சனி, 2 செப்டம்பர், 2017

ஆன்மநேய அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு வந்தனம்.

ஆன்மநேய அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு வந்தனம்.

தனக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கை.

அப்படி வாழ்கின்ற மனித ஜீவர்களை இறைவன் அன்புடன் ஏற்றுக் கொண்டு அறிவை விளக்கி.அன்பை பெருக்கி அருளைப் கொடுத்து பேர் இன்பத்தை தந்து.மரணத்தை வெல்லும் ஆற்றலைக் கொடுத்து அனைத்துக் கொள்வார்.

உயிர் இரக்கத்தாலும்  அன்பாலும் அறிவாலும் அருளாலும் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்...

வள்ளலார் பாடல்!

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான்

சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன்

அந்தவித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ.

என்னும் பாடல் வரிகளில் மிகத்தெளிவாக விளக்கி உள்ளார்.

நாம் வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்ந்து வெற்றி என்னும் அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்

அன்புடன் ஆன்மநேயன்.ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு