டுகுப்பத்தில் உள்ள சித்தி வளாகம்.தண்ணீரில் விளக்கு எரிந்த கருங்குழி.வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் ஆகிய இடங்களுக்கு குடும்பத்துடன் அடிக்கடி சென்று வழிப்பட்டுக் கொண்டு வந்தார்.

வடலூரில் உள்ள சத்திய தருமச்சாலைக்கு அரிசி.பருப்பு.தானியங்கள்.காய்கறிகள் வேட்டவலத்தில் இருந்து தொடர்ந்து வண்டி வண்டியாக அனுப்பிக் கொண்டே இருந்தார்.

இருபது ஆண்டுகளுக்கு முன் வேட்டவலம் ஜமீன் வீட்டிற்கு சென்று விசாரித்து வந்தேன்.அப்போது *லலிதாஜமீன்* என்பவர் இருந்தார் அன்புடன் உபசரித்து வள்ளலார் சென்ற பழைய பங்களாவை
சுற்றி காட்டினார்கள்.

பங்களாவின் மாடியில் ஒரு இரும்பு பெட்டியில் ஜமீன்தார் வைத்திருந்த பழைய பதிப்பு திருஅருட்பா ஒன்று இருந்தது அவற்றை என்னிடம் கொடுத்தார்கள்  ஞாபகார்த்தமாக எங்கள் வீட்டில் இருக்கிறது.

இது உண்மையில் நடந்த நிகழ்ச்சியாகும்.

மக்கள் ஒழுக்கத்துடன் வாழ்ந்து தங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்

இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள தனிமனித ஒழுக்கம் அவசியம் தேவை.

*பசித்திருந்து*. *தனித்திருந்து*.
*விழித்திருந்து* உடம்பையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பார் வள்ளலார்.அப்படி வாழ்ந்தால் அருள் பெறும் தகுதி என்னும் *பதவி* தேடிவரும்.

மந்திரத்தின் தந்திரம்!

மேலும் வள்ளலார் அனுபவித்து எழுதி வைத்துள்ள.எல்லா மந்திரங்களுக்கும் மேலான மகாவாக்கிய மகா மந்திரம் ஒன்று உள்ளது
அவற்றை உச்சரித்தாலே எல்லா தீமைகளும்  அகன்றுவிடும்.

அவைதான்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!!

என்னும் மகாவாக்கியமான அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரமாகும்.

*வள்ளலார் பாடல்* !

ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்

நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.!

 ஆதியும் அந்தமும் இல்லாதோர் அம்பலத்திலே ஆடும் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை அவரவர் வீட்டிலும் அணையா தீபம் ஏற்றி படித்துக்கொண்டும் ஓதிக்கொண்டும் இருந்தால் எந்த வகையான தீமைகளும்
நெருங்காமல் இரவு பகல் எந்த நேரமும் காப்பாற்றப்படுவீர்கள்.

எங்குறு தீமையும் எனைத் தொடராவகை கங்குலும் பகலும் மெய் காவல் செய் துணையே !

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே !

என்பார் வள்ளலார்

மேலும் வள்ளலார் எழுதிவைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி அகவல் என்னும் 1596 வரிகள் அடங்கிய செய்யுளைப்
 படிக்க வேண்டும்.தினமும் வீட்டில் ஜோதி ஏற்றிவைத்து பாராயணம் செய்தாலே போதுமானது.

உலகத்தை பயமுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தொற்று நம்மை அணுகாது பாதுகாக்க ஒரேவழி  அருட்பெருஞ்ஜோதி அருள் மருந்து என்னும் மகாவாக்கிய மகாமந்திரமாகும்.

*வள்ளலார் பாடல்* !

புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்

கண்படா திரவும் பகலும்நின் தனையே
கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன்

உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பிலேன் எனது

நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடேல் எனையே!.

என்னும் பாடலிலே உலகிலே வாழ்ந்து அழிந்து போகும் உலகில் உள்ளவர்களை நான் யாரையும் நம்பமாட்டேன்.

என் உடம்பிலே ஆன்ம ஒளியாக இருந்து இரவு பகலாக என்னை இயக்கிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உங்களை மறக்காமல் கண் உறங்காமல் இரவும் பகலும் என் உள்ளத்திலே நினைவிலே இடைவிடாது வைத்து நினைந்து போற்றி வாழ்ந்து வருகிறேன்.

எனவே என்னை கைவிடாமல் காப்பாற்ற வேண்டியது உன்கடமையாகும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார்.

வள்ளலார் காட்டிய இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டால் *நம் உடம்பிலே அருள் ஆற்றல் பெருகி எதிர்ப்பு சக்தி அதிகரித்துவிடும்.*

எவ்வகையான தீமைகளை உண்டாக்கும் தொற்று வைரஸாக இருந்தாலும் நாம் பயப்பட வேண்டிய தேவை இல்லை. நம்மை கண்டால் பயந்து ஓடிவிடும்.

*வேட்டவலம் ஜமீன்தார் மனைவிமார்களுக்கு மருந்து மாத்திரை கொடுக்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் துணையால் குணமாக்கினார்.வள்ளலார்*.

நாமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணைக்கொண்டு மகாமந்திரத்தை ஓதி ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
காப்பாற்றிக் கொள்ளலாம்.

உலக மக்களின் அறியாமையை போக்கி நல்வாழ்வு வாழவைக்கவே .
எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்  தான் வள்ளலார் என்பதை மறந்து விடாதீர்கள்.

வள்ளலார் யார் ? என்பதை உலக மக்கள் தெரிந்து கொள்ளும் தருணமே இத்தருணமாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு