செவ்வாய், 3 டிசம்பர், 2019

சாகும்கல்வி ! சாகாக்கல்வி !

*சாகும் கல்வி ! சாகாக்கல்வி !*

கல்வி என்பது அன்பு,அறிவு,ஒழுக்கம்,போன்ற நற்குணங்களைப் பெற்றுத் தருவதாகும்.ஆனால் இன்று கல்வி என்பது பொருள் ஈட்டுவதற்கு மட்டும் பயன் தரக்கூடியதாக உள்ளது.அதுவும் நேர்வழியில் பணம் சம்பாதிக்க அந்த கலவி பயன்படாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது .

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் கல்வி ,அவர்களையும் அவரை சார்ந்தவர்களையும் அழித்து விடுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
கல்வி என்பது புத்தியை வளர்த்து கொள்ளாமல். அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் .தங்களைப் போல மற்றவர்களையும் வாழ வைக்கும் பண்பு உடையதாக இருக்க வேண்டும் .அன்பு,அறிவு ஒழுக்கம் நேர்மை,வாய்மை,
தூய்மை.உண்மையான சுயநலமற்ற
ஜீவகாருண்யம்.பொதுவான இரக்ககுணம் எதிலும் பொது நோக்கம் உள்ள கல்வியே சிறந்த கலவியாகும்.எந்த உயிர்களையும் அழிக்காமல் வாழ வைக்கும் கல்வியே சிறந்த கல்வியாகும்..கொலை செய்யாமை ,புலால் உண்ணாமை ஜீவகாருண்யம்
போன்ற ஒழுக்கத்தை கடைபிடிப்பதே சிறந்த கல்வியாகும் .

கல்வி இரண்டு வகைப்படும் !.

வள்ளலார் பாடல் !

துன்மார்க்க நடையிடைத் தூங்குகின் றீரே
தூக்கத்தை விடுகின்ற துணைஒன்றும் கருதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர்
சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர்
பன்மார்க்கம் செல்கின்ற படிற்றுளம் அடக்கீர்
பசித்தவர் தம்முகம் பார்த்துண வளியீர்
என்மார்க்கம் எச்சுகம் யாதுநும் வாழ்க்கை
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!

ஒன்று சாகும் கல்வி,மற்றொன்று சாகாக்கல்வி ! எந்தவகையிலும் சுயநலத்திற்காக பொருள் சேர்ப்பது சாகும் கல்வியாகும்.

அறிவுக் கல்வியைக் கற்றுக் கொண்டு இறைவன் அளிக்கும் அருளைப் பெறுவது சாகாக்கல்வி யாகும்....சாகாக் கல்வியைக் கற்று வாழ்வதே மனித பிறப்பின் லஷ்யமாகும் .இதை அறிந்தவன் எவனோ அவனே மனிதன்.அவனே இறைவன் .மனிதனும் தெய்வமாகலாம் என்பது சாகாக் கல்வியாகும் ...

சாகாக் கல்வியை கற்றுத் தருவது ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும் .அவர்தான் உலக மக்களுக்கு சாகாக் கல்வியை கற்கும் வழியைக் காட்டி உள்ளார் .அனைவரும் படித்து அதன் வழியில் தனிமனித ஒழுக்க நெறி நின்று மேல் நிலைக்கு செல்லலாம்...

வள்ளலார் மக்களுக்கு போதிக்கும் பாடலைப் பாருங்கள் !

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமேதனித்த பூரண வல்லபம்

வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழிலாகும் இந்நான்கையும் ஒருங்கே

வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறை
வான வரமே இன்பமாம்

மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபு என்று உரைத்த குருவே

தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்தேற்றி அருள் செய்த சிவமே

சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே .

மனிதன் மரணம் அடையாமல் ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் அருளைப் பெறுவதே சாகாத கல்வியாகும்.அதற்கு வழி என்ன வென்றால் .

கடவுள் ஒருவரே என்று அறிந்து கொள்ளும் அறிவே மனித அறிவாகும்.அந்த அறிவினால். உடம்பையும் உயிரையும் ஆன்மாவையும் தெரிந்து கொள்ள முடியாமல் மறைத்துக் கொண்டு இருக்கும் ,ஆணவம் ,மாயை,மாமாயை ,பெருமாயை ,கன்மம் ,போன்ற ஐந்து மலங்களையும் வென்று ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை அஞ்ஞானம் என்னும் திரைகளை நீக்கும் வழியைத் தெரிந்து கொள்ளும் வல்லபமே சிறந்த வல்லபமாகும்.

உடம்பானது மண்ணுக்கோ,
நீருக்கோ. நெருப்புக்கோ,
காற்றுக்கோ.
கதிர்வீச்சுக்கோ,
எமனுக்கோ,
கொலைக்கருவிக்கோ ,பிறர் இயற்றும் கொடுஞ் செயலுக்கோ வேறு ஏதாவது அறிவியல் .விஞ்ஞான கதிர்வீச்சுக்கோ.வேறு பல தீய சக்திக்கோ ,மற்றும் எதனாலும் அழிக்க முடியாத உடம்பையும்.உயிரையும் காப்பாற்ற வேண்டுமானால் வேகாத கால் என்னும் அருள் காற்றை முழுமையாக சுவாசிக்க வேண்டும்.

காற்றில் நான்கு வகைகள் உள்ளன..

பூதக்காற்று.
அசுத்தக்காற்று.
விஷக்காற்று.
அமுதக்காற்று என நான்குவிதமான காற்று இவ்வுலகில் உள்ளன.

நாம் சுவாசிக்கும் காற்று பூதக்காற்று.விஷக்காற்று.அசுத்தக்காற்றை மட்டுமே சுவாசிக்கிறோம்.
அமுதக் காற்றை சுவாசிப்பதில்லை.

வேகாத காலாகிய அம்முதக் காற்றை சுவாசித்து அருள் உடம்பாக மாற்றும் தொழிலே சிறந்த தொழிலாகும்.அதாவது நாம் செய்யும் மெய்த் தொழிலாகும் .

உண்மைக்கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு வாழ்வதே பேரின்பமாகும்.அதுவே ஐந்தொழில் செய்யும் வல்லபமாகும் .அதுவே என்றும் அழியாத இன்பமாகும்.அந்த இன்பத்தைப் பெற்றுக் கொள்வதே மனிதப் பிறவியின் இன்றியமையாத  பிறவிப்பயனாகும்.

என்றும் அழியாத அருளைப் பெற்று ஆன்ம தேகத்துடன் அருள்தேகம் பெற்று (ஒளி தேகம்) வாழ்வதே,சாகாக் கல்வியாகும் மற்ற கல்வி எல்லாம் சாகும் கல்வியாகும்.

சாகாக் கல்வியை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் .சொல்லியதோடு இல்லாமல் வாழ்ந்து வழியைக் காட்டியவர் நமது அருட் தந்தை அருட்பிரகாச வள்ளலார் .

அந்த மாபெரும் அருளாளர் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் சேர்ந்து ,உண்மை ஒழுக்க நெறியான.இந்திரிய.
கரண. ஜீவ .ஆன்ம ஒழுக்கமுடன் வாழ்ந்து அருளைப் பெறுவோம் !மரணத்தை வெல்வோம்.

*இதற்கு இரண்டே வழிதான் ஒன்று ஜீவகாருண்ய ஒழுக்கம்.ஒன்று சத்விசாரம்*.

இறைவனை நினைப்பது எவ்வண்ணம் என்பதை வள்ளலார் பாடலில் காண்போம்.

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங் கண்ணீரதனால் உடம்பு

நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும்நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

 *மரணமிலாப் பெருவாழ்வுக்கு வழி* !

நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை

எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை

சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்

முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.!

மேலே கண்டபாடலில் கண்டுள்ளபடி நினைந்தும் உணர்ந்தும்  நெகிழ்ந்தும் இறைவன் அன்பை பெறுவதற்கும் அருளைப் பெற்று சாகாக்கல்வியை கற்பதற்குண்டான வழியைப் பின்பற்றுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு