புதன், 7 டிசம்பர், 2016

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்

https://m.facebook.com/story.php?sதமிழக முதல்வர் மரணம் !
நமது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணம் குறித்து பலப்பல சந்தேகங்கள் எழுந்து கொண்டு உள்ளது,
சுமார் 75, நாட்கள் அப்போல்லோ மருத்துவ மனையில் என்ன நடந்தது என்றே இது வரையில் யாருக்கும் தெரியாது ,
அதிமுக கட்சியைச் சார்ந்த முக்கிய மந்திரிகளுக்கும் ,தலைவர்களுக்குமே அப்போலோவில் என்ன நடந்து கொண்டு உள்ளது என்பது தெரியாது ,ஏன் தமிழக கவர்னருக்கும் எதுவும் தெரியாது
மரணம் அடைந்து அவசரம் அவசரமாக அன்றே அடக்கம் செய்ய வேண்டிடிய அவசியம் ஏன் ஏற்பட்டது ,
அதிமுக தொண்டர்கள் கோடி கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்த அம்மாவை கடைசி வரை பார்க்க முடியவில்லை என்று மக்கள் தவித்துக் கொண்டு உள்ள நிலையில் அவசரமாக அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்ற சந்தேகம் மக்களின் மனதிலே வேர் ஊன்றி உள்ளது .
எல்லாம் மர்மமாகவே உள்ளது ,
ஜெயலலிதா அவர்களின் உண்மையான நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரே வழிதான் உள்ளது ,
அவரது உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை என்ன எனறு மக்களுக்குத் தெரிந்து விடும் ,
சந்தேகம் என்று வந்தால் அதை தெரியப் படுத்துவது ,உண்மையை வெளிப்படையாக மக்களுக்கு காட்டுவது அரசின் கடமை ,காவல் துறையின் கடமை என்றும் மக்கள் பேசிக் கொண்டு உள்ளாரகள் ,
தமிழக அரசும் காவல்துறையும் என்ன செய்யப் போகிறது என்பதை பொருத்து இருந்து பார்ப்போம் ,
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ,tory_fbid=1323103204406700&id=100001211005910&ref=bookmarks

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு