செவ்வாய், 27 ஜனவரி, 2015

கரு உற்பத்தி ஆவது எப்படி ?

கரு உற்பத்தி ஆவது எப்படி ?
திருமந்திர விளக்கம்
இறப்பின்போது உடலிலிருந்து பிரிந்து சென்ற 25 தத்துவங்களும் மீண்டும் ஒன்றாக இணைந்து புதுப் பிறவி உண்டாகிறது என்று கூறும் திருமந்திரப் பாடலையும், அந்த 25 தத்துவங்கள் எவை என்பதையும் சென்ற இதழில் கண்டோம். இனி புதிய உயிரின் உருவாக்கம், வளர்ச்சி ஆகியவை குறித்து திருமூலர் கூறும் சூட்சும ரகசியங்களைக் காணலாம்.
"கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ்
புருடன் உடலில் பொருந்தும்; மற்று ஓரார்;
திருவின் கருக்குழி தேடிப் புகுந்து அங்கு
உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே'.
-திருமந்திரம் பாடல் எண்- 263.
பொருள்: பிறவி எனும் பெருஞ் சுமையை வென்ற ஞானிகள் தங்கள் ஞானத்தால் உணர்ந்து கொண்ட 25 தத்துவங்களும் (நால் மூ ஏழ் 4+3ஷ்7=25) மீண்டும் இணைந்து ஒரு ஆணின் (தந்தையின்) உடலில் (விந்துவில்) வந்து இணையும். இவ்வாறு இணைவதை எவரும் அறியமாட்டார். (மற்று ஓரார்).
இவ்வாறு 25 தத்துவங்களும் இணைந்த ஆணின் விந்து பெண்ணின் (திருவின்) கருப்பையைத் தேடிச் சென்று புகும். அங்கே அது ஆண் - பெண் என இரு உருவாக இருக்கும்.
மிக மிக நுட்பமான பல சூட்சும உண்மைகளும், மருத்துவ விஞ்ஞான உண்மைகளும் இந்தப் பாடலில் பொதிந்து கிடக்கின்றன.
25 தத்துவங்களும் ஆணின் உடலில் புகுந்து விந்துவில் நிறைந்து, விந்திலுள்ள (நங்ம்ங்ம்) உயிரணுக்களுக்கு (நல்ங்ழ்ம்ஹற்ர்க்ஷ்ர்ஹ) உயிரூட்டுகின்றன.
பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும் முட்டையுடன் இந்த உயிரணுக்கள் இணையும்போதுதான் புதிய உயிர் (கரு) உருவாகும். ஆனால் 25 தத்துவங்களும் பெண்ணின் உடலில் நுழைவதில்லை. பெண்ணின் உடலில் உருவாகும் சினை முட்டை உயிரற்றது! அதற்கு உயிரூட்டி, அதை ஒரு கருவாக மாற்ற விந்தணுக்கள் தேவை!
இந்த இரு கருத்துகளையும் சற்று அலசிப் பார்க்கலாம். ஒரு பெண் பருவமடைந் தது முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை, மாதம் ஒரு கரு முட்டை சினைப்பையில் உருவாகி வெளியே வரு கிறது. இந்தக் கருமுட் டைக்கு (ஞஸ்ன்ம்) தானாகவே நகரும் திறன் கிடையாது. சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை கருப் பைக் குழாயினால் (எஹப்ப்ர்க்ஷண்ஹய் பன்க்ஷங்) உறிஞ்சிக் கொள்ளப் பட்டு, கருப்பைக் குழாயின் தசை அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி கருப்பை யினுள்ளே நுழைகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு வந்து அதோடு சேரும் வாய்ப்பு உருவானால் மட்டுமே அந்த முட்டை சினையடைந்து தொடர்ந்து உயிர்வாழ முடியும்; கரு உருவாகும்.
விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு ஏற்படாவிடில், அந்த முட்டை கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து போகிறது; மாதவிடாயின்போது வெளியேறிவிடுகிறது.
உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய இரண்டிற்கும் அடிப்படையான வித்தியாசம் என்ன? அசைவு அல்லது இயக்கம். ஜடப் பொருட்கள் தானே இயங்கும் அல்லது நகரும் (அசையும்) ஆற்றல் இல்லாதவை. உயிருள்ள வற்றில் தானாக அசையும், நகரும் திறன் உள்ளது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது கருமுட்டை அசைவற்றது; தானே நகரும் திறன் இல்லாதது. விந்தணுக்கள் தானே நகரும் திறன் கொண்டவை. எனவேதான் திருமூலர் இந்த விந்தணுக்கள் பற்றி,
"திருவின் கருக்குழி தேடிப் புகுந்து...
...ஓடி விழுந்ததே'
என்கிறார்.
சரி; நவீன மருத்துவ விஞ்ஞானம் இது குறித் துக் கூறுவது என்ன? படங்களுடன் விரிவாகக் காணலாம்.
உடலுறவின்போது ஒருமுறை வெளியேறும் விந்துவில் சுமார் 80 மில்லியனிலிருந்து 300 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இந்த விந்தணுக்கள் ஒரு தலைப்பகுதியும் நீண்ட வால் பகுதியும் கொண்டவை. இந்த வால்பகுதியை அசைத்து அசைத்து விந்தணுக்களால் மிக மிக வேகமாக நகர்ந்து செல்ல முடியும்! உடலில் இருந்து வெளியேறிய இந்த விந்தணுக்கள் சுமார் 72 மணி நேரம் வரையில் உயிரோடிருக்கும்.
உடலுறவின்போது வெளிவரும் விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே நீந்திக் கருப்பையின் வாய்ப் பகுதியை அடைந்து அதன் உள்ளே புகுகின்றன. ("திருவின் கருக்குழி தேடிப் புகுந்து')
80 - 300 மில்லியன் விந்தணுக்கள் வெளி வந்தாலும் முட்டை கருவுற ஒரே ஒரு விந்தணு மட்டுமே தேவை! முட்டையின் மேற்பகுதிச் சுவர்கள் கெட்டியாக இருக்கும். விந்தணுக்கள் எளிதில் அதனுள் புகுந்துவிட முடியாது.
விந்தணுக்களின் தலைப்பகுதியில் ஒருவித வேதிப்பொருள் (ஊய்க்ஷ்ஹ்ம்ங்) சுரக்கும். இது கருமுட்டையின் மேற்பரப்பைக் கரைத்து மிக மிக நுண்ணிய ஒரு துளையை உண்டு பண்ண, அந்தத் துளையின் வழியாக விந்தணு உள்ளே நுழைந்துவிடும்.
பல மில்லியன் விந்தணுக்கள் ஒன்றோ டொன்று முட்டி மோதி கருமுட்டையின் உள்ளே நுழைய முயற்சி செய்யும்! கடைசியாக ஒன்றே ஒன்று மட்டுமே வெற்றிவாகை சூடும்! உள்ளே நுழைந்து கருமுட்டையின் குரோமோ சோம்களோடு இணைந்துவிடும். இதையே முட்டை கருவுறுதல் (எங்ழ்ற்ண்ப்ண்ள்ஹற்ண்ர்ய் ர்ச் ஊஞ்ஞ்) என்கிறோம்.
கருவுற்ற முட்டையிலுள்ள குரோமோசோம் கள் இரண்டிரண்டாகப் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். ஒன்று இரண்டாகி, பின்னர் 4, 8, 16, 32, 64 என பல்கிப் பெருகும்.
ஆக, திருமூலரின் கூற்று நூறு சதவிகிதம் உண்மை என்பது நவீன விஞ்ஞானத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இனி திருமூலர் இந்தப் பாடலில் கூறும் அடுத்த சூட்சும ரகசியத்தை அலசிப் பார்க்கலாம். பாடலின் கடைசி அடி:
"(அங்கு) உருவம் இரண்டாக ஓடிவிழுந்ததே'.
"உருவம் இரண்டு' என்பதற்கு ஆண்- பெண் என இரண்டு உருவங்களாக என்பதே பொருள். அதாவது ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் கருப்பையினுள்ளே- ஆண் விந்தணுக்கள், பெண் விந்தணுக்கள் என இரண்டு வகை விந்தணுக்களாக ஓடி விழுகின்றன. இது மிக மிக சூட்சும மான ஒரு விஞ்ஞான உண்மையாகும். இதைப் புரிந்துகொள்ள நமது செல்களிலுள்ள குரோ மோசோம்கள், ஜீன்கள் ஆகியவற்றைக் குறித்த அடிப்படையான சில உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.
குரோமோசோம்களும் ஜீன்களும்
ஒவ்வொரு உயிரினத்தின் தனித்தனி தன்மை களுக்கும், பரம்பரை குணங்கள், நோய்கள் என அனைத்திற்கும் ஆதாரமாக அமைவது நமது செல்களிலுள்ள ஜீன்களே என்பது ஏற்கெனவே நீங்கள் அறிந்த உண்மைதானே?ஸ் ஒவ்வொரு மனித செல்களின் உள்ளும் 46 குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு குரோமோசோமிலும் நூற்றுக்கணக்கான ஜீன்கள் (ஏங்ய்ங்ள்) உள்ளன. இந்த 46 குரோமோ சோம்களும் இரண்டிரண்டு ஜோடிகளாக இணைந்து காணப்படும். மொத்தம் 23 ஜோடி குரோமோசோம்கள்.
இந்த 23 ஜோடி குரோமோசோம்களில் ஒரு ஜோடி குரோமோசோம்களுக்கு செக்ஸ் குரோமோசோம்கள் (நங்ஷ் ஈட்ழ்ர்ம்ர்ள்ர்ம்ங்ள்) என்று பெயர். ஒருவர் ஆணா அல்லது பெண்ணா என்று தீர்மானிப்பது இந்த செக்ஸ் குரோமோசோம்கள்தான்!
பிற 22 ஜோடி குரோமோசோம்களிலிருந்து இந்த செக்ஸ் குரோமோசோம்கள் சற்று மாறுபட்டிருக்கும். பிற 22 ஜோடிகளிலும் இரண்டு குரோமோசோம்களும் ஏறக்குறைய ஒரே நீளம் கொண்டவையாக இருக்கும். ஆனால் செக்ஸ் குரோமோசோம்களில் காணப்படும் ஜோடி இரண்டு வகை. நீளம் அதிகமான குரோமோசோம்- இதை "ல' குரோமோசோம் என்பார்கள். இதில் பிற குரோமோசோம்களில் இருக்கும் எண்ணிக்கையில் ஜீன்கள் இருக்கும். நீளம் குறைந்த குரோமோசோம்- இதை "வ' குரோமோசோம் என்பார்கள். இதில் ஜீன்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும்.
இனி மிக முக்கியமான பகுதிக்கு வருவோம். ஆணின் உடலிலுள்ள செக்ஸ் குரோமோசோம் களில் ஒன்று ல; மற்றொன்று வ .
ஆனால் பெண்ணின் உடலிலுள்ள செக்ஸ் குரோமோசோம்களில் இரண்டுமே ல தான்!
ஆண் - ல + வ
பெண் - ல + ல
இதுவரையில் தெளிவாகப் புரிந்துகொண்டீர் கள் அல்லவா? இனி இதன் முக்கியத்துவம் என்ன என்பதைக் காணலாம்.
உடலிலுள்ள அனைத்து செல்களிலுமே 46 குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் விந்தணுக்களிலும் கரு முட்டையிலும் மட்டும் 23 குரோமோசோம்களே இருக்கும். விந்தணுவும் கருமுட்டையும் இணைந்து கருவுறும்போது விந்தணுவிலிருந்து வரும் 23 குரோமோசோம் களும், முட்டையிலிருந்து வரும் 23 குரோமோ சோம்களும் இணைந்து, மீண்டும் 46 குரோமோ சோம்கள் கொண்ட சினை முட்டை உருவாகி, அது பல்கிப் பெருகி கருவாக மாறும். கருவின் ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும்.
ஆணின் செக்ஸ் குரோமோசோமில் ல, வ என இரண்டு வகை குரோமோசோம்கள் இருக்கும். இவை இரண்டும் பிரிந்து விந்தணுக்கள் உருவாகும்போது என்ன நிகழும்?
பாதி விந்தணுக்களில் ல குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். (பெண்).
மீதிப் பாதி விந்தணுக்களில் வ குரோமோ சோம்கள் மட்டுமே இருக்கும். (ஆண்).
ஆனால் பெண்ணின் செக்ஸ் குரோமோ சோம்களில் இரண்டுமே ல வகைதான். எனவே அது இரண்டாகப் பிரிந்து 23 குரோமோ சோம்கள் உள்ள கருமுட்டை உருவாகும்போது, அதில் ல குரோமோசோம் (பெண்) மட்டுமே இருக்கும். இதையே வேறுவிதமாகக் கூறினால்,
பெண்ணின் கருமுட்டை எப்பொழுதும் பெண் தன்மை (ல) கொண்டதாகவே இருக்கும்.
ஆணின் விந்தணுக்களில் பாதி பெண் தன்மை கொண்டவை (ல); மீதி பாதி ஆண் தன்மை கொண்டவை (வ).
"உருவம் இரண்டாக ஓடி விழுந்ததே'
என்று திருமூலர் எவ்வளவு பெரிய சூட்சும ரகசியத்தை- விஞ்ஞான உண்மையை ஒரு அடியில் பாடி வைத்துள்ளார் என்பதை அறியும் போது மலைப்பும் திகைப்பும் ஒருசேர உருவாகி றதல்லவா?
நவீன மருத்துவ விஞ்ஞானத்தில், நவீன உருப்பெருக்கிக் கருவிகள் (ஙண்ஸ்ரீழ்ர்ள்ஸ்ரீர்ல்ங்ள்) கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே குரோமோசோம்கள், ஜீன்கள், விந்தணுக்கள், கருமுட்டை, ல, வ குரோமோசோம்கள் என்பனவெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன! நவீன மரபியலின் (ஏங்ய்ங்ற்ண்ஸ்ரீள்) வயது சுமார் 100 அல்லது 150 வருடங்கள்தான்!
ஆனால் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலருக்கு இந்த ஆழமான விஞ்ஞான உண்மைகள் எவ்வாறு தெரியவந்தன? நிச்சயமாக விஞ்ஞானத்தால் அல்ல- விஞ்ஞானத்தை விஞ்சிய மெய்ஞ்ஞானத்தால் மட்டுமே இது சாத்தியமாகி யிருக்கும். விஞ்ஞானத்தைவிட மெய்ஞ்ஞானமே பெரியது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

நமது வள்ளல்பெருமான் மாமர மக்களும் தெளிவாக புரிந்து கொள்ளும் பொருட்டு பாடல்களிலும் உரைநடைப்பகுதியிலும் 

ஆன்மா வந்த வழியும் உயிர் வந்த வழியும்,உடம்பு வந்த வழியும் ,பின் மரணம் வரும் வழியும்,மீண்டும் ஆன்மா எப்படி பிறப்பு எடுக்கின்றது என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .

2 கருத்துகள்:

6 நவம்பர், 2020 அன்று AM 6:42 க்கு, Blogger Unknown கூறியது…

Nandri

 
8 டிசம்பர், 2023 அன்று PM 7:56 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

மிக்க நன்று..

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு