வியாழன், 8 மார்ச், 2018

மனித வாழ்க்கை !

[08/03, 17:50] Ethiraj. Gudiyatham: *மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்..*
**********************************************************

சூரியனில்  இருந்து வரும் ஒளிக்கதிர்கள் மனித உடலின் 7 ஆற்றல் மையங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன ..!
*சூரிய ஒளியோடு தொடர்புடைய 7 ஆகர்சன சக்திகளும் இதற்க்கு மூலமாக இருக்கிறது..!!*

மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள் :---

1. #மூலாதாரம்:-
முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம்.
அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல்
#சிவப்பு நிறத்தில் உள்ளது..!
உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.

உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது...!

சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது...

2. #சுவாதிஷ்டானம்:-
இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம்.
தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல்
#ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது.
பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது..

மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது.
பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன...

3. #மணிபூரகம்:-
நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு.
தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில்
#மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது..!

உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது.
கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன...

கணையம் என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன...

4. #அனாகதம்:-
இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு.
மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில்
#பச்சை நிறத்தில் இருக்கிறது...!

அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன...

5. #விசுத்தி:-
இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக
#நீல நிறத்தில் இருக்கிறது..

தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம்.

தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன...

6. #ஆக்கினை:-
இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக
#கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது..

தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது.
இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை...

7. #தூரியம்:-
இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயருகள் உண்டு.
இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில்
#கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது..!

இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது.
என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது..

பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது...!


*************************
[08/03, 18:24] Ethiraj. Gudiyatham: **சித்தர் ரகசியம் (பாகம் -2)*
*********************************

*சித்தர்களின்உண்மைஇருப்பை அறிய , அடைய வேண்டியவர்கள்* மட்டும் அவசியம் படித்து உள்வாங்க வேண்டிய உண்மைகள் ....

* நிறைவான நிலை என்பதை மனிதனாக பிறந்த
ஒவ்வொருவரும் பெற முடியும் அதற்காக
பாடுபட முடியும் ஒருவனுடைய உழைப்பு,
ஆர்வம் எந்த அளவிற்கு நிறை நிலையை
நோக்கியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு
அவன் நிறைவுத்தன்மையை பெறுவான்.
என்று ஆசிய தத்துவங்கள் கூறுகின்றன
அதாவது இறைவனின் அன்பு என்பது
ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல.
அனைவருக்குமே சமமானது தனிப்பட்ட
மனிதரின் விழிப்பு நிலையே அவனை
நிறைவானத்தன்மையை நோக்கி
அழைத்துச்செல்கிறது என்பது இதன்
பொருளாகும். இந்திய சித்தர்களும், இந்த
கருத்தை மையமாக வைத்தே
செயல்படுகிறார்கள் எனலாம். அகல்
விளக்கிலிருந்து வருகின்ற வெளிச்சம்
கவிஞனுக்கும் சொந்தம் கரப்பான் பூச்சிக்கும்
சொந்தம் என்பது சித்தர்களின் முடிவு.
சுருக்கமாக சொன்னால் நிறை நிலையை
ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும் என்று
சித்தர்கள் கூறுகிறார்கள்.

* இப்போது நமக்கொரு சந்தேகம் வருகிறது.
நிறை நிலை என்றால் என்ன? கை இருக்கிறது
கால் இருக்கிறது உழைத்து சேர்த்த சொத்து
சுகமிருக்கிறது கட்டிய மனைவி,
பெற்றபிள்ளை, உற்றார், உறவினர், நண்பர்கள்,
அன்பர்கள் அனைவரும் இருக்கிறார்கள்
எல்லோருக்கும் முடிந்தததை கொடுக்கிறோம்.
தேவையானதை கேட்டு பெறுகிறோம் பசி
இல்லை, நோய் நொடியும் இல்லை
நிறைவாகத்தானே வாழுகிறோம். அப்படி
என்றால் சித்தர்கள் கூறுகிற நிறை நிலை
என்பது இது தானோ? என்பது அந்த சந்தேகம்.
இந்த வாழ்க்கை மனிதர்கள் மட்டும் வாழுகிற
வாழ்க்கை அல்ல. ஏன் எறும்பு, காக்கை, குருவி
கூட இப்படி வாழுகிறது. சித்தர்கள் இந்த
நிறைவை பற்றி பேசவில்லை. அவர்கள்
பேசுவது வேறு நிறைவு. நல்ல வளமான
ஆரோக்கியமான உடலை நிறைவு நிலை
என்பார்கள். சிலர் கண்ணுக்கு தெரியாமல்
வாழ்வது, காற்றிலே பறப்பது போன்ற
சித்துக்களை கற்றுக்கொள்வது தான் நிறைவு
என்பார்கள். சிலர் ஒழுக்கம் கெடாமல் உயர்ந்த
வாழ்க்கையை கம்பீரமாக வாழ்வதே நிறைவு
என்பார்கள். சிலர் கடல் பொங்கி எழுந்தாலும்
கலங்கிடமாட்டோம் அண்டம் சிதறினாலும்
அஞ்சிட மாட்டோம் என்று அஞ்சாமல் வாழ்வது
நிறைவு என்பார்கள் சிலர்.

* இந்த நிறைவுகள் எதுவுமே நிறைவுகள்
அல்ல. உலகுக்கும், உயிர்களுக்கும்
காரணமான மூலப்பரம்பொருளை கண்ணுக்கு
தெரியாமல் கருத்தினுள் நிறைந்து நிற்கும்
இறைவனை இறைவன் தன்மையை
முழுமையாக உணர்ந்து நெஞ்சத்தில் நிறுத்தி
ஒவ்வொரு வினாடியும் ஆனந்தத்தை
அனுபவிப்பததே உண்மையான நிறைவு
என்பது சித்தர்கள் மிக கடைசியாக
உண்மையை சாரமாக்கி கூறும் செய்தியாகும்.
ஏதாவது ஒரு காலத்தில் மற்ற நிறைநிலைகள்
அதாவது உடல் மனது ஆன்மா இவைகள்
மூலம் பெறுகின்ற நிறை நிலைகள் கலங்கி
நிற்கலாம். அழிந்தும் போகலாம். ஆனால்
ஆண்டவனில் ஆனந்திக்கும் நிறைவு நிலை
எப்போதுமே சாஸ்வதமாக நிலைத்து நிற்கும்
என்பது சித்தர்களின் கருத்து இங்கே
கூறப்படும் நிறைவு நிலை என்பதை முக்தி
என்ற தத்துவத்தோடு இணைத்து சிந்தித்தால்
சித்தர்களின் சித்தாந்தம் எவ்வளவு
விசாலமானது என்பது நமக்கு தெரியும்.

* இந்த உலகத்தில் பல புரட்சிகள்
நடந்திருக்கின்றன. மிகப்பெரிய தொழில் புரட்சி
என்பது இங்கிலாந்து நாட்டில் நடந்தது ஒரு
மிகப்பெரும் அலையானது புறப்பட்ட
வேகத்தில் எதிரே இருக்கின்ற எல்லாவிதமான
சரக்குகளையும் எப்படி புரட்டி
போட்டுவிடுமோ அப்படி புரட்டி போட்டது
தொழில் புரட்சி. தொழில் புரட்சியால் ஏற்பட்ட
முதலாளி - தொழிலாளி என்ற வர்க்க
பேதங்களால் வெடித்து உருவானது தான்
காரல்மார்க்ஸ் கண்ட பொதுவுடைமை புரட்சி.
இந்த இரண்டு புரட்சிகளின் விளைவாகவே
பத்தொன்பதாம் நூற்றாண்டும் இருபதாம்
நூற்றாண்டும் உலகம் அலைகழிக்கப்பட்டது
எனலாம். இன்று அந்த புரட்சி அலைகள்
ஓய்ந்து விட்டன. இன்னும் தெளிவாக
சொல்லப்போனால் அந்த அலை வீசியதற்கான
சிறிய சுவடுகள் தான் நம் கண்ணெதிரே இன்று
தென்படுகிறது. மாபெரும் புரட்சிகளான
இவைகள் மறைந்து போனதற்கு என்ன
காரணம்?

* கேள்வி பெரியதாக இருந்தாலும் இதற்கான
பதில் மிக சுலபமானது எளிமையானது. நாம்
காலிலே போடுகின்ற காலணிகளை பத்தாயிரம்
ரூபாய் கொடுத்து வாங்கினாலும் அதை ஒரு
வருடத்திற்கு மேல் உபயோகிக்க முடியாது.
தேய்ந்து அறுந்து பழையதாக போய்விடும்.
ஆனால் அறுபது ஆண்டுகள் ஆனாலும்
அதற்குமேல் காலம் போனாலும் நமது
பாதங்கள் தேய்வதில்லை பழுதாகி
போவதில்லை பழையதாக துருப்பிடிப்பதும்
இல்லை. காரணம் பாதங்கள் என்பது இறைவன்
தந்த சொத்து பாத அணிகள் என்பது நமது
கண்டுபிடிப்பு. மேற்கண்ட புரட்சிகளும் மனித
கண்டுபிடிப்புகளே ஆகும். இந்த புரட்சிகள்
சில சட்டங்களாலும் திட்டங்களாலும்
மனிதனையும் நாட்டையும் மாற்றிவிடலாம்
என்று குழந்தைத்தனமாக கற்பனை செய்கிறது.
மனிதன் என்பவன் மனத்தால் மாறாத வரை
எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை
புரட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை
அதனால் அவர்கள் தோற்றுப்போனார்கள்.

* மனித சமூகம் மாறவேண்டுமானால் மனிதன்
மாறவேண்டும். மனிதனின் மனம்
மாறவேண்டும் அப்போது மட்டுமே நடக்கும்
பாதைகள் ஒவ்வொன்றும் தர்மத்தின் பாதையாக
இருக்கும் தர்மவழியில் நடப்பவனால் மட்டுமே
இறைவனை உணர முடியும். அதனால் தான்
சித்தர்கள் மூடப்பழக்கவழக்கங்களை
இன்னதென்று சுட்டிக்காட்டி தடுத்து
நிறுத்தினார்கள் கடவுள் என்றால் யார்? என்று
மிக கடினமான வார்த்தைகளால் சத்தமிட்டு
சொன்னார்கள் அவரை அடைவதற்கு
தடைகளாக இருந்த காமத்தை, மோகத்தை,
குரூரத்தை வெறுத்து ஒதுக்குங்கள் என்று
கட்டளை போட்டார்கள். நாம் கட்டளைகளை
மட்டும் பிடித்து கொண்டு சித்தர்களை
பார்த்தால் ஆழ்ந்த தத்துவத்தை
உணராதவர்களாகவே போய்விடுவோம்.
சித்தர்கள் இறுதி முடிவாக கூறும் முக்தி
நிலையின் முதல்படியை கூட நம்மால் தீண்ட
முடியாது.

* முக்தி முக்தி என்று மீண்டும் மீண்டும்
சொல்லப்படுவதை கேட்கிறோம். இந்த
வார்த்தைக்கு அர்த்தம் என்ன? எல்லாம் அறிந்த
சித்தர்கள் மனிதரின் இறுதி லட்சியம் முக்தி
என்று கூறுவதற்கு காரணம் என்ன? என்று
நமக்கு தோன்றும் நமது இந்திய ஞானிகளும்,
சித்தர்களும் இரண்டுவிதமான முக்திகளை
காட்டுகிறார்கள். ஒன்று நீர், நெருப்பு, நிலம்,
காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்களின்
கலவையால் உருவான இந்த உடலை
விட்டுவிடாமல் இதிலேயே தங்கி கொண்டு
அடைகின்ற ஜீவன் முக்தி மற்றொன்று
கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கின்ற பறவை
விடுதலை பெற்று சிறகடித்து பறப்பதை
போல உடல் என்ற கூண்டை உடைத்து ஜீவன்
பறவை அடைகின்ற விதேக முக்தி அதாவது
உடல் இருக்கும் போது இறை அனுபவத்தை
பெற்றால் அது ஜீவன் முக்தி இல்லாத போது
பெற்றால் அது விதேக முக்தி இந்த
இரண்டுவகை முக்திகளே ஒவ்வொரு ஜீவனும்
பெறவேண்டும் என்று சித்தர்கள்
விரும்புகிறார்கள்.

* முக்தி நிலையை பற்றி பேசாத பெரியவர்கள்
இல்லை. இந்தியாவில் முக்திக்கு
கொடுக்கப்படுகின்ற விளக்கங்களை எல்லாம்
ஒன்று சேர்த்து திரட்டினால் அது இமய
மலையை விட பெரியதாக இருக்கும். இந்திய
பெருங்கடலை விட ஆழமாக இருக்கும்.
அதிலும் குறிப்பாக சித்தர்கள் முக்திக்கு கூறி
இருக்கின்ற விளக்கங்கள் பொருள்
பொதிந்ததாகும்.

* சித்தர்கள் நாத்திகவாதிகள் போல கடவுள்
வாதத்தை பல்முகநோக்கில் அலசி
ஆராய்ந்ததற்கும் பெண்மோகம் என்ற காம
எண்ணம் மனிதர்களை விட்டு அகலவேண்டும்
என்று நினைத்ததற்கும் சாதாரண ஜனங்கள்
மத்தியில் வாழாமல் காடுகளிலும்
மலைகளிலும் சுயநலக்காரர்களை போல
மறைந்து வாழ்ந்ததற்கும் மிக முக்கிய காரணம்
இருக்கிறது. கடவுள் மீது வைக்கின்ற
மூடத்தனமான பக்தி வெளிப்புற
ஆச்சாரங்களின் மீது மட்டுமே மனிதர்களை
அடிமைப்படுத்தி வைத்திருக்கும் புறத்தை
தாண்டி அகத்தை தேடி போவதற்கு
சடங்குகளும் சம்பிரதாயங்களும் தடையாக
இருக்கும் என சித்தர்கள் விரும்பினார்கள்
சித்தத்தை அடக்கி ஜீவனை ஒடுக்கி
பரமாத்மாவை நாடுகிற போது மோகம் என்ற
வெறி மனிதரை கீழ்நிலைப்படுத்திவிடும்.
எனவே அதில் எச்சரிக்கையாக இருக்க
வேண்டுமென்று அறிவுறுத்தினார்கள்.
மூடத்தனமும் மோகத்தனமும் அண்டாமல்
வாழ்வது என்றால் தனிமையை நாடு என்று
வழிகாட்டினார்கள் இவைகள் எல்லாம்
எதற்காக? மனிதன் பிறவாத நிலையாகிய
முக்தியை அடையவேண்டும் என்பதற்காகவே

* ஒருநாட்டினுடைய பண்பாட்டை அறிவு
பலத்தையும் தெரிந்துகொள்ள
வேண்டுமானால் அந்தநாட்டு மக்கள்
கடவுளை பற்றியும் ஆத்மாவை பற்றியும்
கொண்ட கருத்துக்கள் என்ன என்பதை அறிந்து
கொண்டாலே போதுமென்று தற்கால
மேலைநாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள்
இந்தியாவில் தொன்றுதொட்டு மக்கள்
மத்தியில் இருக்கின்ற சிந்தனை நம்பிக்கை
முடிவு மனிதன் பிறவி என்ற தளையிலிருந்து
மீண்டு பிறக்காத நிலையை அடைந்து
இறைவனோடு இறைவனாக ஐக்கியமாக
வேண்டும் என்பது தான் இதே எண்ணத்தை
வேதங்களும் கூறுகிறது பல நேரங்களில்
வேதங்களையே விமர்சனம் செய்த சித்தர்
இலக்கியங்களும் கூறுகிறது.

* பிறந்ததனால் ஏற்படுகின்ற மரணத்தை பற்றிய
பயம் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் மிக
ஆழமாக பதிந்திருக்கிறது. ஆத்மா என்பது
பிறப்பதும் இல்லை இறப்பதுமில்லை அது
எப்போதுமே அழியாதத்தன்மையோடு
இருக்கிறது என்ற உண்மை தெளிவாக
தெரிந்துவிட்டால் மரணபயம் என்பது
ஏற்படுவதற்கு வழியே இல்லை.மரணபயம்
இல்லாத நிலையை ஆத்ம விடுதலை என்று
நான்கு வேதங்கள் கூறுகின்றன இதை
அடைவதற்கு இறைவழிபாடு புலன்களில்
ஒழுக்கம் மன ஒருநிலைப்பாடு ஆகியவைகள்
தேவை என்று வேதங்கள் நம்புகின்றன.
வேதங்களின் இந்த கருத்துக்களே இந்தியாவில்
உருவான அனைத்து மதங்களும் அனைத்து
தரப்பு ஞானிகளும் கடைசியாக உணர்ந்து
வெளிப்படுத்துகிற செய்திகளாக இன்றுவரை
இருந்துவருகிறது.

* ஆத்மா என்பது அழிவற்றது, மரணம்
இல்லாதது ஆனால் இந்த ஆத்மாவை தாங்கி
நிற்கும் பெளதீக உடல் ஒரு காலத்திற்கு மேல்
நிலைத்திருக்காது அழிந்து போகும்
ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவான சரீரம்
அழிந்து போன பிறகு அதில் இதுவரை தங்கி
இருந்த ஆத்மா கர்மபயன் என்ற
வினைபயனுக்கு ஏற்றவாறு வேறொரு
பிறப்பை நாடிச்செல்கிறது இப்படி மீண்டும்
மீண்டும் பிறந்துகொண்டே இருக்கின்ற ஆத்மா
தனது நிலையறிந்து பிறவாத நிலையை
அடைய வேண்டும் அதுவே முக்தி என்பது
வேதங்களின் உறுதியான இறுதிக்கருத்தாகும்.

* மனிதனின் மனம் ஆசை எனும் செங்கல்களால்
கட்டப்பட்ட மாளிகையாக இருக்கிறது. இந்த
மாளிகைக்குள் காமம் என்ற மனைவியும்,
மோகம் என்ற மக்களும், கோபம் என்ற
உலகப்பற்றும், லோபம் என்ற புலன்
ஆசைகளும் உல்லாசமாக கூடி களித்து
கொண்டிருக்கின்றன. இந்த பிசாசுகளை
பிடித்து அடித்து கழுத்தை நெறித்து
அப்புறப்படுத்தி விட்டால் சஞ்சலமற்ற மனது
அமைதியான நீரோடை போல ஆகிவிடும்.
அதன்பிறகு ஆத்மாவிற்கு உடலை விட்டு
உடல் தேடி போகும் வேலை இருக்காது
பிறவாது இருக்கின்ற பெருநிலையை
அடைந்துவிடும். இதன் பெயர் தான்
பொய்மையிலிருந்து மெய்மைக்கான பயணம்
இருளிலிருந்து ஒளிக்கான பிரவேசம் என்று
வேதங்களுக்கு பின்னால் வந்த
உபநிஷதங்களும் பறைசாற்றுகின்றன.

* மனிதனாக பிறந்தது பாவம் அல்ல.
மனிதப்பிறப்பு பாவத்தின் சம்பளம் அல்ல மிக
உயர்ந்த பிறப்பு மனிதன் என்ற பிறப்பு
ஏனென்றால் ஒரு உயிர் முக்தி அடைய
வேண்டுமானால் அது மனிதனாக பிறந்தால்
மட்டும் தான் முடியும். வானுலக தேவராக
இருந்தாலும் கூட அவரால் முக்தியை அடைய
முடியாது. தேவர்களும் வியர்வையும்
கண்சிமிட்டுதலும் பசியும் உள்ள மனித
உடல்பெற்று பிறக்க வேண்டும் அதன்பிறகே
முக்தி என்ற முழு விடுதலையை அடைய
முடியும். கர்மா என்ற விலங்கால்
பிணைக்கப்பட்ட உயிரானது பிறப்பு வளர்ச்சி
தேய்வு அழிவு என்ற சுழற்சியில் அகப்பட்டு
தத்தளிக்கிறது கர்மாவின் விலங்கை நிஷ்கர்மா
என்ற சம்மட்டி கொண்டு அடித்து உடைத்து
விட்டால் வரம்பில்லாத சக்தி அளவிடமுடியாத
அறிவு எண்ணிக்கையில் அடங்காத இன்பம்
என்ற உத்தம நிலையை முக்தி நிலையை
எட்டி விடலாம் என்று வேதங்கள்
உபநிஷதங்கள் இவைகளின் காலத்திற்கு
பிற்பாடு தோன்றிய ஜைனமகரிஷி, மகாவீரர்
தெளிவு படுத்துகிறார்.

* முக்தி என்றும் ஆத்ம விடுதலை என்றும்
மற்றவர்கள் கூறுவதை ஆசிய ஜோதியான
புத்தர் நிர்வாண நிலை என்று வேறொரு பெயர்
கொண்டு அழைக்கிறார். ஒரு விளக்கு
எரிந்துகொண்டிருக்கிறது அந்த விளக்கில்
உள்ள தீபம் திடீரென மறைந்துவிட்டது.
இப்போது அதன் தீ சுடர் என்னவாயிற்று?
எங்கே போயிற்று என்று யாரும்
கூறிவிடமுடியாது அதை போன்றுதான்
நிர்வாணம் அடைந்தவர்களின் நிலையும்
நிர்வாணத்திற்கு பிறகு எப்படி இருக்கும், என்ன
கிடைக்கும் என்பதை கூற இயலாது. ஆனால்
இந்த உலகத்தில் அனுபவிக்கின்ற அனைத்து
விதமான இன்னல்களுக்கும் சரியான
முற்றுபுள்ளி ஒரே இறுதி புள்ளி நிர்வாணம்
மட்டுமே. நிற்காமல் ஒவ்வொரு வினாடியும்
மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகை இதில்
நீங்காமல் படர்ந்திருக்கும் ஆசைகள் என்ற
துயரத்தையும் நிலையில்லாத
ஆத்மாவையும் உணர்ந்து தியானித்தால் ஆசை
என்ற பாசக்கயிறுகள் அறுந்து நிர்வாணம் என்ற
மகாபரிசு கிடைக்கும் என்று முக்தியை பற்றி
புத்தர் சான்றிதழ் தருகிறார்.

* அறிவு சிகரம் ஆதிசங்கரர், கருணை வடிவம்
ராமானுஜர், பக்தி சாகரம் மத்வர் இவர்கள்
தவிர்த்து ஆழ்வார்கள், நாயன்மார்கள்,
அருளாளர்கள் அனைவருமே இறைவனோடு
மனிதன் காற்றில் கரைந்து மறைந்து போகும்
கற்பூரத்தை போல இரண்டற கலந்து பிறவாத
நிலையை பெற்றிடுவதே முக்தி என்று
அறியாதவரும் அறிந்துகொள்ளும் வண்ணம்
எளிமையாக தெளிவாக தத்துவச்செறி\வோடு
முரசறைந்து சொல்கிறார்கள்.
உலகப்பொதுமறை ஈன்ற வள்ளுவனும்,
முக்தியின் அவசியத்தை தெள்ளத்தெளிவாக
கூறுகிறார். இந்தியாவில் தோன்றிய அல்லது
இந்திய கருத்துக்களால் தோன்றிய எல்லா
ஞானிகளுமே, அறிஞர்களுமே முக்தி மட்டுமே
இறுதி லட்சியம் என்று பட்டயம் தருகிறார்கள்.
இதில் சித்தர்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக
இருக்க முடியும். மேலே நான் சொன்ன
அனைத்து ஞானிகளையும் விட சித்தர்கள்
ஒருபடி மேலே சென்று முக்தி என்றால்
என்னவென்று விளக்குவதோடு இல்லாமல்
முக்தியை அடைவதற்கான வழிமுறைகளை
அதாவது புலன் ஒழுக்கம், மன ஒழுக்கம், சரீர
ஒழுக்கம் இவைகளை பெறுவதற்கான
வழிகளையும் நம்மை போன்ற சாதாரண
ஜீவன்களும் கடைத்தேற வேண்டுமென்று கூறி
சென்றிருக்கிறார்கள்.

* மணலில் தண்ணீர் சேர்த்து சேறாக்கி
சிறுவர்கள் உணவு சமைத்து
விளையாடுவார்கள். அந்த விளையாட்டை
போன்றது தான் உலக வாழ்க்கை என்பது.
வயிற்றில் பற்றி எரிகின்ற பசி என்ற நெருப்பை
மண்சோறால் எப்படி அணைக்க முடியாதோ
அப்படியே இந்த உலகத்தில் நாம் பெறுகின்ற
அனுபவங்கள் ஆத்ம பசியை அணைக்காது
என்று திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார்.
நாம் உயிர் பெற்றிருப்பது எதற்காக? உடம்பை
பெற்றது எதற்காக?
உலகத்தின் நாலு திசையும் ஓடி முக்தர்கள்,
ஞானிகள், அறிஞர்கள், குருமார்கள் இவர்களிடம்
காத்துக்கிடந்து பெற்ற கல்வி எதற்காக?
இறைவனின் திருவடியை எப்படி பற்ற
வேண்டும் பிறவாத பெருநிலையை எப்படி
அடையவேண்டும்? என்பதை தெரிந்து
கொள்வதற்காகவே என்று அதை
திருமந்திரத்தில் திருமூலர் நமக்கு பாடம்
எடுக்கிறார்.

* முப்பத்தாறு தத்துவங்களின் விரிவாக
கிடக்கிற மாயா உலகத்திலிருந்து விடுபட்டு
சிவபோகத்திற்குள் ஆத்மா ஒடுங்க வேண்டும்
சிவத்தில் ஜீவனும், ஜீவனில் சிவமும் கலந்து
இன்புறும் உன்னத நிலையே முக்தி இதை
விட்டு விட்டு இளமை எழில்கொஞ்சும்
கன்னியரின் மென்னுடலை தொட்டு
அனுபவிப்பதே முக்தி என்று சில முட்டாள்கள்
கருதுகிறார்கள். இவர்கள் உலகத்தில்
வாழுகின்ற வாழ்க்கை மட்டுமே முதலும்
முடிவானது என்று கருதும் உலகாயதர்கள்
செத்தபிறகு சொர்க்கத்தில் ராஜ போகங்களை
அனுபவிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்
இதற்காக பூமியில் சடங்குகளையும்
தொழுகை முறைகளையும் வகுத்து வைத்து
காத்திருக்கிறார்கள் இவர்களுக்கும் வாழும்
போதே அனுபவித்து விட்டு சாவோம் என்ற
உலகாயதர்களுக்கும் பெரிய வித்தியாசம்
இல்லை.

* ஆனால் சித்தர்கள் சொர்க்க சுகம்
பெரியதல்ல. உலக சுகமும் ஒரு பொருட்டல்ல.
ஜீவ சுகமே சாஸ்வதமானது அதற்கு ஆணவம்,
கர்மம், மாயை என்ற மும்மலங்களை விலக்கி
சுத்த ஆத்மாவாக சிவனடியை பற்றிக்கொண்டு
வாழ்வதை சிறப்பென்று கருதினார்கள்.
மும்மலங்கள் அறுபடவேண்டுமானால்
மனமென்னும் மாயக்குரங்கை வசப்படுத்த
வேண்டும். அப்படி வசப்படுத்த மனம்
வாழுகிற சரீரத்தை முதலில் செம்மையாக்கி
வசப்படுத்தினால் மட்டுமே மனதை
கைப்பிடிக்குள் கொண்டுவர முடியுமென்று
நினைத்தார்கள். அதற்காக உடலை உறுதியாக்க,
மனிதனின் ஆயுளை நீட்டிக்க, ஆரோக்கியத்தை
மேம்படுத்த பல வழிகளை கண்டார்கள்.
நடைமுறைப்படுத்தி வெல்லவும் செய்தார்கள்.
அதை நம்மை போன்றவர்களுக்கு சொல்லவும்
செய்தார்கள். அந்த வழிகளை பற்றி
சிறிதளவாவது தெரிந்து கொண்டால் தான்
சித்தர்களின் ரகசியம் நமக்கு தெரியவரும்.
[08/03, 18:41] Ethiraj. Gudiyatham: ** சித்தர் ரகசியம் (பாகம் -1)
***********************

#சித்தர்களின்உண்மைஇருப்பை அறிய ,அடைய வேண்டியவர்கள் மட்டும் அவசியம் படித்து உள்வாங்க வேண்டிய உண்மைகள் .

* அழகிய வெண்ணிலவு, ஆர்ப்பரிக்கும் கடல்,
குபு குபுவென புகையை கக்கிக்கொண்டு
மலையடிவாரத்தில் ஓடிவரும் ரெயில்,
இவைகளை எல்லாம் எத்தனைமுறை
பார்த்தாலும் சலிப்பு வருவதில்லை.
உறங்குகிற நாராயணனை துயில் எழுப்புகிற
வெங்கடேச சுப்ரபாதம் காலை பொழுதை
புத்துணர்ச்சியோடு வரவேற்கும்.
புல்லாங்குழலின் பூபாள ராகம், மலை
உச்சியில் இருக்கும் கோவில் மணியோசை
காதில் வந்து விழுவது தினசரி நடந்தாலும்
அதை கேட்பதற்கு சலிப்பே ஏற்படுவது
கிடையாது. இதே போலத்தான் சித்தர்களை
பற்றி ஆயிரம் அறிந்திருந்தாலும் பலநூறு
சங்கதிகளை ஆய்வு செய்திருந்தாலும்
புதியதாக யாராவது ஒருவர் கூறத்
துவங்கினால் நமக்குள் ஆர்வம்
பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிடும்.

* காரணம் சித்தர்களை பற்றி நமது மனதிற்குள்
கட்டி வைத்திருக்கின்ற கற்பனை கோட்டை
சித்தர்களை நாடினால் பெறமுடியாத பெரும்
பேறுகளை எல்லாம் பெற்றுவிடலாம் என்ற
அசைக்க முடியாத நம்பிக்கை. இவை
மட்டுமல்ல சித்தர்கள் ஆகாய வழியாக பறந்து
செல்வார்கள். அலைகளே வீசாத நடுக்கடலில்
நடந்து போவார்கள். சுற்றி சுழன்றடிக்கும்
சூறாவளி காற்றை கைப்பிடிக்குள் அடக்கி
விடுவார்கள், ஆக்ரோஷமாக ஆகாயத்திற்கும்
பூமிக்கும் எழுந்து நின்று ஆர்ப்பாட்டமாக
பற்றி எரியும் நெருப்பை கூட வாயினால் ஊதி
அனைத்து விடுவார்கள், என்று எத்தனையோ
எதிர்பார்ப்புகளை அவர்கள் மீது
வைத்திருக்கிறோம்.

* நேற்றுவரை எப்படியோ தெரியாது பறந்து
செல்லுகிற சித்தர் ஒருவரின் படத்தை தனியார்
தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிய பிறகு
தமிழ்நாட்டில் சாதாரண ஜனங்களுக்கு கூட
சித்தர்களின் மீது ஒருவித ஈர்ப்பு
ஏற்பட்டிருக்கிறது. பாமரர்களும்
நம்புகிறார்கள். படித்தவர்களும் தேடுகிறார்கள்
என்ற நிலை வந்தவுடன் வர்த்தகமும் கூடவே
வந்துவிடும் என்பது போல நான் தான் சித்தர்,
நானே தான் சித்தர் என்று விளம்பர பலகையை
நெஞ்சில் தொங்க விட்டுக்கொண்டு தமிழ்
நாட்டின் தெரு முனைகளில் கூட கூட்டம்
போட ஆரம்பித்து விட்டார்கள்.

* சித்தர்களின் மார்க்கங்களை அறிந்து
கொள்வதற்கு முன்பு சித்தர்கள் என்றால் யார்?
என்பதை அறிந்து கொள்வது மிகவும்
முக்கியமாகும். ஒன்றிரெண்டு கவிதை எழுதி
அதை முட்டு சந்திலும் குட்டி சுவர்
ஓரத்திலும் பாடி பரவசப்பட்டு சில தேனீருக்கு
விலை போகும் தேவாங்குகளிடம் பாராட்டும்
கைதட்டலும் பெற்று நானே மிக சிறந்த
கவியரசன் ஆணை அம்பாரியில் பவனி
வரவேண்டியது எனது கவிதைகளே என்று
மார்தட்டுபவர்கள் மத்தியில் பலநூறு கவிதை
எழுதி பல காவியங்களை படைத்து
ஆன்றோரும் சான்றோரும் அறிவு சார்ந்த
பெரியோரும் ஆகா இதுவல்லவோ கவிதை
என்று பாராட்டினாலும் கூட தன்னை கவிஞன்
என்று பறை சாற்றுவதில் நாணம் மிக்க
நல்லவர்களும் இருக்கிறார்கள்.

* சித்தர்கள் கதையும் இப்படித்தான் கல்லூரி
புத்தகத்தை ஒன்றிரெண்டு முறை புரட்டி
விட்டு நான் மருத்துவனாகி விட்டேன் என்று
அறுவைசிகிச்சை செய்ய போகும் பித்துக்குளி
மருத்துவனை போல் பலர் அலைகிறார்கள்
தன்னை சித்தர்கள் என்று பறை சாற்றி
கொண்டு ஆனால் உண்மை சித்தர்கள்
அரங்கத்திற்கு வருவது இல்லை ஆர்ப்பாட்ட
கூட்டத்தாரோடு கலந்து கொள்வதில்லை
அதனால் அவர்களை இன்னாரென்று
அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல்
போலிகளையும் பொய் புரட்டுகளையும்
உண்மை என்று நம்பி ஏமாந்து போகும்
சோணகிரிகள் மலிந்துவிட்ட நிலையில்
பொய்க்கும் மெய்க்கும் உள்ள வித்தியாசத்தை
உறுதிப்படுத்தி காட்ட வேண்டிய கடமை
நமக்கு உண்டு. சித்தர்கள் யார் என்ற
கேள்விக்கு சரியான விடை கிடைத்தால் தான்
போலிகளை அடையாளம் காணலாம்.

* சித்தர்களை பற்றி இதுவரை நிலவி வருகின்ற
கருத்துக்களையும், நம்பிக்கைகளையும்
பார்க்கும் போது சித்தர்கள் என்று
அறியபடுபவர்களின் செயல்முறைகளை
நடவடிக்கைகளை ஆராய்கிற போதும் சித்தர்
யார்? என்ற கேள்விக்கு விடை காணுவது
மிகவும் கடினம். சித்தர் என்ற சொல்லுக்கு
பொது வரையறை தேடி இதுதான் அதன்
இலக்கணம் என்று அறுதியிட்டு கூறுவதும்
அதைவிட கடினம் என்பதும் தெளிவான
உண்மையாகும். ஒரு பொருளை பற்றிய
சந்தேகம் உருவாகும் போது அதன்
முடிச்சுகளை விடுவித்து உண்மையை
உள்ளபடி காட்டுவதற்கு அந்த பொருள்
தெளிவாக இருக்க வேண்டும். அப்போது தான்
நல்ல பதிலை அடையலாம் ஆனால் இங்கு
சந்தேகத்தை உற்பத்தி செய்கின்ற பொருளே
இது தான் அந்த பொருளா? என்ற அடிப்படை
சந்தேகத்தையே கிளப்பி விடுகிறது என்றால்
விடை காணுவது எங்கனம்.

* சித்தர்கள் என்றால் மனைவி மக்கள்,
சொந்தம்-பந்தம் தொழில் சமுதாய அந்தஸ்து
அத்தனையையும் துறந்தவர்கள் அவைகளை
உடம்பில் ஒட்டி கொண்டிருக்கும் தூசுகளை
போல் தள்ளி விட்டவர்கள் என்று ஒருசாராரும்
இப்படி கூறுவது கூட சரிவராது. சாதம்
வடித்து குழம்பு சேர்த்து கூட்டு
பொறியலோடு உண்ணுவது உலகத்தாரின்
நடைமுறை என்றால் சித்தர்களோ
சாக்கடையில் கிடப்பதையும் தேவாமிர்தமாக
உண்பவர்கள். உலக நடப்பிற்கு மாறானவர்கள்,
மாறுபட்டவர்கள் என்று வேறொரு சாரார்
கூறுகிறார்கள் இவர்கள் இருவரும்
கூறுவதுமே தவறு சாதாரண மனிதனது
செயல்களை செய்யாமல் அசாதாரணமான
சித்து விளையாட்டுகளை செய்பவர்களே
அவர்கள் என்று இன்னொரு சாரார்
கூறுகிறார்கள்.

* சாக்கடையில் கிடப்பதும் ஆகாயத்தில்
பறப்பதும் ஒரு மனிதனை உயர்ந்தவனாக
பிறப்பற்ற உத்தமனானாக உருவாக்கி விடுமா?
வித்தைகள் செய்வதும் வித்தைகள் கற்பதும்
மீண்டும் மீண்டும் இந்த பூமியில் வந்து
பிறக்கின்ற தண்டனையே கொடுக்கும் எனவே
சித்தர்கள் அதை செய்ய மாட்டார்கள் சித்தத்தை
அதாவது தனது மனதை முழுமையாக
சிவனிடம் வைத்தவர்கள் என்று விளக்கம்
தருகிறார்கள் சில பக்தர்கள். சித்தத்தை
சிவன்பால் வைப்பவர்கள் அல்ல சித்தர்கள்
காரணம் சிவம் என்பதே ஒரு மாயத்தோற்றம்
இந்த உலகத்தை பிடித்து கொள்ள இருக்கும்
கடைசிக் கயிறு அந்த சிவனை நினைப்பதை
விட எந்த நினைவும் இல்லாமல் இருப்பதே
சித்தர்களின் வேலை எனவே சித்தத்தை
அடக்கியவர்கள் சித்தர்கள் என்று சில ஜீவன்
முக்தர்கள் கருதுகிறார்கள்.

* புராணங்களிலும், இதிகாசங்களிலும்
கரைகண்ட வைதீக ஞானிகள் சிலர் சித்து என்ற
வார்த்தை மூன்று என்ற பொருளை தரும்
சிவபெருமான் முக்கண்ணன் என்பது
எல்லோருக்கும் தெரியும் எனவே சிவனின்
அம்சமாக இருப்பவன் சித்தன் அவனது செயல்
சித்து என்கிறார்கள். சித்தர்கள் சிவனுக்கு
மட்டுமா சொந்தக்காரர்கள்? பார்போற்றும்
வைஷ்ணவத்திற்கும் சித்தர்களுக்கும்
தொடர்பில்லையா? என்று சிலர் கேட்டதனால்
அதற்கும் பதில் தருகிறார்கள். பெரியவர்கள்
ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரம
பெருமான் இந்த அவதாரம் எடுப்பதற்கு முன்பு
மூன்றடி உயரம் கொண்ட வாமனனாக வந்தான்
அவன் மாவலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண்
கேட்டான் எனவே மூன்று என்பது
பெருமாளையே குறிக்கும் எனவே சித்தர்கள்
என்பவர்கள் திருமாலின் அடியார்களே என்றும்
கூறுகிறார்கள்.

* நாமோ நாலும் கற்ற பண்டிதரும் அல்ல.
முற்றும் துறந்த முனிவர்களும் அல்ல. பசி
வந்தால் உண்டு உடல் சோர்ந்தால் உறங்கி
எழும்பும் சாதாரண ஜீவன்கள் அன்றாடம்
வயிற்றுக்கும் வாய்க்கும் போராட்டம் நடத்தும்
அற்ப மனிதர்கள் நமக்கு இந்த தத்துவ
விளக்கங்கள் எதுவும் புரிவது இல்லை
புரியவேண்டிய அவசியமும் இல்லை சித்தர்
என்றால் யாரென்று மிக எளிமையான ஒரு
முடிவிற்கு நாம் வந்து விடலாம். மனிதர்களாக
இருந்தாலும் தெய்வங்களால் மட்டுமே செய்ய
கூடிய செயல்களை செய்பவர்கள் சித்தர்கள்
என்று முடிவு செய்து கொள்ளலாம்.
இன்னொரு முடிவிற்கு கூட வரலாம்.
கடவுளை காண்பதற்காக ஏங்கி
கொண்டிருப்பவன் பக்தன் கடவுளை பார்த்து
சாந்தி பெற்றவன் சித்தன்.

* இப்படி இறை தரிசனத்தை பெற்று விட்டவன்
பெற்று அனுபவித்தவன் சித்தன் என்பதில்
யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஆனாலும் சித்தர்களை பற்றி பல புகார்களும்
இருக்கிறது சித்தர்கள் சுயநலக்காரர்கள் மனம்
பிரண்டு போன மனநோயாளிகள் கடவுளை
நம்பாத நாத்திகர்கள் சமுதாய ஒழுங்கையே
சீர்குலைக்கும் கபட வேடதாரிகள் என்று
பலரும் சித்தர்கள் மீது குற்றச்சாட்டுகள
ை அள்ளி வைக்கிறார்கள் அவற்றில் மிக
முக்கியமானது சித்தர்கள் பெண்களை
வெறுத்தார்கள் பெண்களை போக பொருளாக
மட்டுமே பார்த்தார்கள் பாம்பை பார்த்தால்
எப்படி சாதாரண மனிதனுக்கு கொலை செய்ய
வேண்டும் என்ற எண்ணம் வருமோ அதே
போலவே சித்தர்களுக்கும் பெண்களை
பார்த்தால் கொலைகாரிகளாகவும்
அறுவறுப்பான பதார்த்தம் என்று பார்த்து
ஒதுக்கி அவர்களை இழிவுப்படுத்தினார்கள்
என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை சித்தர்கள்
மீது வைக்கிறார்கள் உண்மையில் சித்தர்கள்
அப்படிப்பட்டவர்களா? அதை அடுத்த பதிவில்
பார்ப்போம்...

- *சித்தர்களின் குரல் shiva shangar*

மேலே கண்ட சித்தர்களின் வாழ்க்கை முறைகளை தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது...

இது முடிவு அல்ல இதற்குமேல் வள்ளலார் இறவா நெறியைப் பற்றி விளக்கி உள்ளார்...பிறவா நெறி என்பது வேறு இறவா நெறி என்பது வேறு..

இறந்தால் பிறப்பு உண்டு இறவாமல் வாழும் வழியைக் காட்டியவர் வள்ளலார்.

முக்தி நிலை வேறு சித்தி நிலை வேறு.

தொடரும்.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு