புதன், 16 நவம்பர், 2016

இன்பம் இரண்டு வகைப்படும் !


அவை பொருள் இன்பம் , அருள் இன்பம்  . என்பதாகும்  . .  

  உலகில் உள்ள இன்பங்களில் மிகவும்  முக்கியமானது , ஆண் பெண் உறவுகள் , இதில் தோல்வி   அடைந்தால்  வாழ்க்கை  வாழ்ந்து  எந்த பிரயோஜனமும்  இல்லை 

அந்த இன்பம் இரவில் இருட்டு அறையில் சிறிது நேரம் அனுபவிக்கும் இன்பம் , அந்த இன்பத்தால் இந்திரியங்கள் கரணங்கள் ஜீவன் அனைத்தும் உணர்ச்சியில் ஒடுங்கிப் போய் விடும் . இதற்கு  பொருள்   இன்பம்  என்று பெயர்  .

  நாம்  உண்ணும்  உணவால் உண்டாகும் சுக்கிலம்  என்னும் விந்து  உணர்ச்சியைத்  தூண்டி ஆண் பெண்  உடல் உறவு கொள்வதால்  அதற்கு பொருள் இன்பம் என்று பெயர் .  
பொருள்  இன்பத்தை அடிக்கடி  பயன் படுத்துவதால் , நரை, திரை,பிணி,  மூப்பு ,  பயம்  இறுதியில் மரணம்   வந்துவிடுகின்றது  .

மரணம்  வந்தால் மீண்டும் பிறப்பு என்பது  உறுதியாகி விடுகிறது ,. இதுதான் உலகியல் வாழ்க்கையின் நியதியாகும் , 

இந்த உலக இன்பத்தில்  இருந்து விடுபட்டு அருள் இன்பம்் பெற வேண்டும்  ,அந்த அருள்  இன்பத்தைப் பற்றி கற்றுக்  கொள்வதுதான் சாகாக்கல்வி என்று பெயர் .. 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு