புதன், 7 மார்ச், 2018

சிலை உடைக்கும் கலாச்சாரம் !

சிலை உடைக்கும் கலாச்சாரம் !

உலகம் எங்கும் சிலைகள் உள்ளன. சாமிக்கும் சிலைதான்.மனிதனுக்கும் சிலைதான் வைத்துள்ளார்கள்.சாமிக்கு சிலை வைத்தவனே மனிதன்.

சாமிக்கு சிலை வைத்தவன் மனிதன் என்றால்  சாமியை விட உயர்ந்தவன் தானே மனிதன்.என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிலை வைத்து வழிபடும் கலாச்சாரம் எப்படி எப்போது யாரால்  வந்த்து.இறைவன் என்பவன் உருவமாகவும்.சிலையாகவும் தான் இருக்கின்றானா ?

அறிவில்லாத மூடர்கள் தத்துவங்களை சிலையாக வைத்துள்ளார்கள்.கடவுள் சமய மதவாதிகள் சொல்வதுபோல் உருவமாமவே.சிலையாகவோ இல்லை. தத்துவமாகவோ இல்லை.அருள்  நிறைந்த பேரொளி யாக உள்ளார் என்பதைக் கண்டுபிடித்தார்... வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்

வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்

உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலேஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

என்னும்  பாடல் வாயிலாக தெரிவித்து உள்ளார்

இந்த மக்கள் தன்னையும் சிலையாக வைத்து வழிபட ஆரம்பித்து விடுவார்கள் என்பதால். தன் உருவத்தை சிலையாக செய்து கொண்டு வந்து வள்ளலார் கையிலே கொடுத்தார்கள்.பொன்னாகும் உடம்பை மண்ணாக்கி விட்டீர்களே என்று கீழே போட்டு உடைத்து விட்டார்...

வள்ளலார் சிலை வைப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.சிலை வழிபாடு செய்வதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் சமய மத வாதிகள் போல்  வள்ளலார் சிலையை வைத்து வழிபாடு செய்து கொண்டு வருகிறார்கள்.அவை வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை மீறும் செய்கையாகும்.

வள்ளலார் சொல்லிய கடவுள்.காட்டிய கடவுள்.கண்ட கடவுள்  தத்துவங்களை எல்லாம் கடந்த தனித்தலைமைக்
கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ! என்பதை அறிந்து கொள்ள வடலூரில் சத்திய ஞானசபையை தோற்றுவித்து **ஓளியே கடவுள்** தான் என்பதை உலக மக்களுக்கு வெளிப்பட  காட்டி வெளிப்படுத்தி உள்ளார்.

இதை புரிந்து கொள்ளாத சமய மதவாதிகள் ஆலயங்களை தோற்றுவித்து அதன் உள்ளே மனிதனால் செய்த த்த்துவங்களான சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள்..

சிலையை உடைப்பவர்கள் !

பெரியார் சிலை உடைப்பவர்கள்.மற்றும் உள்ள சிலைகளை உடைப்பவர்கள்.அகற்றுபவர்கள். முதலில் கோயில்களில் உள்ள சிலைகளை உடைத்து எறிந்து அகற்றி விட்டு. எல்லோருக்கும் ஒளியைத்தரும்.பிரகாசத்தைதரும். அருறைத் தரும் ஜோதியை ஏற்றுங்கள். வழிபடுங்கள்..அதன் பின்பு உலகில் உள்ள சிலைகளை உடைத்து அப்புறப் படுத்துங்கள்.அதுதான் உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களின் செயல்களாகும்.

அதுவே பொது நோக்கமாகும்.இப்போது நடக்கும் சிலை அகற்றும் பிரச்சனையும் ஏதோ ஒரு நன்மை யைக் கருதி தான் நடக்கிறது போலும்.

எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் ஞானம் விளையும் விளையாட்டே எனக் கருதுகின்றேன்..

நமது சுத்த சன்மார்க்க அன்பர்களுக்குத் தெரிவிப்பது சமய மத வாதிகள் போல் உருவ வழிபாடு செய்யாமல் வள்ளலார் சொல்லிய காட்டிய அருட்பெருஞ் ஜோதி வழிபாடு செய்வதுதான் உண்மையான வழிபாடாகும்..

சன்மார்க்க சங்கத்தை வழிநடத்துபவர்களுக்கு  என்றே தனிப்பாடல் பதிவு செய்துள்ளார் !

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே. !

சமய மத வாதிகளான புன் மார்க்கவர்போல் உருவ வழிபாடு செய்யாமல் .எல்லாம் வல்ல நம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரையே ஓளியாக வழிபாடு செய்யுங்கள் என்று  தன் ஆணை என் ஆணை என்று சத்தியம்  வைத்து சொல்லுகின்றார்.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க  கொள்கையை பின்பற்றி மற்றவர்களுக்கும் வழி காட்டுவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு