திங்கள், 15 ஆகஸ்ட், 2016

வேதனைகளில் முதன்மை யானது எது?

வேதனைகளில் முதன்மை யானது எது?

நரகவேதனை ,சனனவேதனை ,மரணவேதனை  மூன்று வேதனைகளும் கூடி முடிந்து வேதனையே "பசிவேதனை" என்பதாகும் .

பசி இல்லாத ஜீவன்கள் உலகத்தில் எதுவுமே இல்லை .

நம் உடம்பில் அகம் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்கின்ற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோட்சம் இன்பமே

ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி இன்பம் என்றும் அறிய வேண்டும் .

பசி என்பது தான்  ஓர் உபகாரக் கருவி !

பசிக்கு சாதி சமய மதம் போன்ற எந்த வேறு பாடும் இல்லை .

பசி இல்லாவிடில் :-

ஜீவர்கள் ஆகாரம் குறித்து ஒருவரை ஒருவர் எதிர்ப்பார்க்க மாட்டார்கள் .

எதிர் பார்க்காத பட்சத்தில் உபகாரச் செய்கை தோன்றாது அது தோன்றாத போது ஜீவ காருண்யம் விளங்காது ,அது விளங்காத போது கடவுள் அருள் கிடைக்க மாட்டாது .

ஆதலால் பசியும் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவி என்றே அறிய வேண்டும் .

அந்த உபகாரக் கருவியைப் பயன்படுத்தி செயல் பட்டால் மட்டுமே இறை அருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது .

அதுதான் விரதம் தவம் யோகம் என்பதை புரிந்து கொண்டு வாழ்வோம் .

ஜீவர்களுக்கு உபகாரம் செய்து பசிப்பிணியை போக்கினால் , இறைவன் நம்முடைய பசியைப் போக்கி அருள் பசியைப் போக்க உபகாரம் செய்வார்.

இதுதான் அடிப்படை அதற்கு மேல் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார் .

நான் நாற்பது ஆண்டுகளாக இந்த விரதத்தை கடைபிடித்து வருகிறேன் .

வள்ளலார் சொல்லுவதைச் செய்வேன் ,செய்வதைத்தான் சொல்லுவேன் .

நான் செய்வதை எதுவும் வெளியில்  சொல்லுவதில்லை .உங்கள் சந்தேகம் தீர வேண்டும் என்பதற்காக சொல்லுகிறேன் .

நான் மட்டும் அல்ல எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் அனைவரும் ஜீவ காருண்யத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் .
அமைதி புரட்சி செய்து கொண்டு வருகிறோம் .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு