செவ்வாய், 18 ஜூலை, 2017

கடவுளைத்தேடு ! ஓழுக்கத்தை பிடி !

கடவுளைத்தேடு ! ஓழுக்கத்தை பிடி !

மனிதன் கடவுளைத் தேடுகிறான்
கடவுள் கிடைக்கவில்லை

கடவுள் மனிதனைத் தேடுகின்றார் மனிதன் கிடைக்கவில்லை.

மனிதன் மனிதனாக வாழ்ந்தால் கடவுள் கிடைப்பார்.மனிதன் மிருகமாக வாழ்வதால் கடவுள்
கிடைக்கமாட்டார்.

கடவுள் மனிதனைத் தேடுகிறார் ஏன் கிடைக்கவில்லை.மனிதன் மனிதனாக வாழவில்லை .அதனால் கிடைக்கவில்லை.

அதனால் யார?் மனிதனாக வாழ்கிறார் என்றே கடவுள் தேடிக் கொண்டே உள்ளார்.

மனிதன் வள்ளலார் சொல்லியபடி அன்பு.தயவு.கருணையுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்தால் மட்டுமே  மனிதனுக்கு கடவுள் காட்சிக் கொடுப்பார்.

மனிதனை கடவுள் தேடிக்கொண்டே உள்ளார் அருளை வழங்குவதற்கு....

வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி மனிதன் வாழ்ந்தால் கடவுள் அன்புடன் அனைத்துக் கொள்வார்.அருளையும் வாரி வழங்குவார்.

 அன்பு.தயவு கருணைக் கொண்டு ஒழுக்கத்துடன் வாழ்ந்தேன்....
கடவுளைக் கண்டேன் களித்தேன் கலந்து கொண்டேன் என்கிறார் வள்ளலார்.

நாமும் வள்ளலார் போல் வாழ்ந்தால்.கடவுளைக் காணலாம் களிக்கலாம் கலந்து கொள்ளலாம்.

இதைவிட வேறு வழியே இல்லை !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு