சனி, 1 மார்ச், 2014

தேசிய அறிவியல் தினவிழா !

தேசிய அறிவியல் தினவிழா !

28--2--2014,அன்று தேசிய அறிவியல் தினவிழா உலகம் எங்கும் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் நடைபெற்றது .

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு நூற்றுக்கு ஒரு சதவிதம் தான் கண்டி பிடித்து உள்ளார்கள் .99,சதவிகிதம் இன்னும் நமக்குத் தெரியாத எவ்வளவோ ரகசியங்கள் இந்த உலகில் குவிந்து உள்ளன.

இந்த உலகத்தின் ,மண்,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம்,என்னும் ஐம்பூத சக்திகள் அளவில் அடங்காமல் உள்ளன.அணுக்களின் செயல்பாடுகள் அளவில் அடங்கா .இந்த உலகத்தில்.அணுக்கள் எழுவிதமாக உள்ளன.அதுதான் ஏழு சுரங்களாக உள்ளன.ஏழு அணுக்கள் ஒன்றோடு ஒன்று கலந்து பலவிதமான வண்ணங்களையும்,பலவிதமான உருவங்களையும்,பலவிதமான பொருள்களையும் உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன.அதன் ஆற்றல்களையும் அதன் செயல்பாடுகளையும் எளிதில் கண்டு கொள்ளவே முடியாது.

வள்ளலார் !

பூத ஆகாயத்தில் உள்ள அணுக்கள் எழுவிதமாக ஏழு உருவங்களாக ,ஏழு வண்ணங்களாக கண்களுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டு உள்ளன.

அவை ;--வாலணு,..திரவ அணு ,...குருஅணு,...லகுஅணு ,அணு,...பரமாணு,...விபுஅணு,..என ஏழு விதமான அணுக்கள் அனந்த வண்ண பேதமாய் உள்ளன.என்று வள்ளலார் கண்டு பிடித்து உள்ளார்கள்.

இந்த அணுக்களோடு ஆன்மா என்ற ஒளி கலந்தால் உயிர் என்ற தோற்றம் இயங்கும் ஒளியாக உருவாக்கப் படுகின்றது ,அந்த உயிர் வாழ்வதற்கு உடம்பு என்ற வீடு ,அந்த ஏழுவித மான அணுக்களால் கட்டிக் கொடுக்கப்படுகிறது .அதற்கு உயிர் உள்ள ஜீவன் என்று பெயர்.இவை தாவரம் முதல் ,ஊர்வன்,பறப்பன,நடப்பன,தேவர்,அசுரர் ,மனிதர் என ஏழுவிதமான உயிர் உள்ள ஜீவன்களை உருவாக்கி உண்டாக்கி இந்த உலகில் வாழ்ந்து கொண்டு உள்ளன.

இதிலே மனிதன் என்ற ஜீவன் உயர்ந்த அறிவு படைத்த, உயர்ந்த ஆற்றல் படைத்த உருவமாகும்.அந்த மனிதன்தான் உலக ரகசியங்களை கண்டுபிடிக்கும் அறிவு படைத்தவனாகும்.

ஏழு விதமான அணுக்கள் சூழ்ந்த உடம்பை வைத்துக் கொண்டு எதையும் முழுமையாக கண்டு பிடிக்க முடியாது என்பதைத்தான் வள்ளலார் இந்த உலக மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.

மனிதன் மரணம் அடைகின்றவன் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு உள்ளோம்,அவை இயற்கை யானது என்று இதுவரையில் நம்பிக் கொண்டு உள்ளோம்.

ஆனால் வள்ளலார் மரணம் என்பது இயற்கை அல்ல ! அவை செயற்கையாகும்.என்பதை கண்டு பிடித்து உள்ளார்.''தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் '' என்று ,மரணத்தை மனிதனால் வெல்ல முடியும் என்ற உண்மையை ,அறிவியல் ரீதியாக,விஞ்ஞான ரீதியாக கண்டு பிடித்து மரணத்தை வென்று உள்ளார்.

இதைவிட உலக அதிசயம் ,இதைவிட உலக அறிவியல் கண்டுபிடிப்பு வேறு ஒன்றும் இல்லை. மனிதன் மரணத்தை வென்றால்தான் உலக ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்ற உண்மையை உலக மக்களுக்கு தான் வாழ்ந்து காட்டி உள்ளார்.

சராசரி மனிதனால் கண்டு பிடிக்கும் அறிவியல் கொஞ்ச காலத்தில் அழிந்து போய்விடும்,மற்றவர்களையும் அழித்து விடும்.

தானும் அழியாமல் மற்றவைகளையும் அழிக்காமல் கண்டு பிடிப்பதுதான் அறிவியலாகும்.அப்படி கண்டு பிடித்தவர்தான் நமது அருட்பிரகாச வள்ளலாராகும்.

அவர் வாழ்ந்து காட்டிய உண்மைகளை,அவர் எழுதி வைத்துள்ள ''திரு அருட்பா '' என்ற அருள் நூல வாயிலாக படித்து அறிந்து கொள்ளலாம்.

வள்ளலார் உலக ரகசியங்கள் யாவையும் தெள்ளத் தெளிவாக தமிழில் எழுதி வைத்துள்ளார்.இன்னும் நம்முடைய தமிழ் நாட்டில் உள்ள அறிவியல் வல்லுனர்களும்,அணு ஆராய்சியாளர்களும்,அரசியல் வல்லுனர்களும்,அறிவுபடைத்தவர்களும்,கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கின்றது.

நம்முடைய தமிழ் நாட்டில் தோன்றிய அறிவியல் மேதை வள்ளலார் என்பதை இனிமேலாவது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

ஆன்மநேயன் ;--ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு