புதன், 27 நவம்பர், 2013

தத்துவங்கள் (96) கடந்தது சுத்த சன்மார்க்கம் !

மனித உடலின் தத்துவங்கள் (96)

சிவதத்துவம் 5. + வித்தியா தத்துவம் 7+ ஆன்ம தத்துவம் 24 + மற்ற உட்பிரிவு 60
தத்துவங்கள் (36)
சிவ தத்துவம்
(சுத்த மாயை):
5
நாதம்,விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை
வித்யா தத்துவம் 

7
மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன்
ஆன்மதத்துவம்(24)
(அசுத்த மாயை - பிரகிருதி மாயை)

பஞ்ச பூதம் (5) + ஞானேந்திரியங்கள் (5) + கர்மேந்திரியங்கள் (5) + தன்மாத்திரை (5) + அந்த கரணங்கள் (4).
பஞ்ச பூதம்
5
1. மண் 2. நீர் 3. தீ 4. காற்று 5. ஆகாயம் 
ஞானேந்திரியங்கள்
5
1. செவி 2. கண் 3. மூக்கு 4. நாக்கு 5. மெய் 
கர்மேந்திரியங்கள்
5
1. வாக்கு 2. பாதம் 3. கை 4. எருவாய் 5. கருவாய்
தன்மாத்திரை
5
1. ச்ப்தம் 2. ஸ்பரிசம் 3. ரூபம் 4. ரசம் 5. கந்தம்
அந்த கரணங்கள்
4
1. மனம் 2. அகங்காரம் 3. புத்தி 4. சித்தம்,5,உள்ளம்  
புறக்கருவிகள் (60)
பிருதிவியின் காரியம்
5
1. மயிர் 2. தோல் 3. எலும்பு 4. நரம்பு 5. தசை
அப்புவின் காரியம்
5
1. நீர் 2. உதிரம் 3. மூளை 4. மச்சை 5. சுக்கிலம் 
தேயுவின் காரியம்
5
1. ஆகாரம் 2. நித்திரை 3. பயம் 4. மைதுனம் 5. சோம்பல்
வாயுவின் காரியம்
5
1. ஓடல் 2. இருத்தல் 3. நடத்தல் 4. கிடத்தல் 5. தத்தல்( குதித்தல் )
ஆகாயத்தின் காரியம்
5
1. குரோதம் 2. லோபம் 3. மோகம் 4. மதம் 5. மாற்சரியம்
வாசனாதி
5
1. வசனம் 2. கமனம் 3. தானம் 4. விசர்க்கம் 5. ஆனந்தம்
வாயு
10
1. பிராணன் 2. அபானன் 3. வியானன் 4. உதானன் 5. சமானன் 6. நாகன் 7. கூர்மன் 8. கிருதரன் 9. தேவதத்தன்
10. தனஞ்சயன்
நாடி
10
1. இடை 2. பிங்கலை 3. சுழுமுனை 4. காந்தாரி 5. அத்தி
6. சிங்குவை 7. அலம்புடை 8. புருடன் 9. சங்கினி 10. குரு
வாக்கு
4
1. சூக்குமை ,2. பைசந்தி 3. மத்திமை 4. வைகரி
ஏடணை ( விருப்பம்)
3
1. தாரவேடணை 2. புத்திர வேடணை 3. அர்த்தவேடணை 
குணம்
3
1. சாத்துவீகம் 2. இராசதம் 3. தாமதம்

தத்துவம்
குறிப்புகள்
காலம்

சென்றது, நடப்பது, வருவது
நியதி

அவரவர் வினையை அவரவர்களை அநுபவிப்பது
கலை

ஆன்மாவின் ஆணவத்தை சிறிது அகற்றும், கிரியை எழுப்பும்
அராகம்

ஆசையை எழுப்பும்
புருடன்

விஷயங்களில் மயங்கும்
சூக்குமை
-சொல் தோன்றாது ஒலி மட்டுமாய் உள்ளது
பைசந்தி
-சொல் விளங்கியும் விளங்காமலுமாய் நிற்பது
மத்திமை
-உதானன் என்ற வாயுவால் பொருள் விளங்க உருவாகும் மொழி நிலை
வைகரி
-சொல் புறத்தே தன் செவிக்கு மட்டும் கேட்கும் நிலை
வாயு
எனபது நம்முடலில் ஓடும் சீவக்காற்று. இதுவே, வாசி, காலெனப் பலப் பெயர்களில் கூறப்பட்டுள்ளன. வாயு இல்லையேல் சலனமில்லை (அகச் சலனம் & புறச்சலனம்). புறத்தே சில உடலுறுப்புக்கள் வலுவிழப்பதற்குமதுவே காரணம். உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று. இவை 5ம் பிரதான வாயுக்கள். மற்றவை உபவாயுக்கள்.
பிராணவாயு
உயிர்வளி : இது இரு உதய தானத்திலிருந்து நாசிவழி மேலெழுந்து செல்லுவது. பசி, தாகங்களையுண்டுபண்ணி, உணவைச் சீரணிக்கும் சக்தியுடையது. இதை இரேசகமென்பர்.
அபானன் 
மலக்காற்று:இது இன்பச் சுரப்பிகளையும், குத, குய்யம் ஆகியவைகளிலும் பூரக சஞ்சாரம் செய்து, அவ்வுறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் செய்ய உதவுவது.
வியானன்
தொழிற்காற்று : இது உடலின் எல்லா பாகங்களிலும் விரவிநின்று உணர்வுகளை உட்கிரகிக்கும். உண்ட உணவைச் சக்கை, சாறாய்ப் பிரித்துத்தரும்.
உதானன் 
ஒலிக்காற்று : இது உதராக்கினியை எழுப்பிக் கண்டமாகிய கழுத்துள்ளிருந்து, உணவை உண்ணவும், அதன் சாரங்களை நாடிகளுக்கு அனுப்பவும் செய்கிறது.
சமானன்
நிரவுகற்று : இது நாபியிலிருந்து கொண்டு உண்ட உணவின் சாரத்தை பங்கிட்டு,இரத்தமாக்கி எல்லா உறுப்புகளுக்கு அளித்து உடலை வளர்க்கும். இவ்வாறே மற்றவையும். ஆயினும், இவ்வாயு எங்கிருந்து வருகிறது? எங்குள்ளது? என்னும் வினாக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. கருப்பத்தில் குழந்தை உருவாகும் பொழுது, வளரும்பொழுதும் குழந்தைக்கு உயிர் உண்டு . அது மாமிச பிண்டம். ஆனால், கருப்பப் பையினுள்ளேதான் அவ்வாயு உள்ளது.அதன் தொடர்பு தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தையின் தொப்புள் கொடி வழியாக அமுதக் காற்று அனுப்பபடுகிறது. ஆனால் தனியாக உள்ளது. மற்ற நீர்வாழ் செந்துக்களுக்கு வைக்கப்பட்டதுபோல் வைக்கப்பட்டுள்ளது. தாயின் கருவரையைவிட்டு வெளியே வந்தவுடனே, வெளிக் காற்றுவான பூதக் காற்றை சுவாசிக்க அக்குழந்தை துடிக்கிறது.தாயின் தொப்புள் கொடியை துண்டிக்கும் போதுதான் குழந்தை வெளிக்காற்றை சுவாசிக்கிறது  சடாரென வெளியில் இருந்து சுவாசிக்கும் காற்று மரணம் அடையும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இது பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் .

வெளியே வந்ததும் மண்,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம்,என்னும் ஐந்து பூதங்களும் இணைந்து செயல்படுகின்றன .இதனால் காற்றுக்கு என தனி மரியாதை இல்லை.ஐந்து பூதங்களும் சேர்ந்துதான் உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளது .

நாகன்
தும்மற்காற்று

கூர்மன்
விழிக்காற்று :இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும். மயிர்க்கூச்சல், சிரிப்பு, புளகம், முகச் சேட்டைகள் ஆகியவைகளைச் செய்யும். இதை அடக்க இமையா நாட்டம் கிடைக்கும்).
கிருகரன்
கொட்டாவிக்காற்று
தேவதத்தன்
இமைக்காற்று
தனஞ்செயன்
வீங்கற்காற்று
இடைகலை

பிங்கலை

சுழுமுனை

காந்தாரி
இடக்கண் நரம்பு (இதில் ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இருநரம்புகள் கூடுகின்றன என்பர்)
அத்தி
வலது காது நரம்பு
சிங்குவை
உள்நாக்கு நரம்பு.
அலம்புடை
இடது காது நாடி (அலம்புஷா, பூஷா என்னும் நாடிகளின் சேர்க்கையென்பர்)
புருடன்
வலக்கண் நரம்பு.
சங்கினி
மருமத்தான நாடி
குகு
மலவாய் நாடி (குகு நாடியும் சிநீவாலி நாடியும் இரக்தவியானன் நாடியும் சேர்ந்திருக்கும் என்பர்)

மேலே சொலப்பட்ட தத்துவங்கள் அனைத்தையும் செயல்பட வைக்கும் மூலமானது ஒவ்வொரு ஆன்மாவிலும் உள்ள அருள் என்னும் அமுதக் காற்றாகும்.மின் ஒளி போன்றது. இவை தத்துவங்களைத் இயக்கம் தனித் தலைமை பெரும் பதியின் ஆற்றலாகும் .இதற்கு இயற்கை விளக்கம் என்பதாகும்.

இயற்கை உண்மையாக உள்ள அருட்பெரும்பதியின் கருணையினால் ,இயற்கை விளக்கமாக தோன்றும் அருளே அனைத்தையும் இயக்குவதற்கு துணை புரிகின்றது..

இயற்கை உண்மை இடம் இருந்து, இயற்கை விளக்கம் என்னும் அருளைப் பெற்று உயிர் இயங்குவதால் ,இயற்கை இன்பம் என்னும் உடம்பு இயங்குகின்றது.இந்த உண்மையை அறிந்து கொண்டால் உடம்பையும் உயிரையும் அழிக்காமல் ,இயற்கை உண்மை என்னும் ஆன்மாவின் உள் இருந்து வரும் அருளை வெளியே விரையம் செய்யாமல் ,உயிரையும் உடம்பையும் பாது காக்கும் வழியைத் தெரிந்து கொள்ளலாம் .

இதுவே சாகாத்தலை ,போகாப்புனல்,வேகாக் காலாகும்.

ஆன்மா உயிரையும்,உடம்பையும் விட்டு வெளியே போகாமல் ,தன அருளாலே உயிரையும்,உடம்பையும் ஆன்மாவின் தன்மைக்கு ஒளியாக மாற்றமுடியும் என்பதுதான் வள்ளலார் சொல்லித்தந்த சாகாக் கலையாகும்..இதுவே சாகாக் கல்வியாகும் .

தத்துவங்கள் ஜடங்கள், ஜடங்கள் என்னும் தத்துவங்களை தனித்தனியாக கடந்து தத்துவத்தின் மேலே உள்ள சித்து என்னும் சத்தை பெற்று, அதற்கும் மேல் உள்ள சிவநிலையை தெரிந்து அதன் மயமாகி,உயிரும் உடம்பும் கரைந்து அருள் மயமாவதே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும் .

இந்த உண்மையான அருள்நிலைக் கண்டவர் ஒருவரே நம்முடைய அருள் தந்தை திரு அருட்பிரகாச வள்ளல்பெருமானாகும் .கண்டது மட்டும் அல்லாது அதன்படி வாழ்ந்து காட்டியுள்ளார் .அவர் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையை விட்டு விலகாமல் நாமும் அதன்படி வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழியைக் காட்டுவோம்.

ஆன்மநேயன்;--கதிர்வேல்.

     

3 கருத்துகள்:

15 ஜனவரி, 2014 அன்று PM 11:17 க்கு, Blogger sun கூறியது…

அருைம ஆன்மநேயநன்பரே

 
21 ஜனவரி, 2014 அன்று PM 3:09 க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

நன்றி வாழ்த்துக்கள்

 
19 மே, 2014 அன்று PM 7:29 க்கு, Blogger Unknown கூறியது…

மிகவும் அருமை .. தொடருங்கள் . வாழ்த்துக்கள் .

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு