புதன், 7 டிசம்பர், 2016

இந்த உலகம் !

இந்த உலகம் !

இந்த உலக மக்களை பிச்சைக் காரர்களாய் மாற்றி உள்ள#து யார் ?

சமயங்கள் மதங்களின் கொள்கைகள்தான் இந்த உலக மக்களை ஏழைகளாக்கி பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கையில் தள்ளி உள்ளது ,

உயர்ந்த குலம் என்றும் ,தாழ்ந்த குலம் என்றும் ,உயர்ந்தவன் தாழ்ந்தவன் ,ஏழை பணக்காரன் என்றும் மனித குலத்தை பிரித்து வைத்தது சமயங்கள் மதங்கள்தான் என்பதை உலகமே அறியும் ,

அவற்றை பின் பற்றித் தான் இன்று வரையில் உலகமே பின் பற்றி வருகின்றன ,

இன்று அரசியல் வாதிகளும்,மற்ற மதவாதிகளும் ,ஆண்டவர் பெயரால்  தெரிந்தோ தெரியாமலோ  அவற்றையே பின் பற்றி மக்களை பிச்சைக் காரர்களாய் ஆக்கி ,அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி பணத்தைக் கொடுத்து அவர்களின் உரிமையைப் பெற்று ஆட்சியில் அமர்ந்து விடுகிறார்கள் ,அந்த பொய்யர்களை உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள்தான் தெய்வம் என்று அவர்களின் காலடியில் விழுந்து வணங்கி கொண்டு உள்ளார்கள் ,

மக்களின் அறியாமையை என்ன என்று சொல்வது .

அவர்களுக்கும் மரணம் வருகின்றது ,ஏழைகளுக்கும் மரணம் வருகின்றது ,இதில் யார் உயர்ந்தவர்கள் ,

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்லுகின்றீர்கள் இரண்டு குலமும் மாண்டு போகின்றார்கள் ,புதைக்கின்றீர்கள் ஒரு மூன்று மாதம் கழித்து அந்த பிணத்தை  தோண்டி பாருங்கள் ,அங்கே என்ன இருக்கும் ? புழுக்கள் தான் நிறைந்து  இருக்கும் ,இதைத் தெரியாமல் ,உயர்ந்த குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிடக் காண்கின்றீர் ,புதையுறும் உங்கள் குலங்கள் எல்லாம் புழுக்குலம் என்று அறிந்தேன் என்கின்றார் வள்ளலார் ,

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரேநற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தேபுத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவேஉரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.

 நரை திரை மூப்பு மரணம் அடையாதவர்களே உயர்ந்த குலத்தார் என்பதை அறிந்து தெரிந்து வாழ்பவர்களே உயர்ந்த குலத்தார் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் ,

எனவே நமக்கு உண்மையான  தாயாகவும் தந்தையாகவும் நம்மை பாதுகாப்பவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,

இந்த உலகில் வேறு எவரும் உயர்ந்தவர் இல்லை என்பதை அறிந்து புரிந்து தெரிந்து கொண்டு வாழும் வாழ்க்கை தான் உயர்ந்த வாழ்க்கையாகும் ,

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு