செவ்வாய், 13 டிசம்பர், 2016

திருஅருட்பாவை படியுங்கள் !

அன்புடன் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் !

நாம் யார் என்று தெரியாமல இந்த உலகத்தில் வாழ்வது அறியமையாகும்.

அழிந்து கொண்டு இருக்கும் பொருள் மீது ஆசை,பற்று கொள்ளாமல் அருள் மீது பற்று கொண்டு வாழ்வதே மனித வாழ்க்கைக்கு இறைவன் தந்த  கொடையாகும்.

அருள் பெற்று வாழ்வதனால் எனன பயன் ?

மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வதுதான் .அருளினால் கிடைக்கும் அளப்பரிய லாபமாகும் .

 அருளைப் பெரும் வழியை வள்ளலார் மட்டுமே தெளிவாக தெரிவித்து உள்ளார் . அதன் விளக்கம. ஓழுக்கம அனைத்தும் " திருஅருட்பாவில்"  தெளிவாக விளக்கி பதிவு செய்து வைத்து உள்ளார் .

எனவே நாம் திருஅருட்பாவைத் தவிர வேறு எந்த நூல்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

உலகில் உள்ள அனைத்து நூல்களில் உள்ள விபரமும் . அதற்குமேல் எவரும் சொல்லாத உண்மை விளக்கமும் திருஅருட்பாவில்  மட்டுமே உள்ளது.

மேலும் திருஅருட்பா என்னும் நூல் மட்டுமே உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அருளப்பட்டது.என்பதை அனைவரும் அறிந்து கொண்டு வாழ்க்கையை வாழ்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டுமாறு அன்புடன் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்ம  நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு