சனி, 9 நவம்பர், 2013

ஞானம் என்பது யாது ?

ஞானம் என்பது யாது ?

ஞானம் என்பது ஒன்றும் இல்லாதது .அருளைப்பெற்று தன்னை ஒன்றும் இல்லாது மாற்றிக் கொள்வது ஞானம் என்பதாகும்.இறைவனுக்கு ஞான தேகம் என்று பெயர் உண்டு .

ஜோதிமலை மேல் வீட்டில் தூய திருவமுதம் 
மேதினிமேல் நான் உண்ண வேண்டினேன் --ஓதரிய 
ஏகா அனேகா எழிற் பொதுவில் வாழ'' ஞானதேகா ''
தகவைத் திற !

என்று வள்ளலார் பதிவு செய்துள்ளார் , ஆதலால் ஞானம் என்பது ஊன கண்களுக்குத தெரியாத அருள் ஒளியாகும அதுவே தனிப் பெருங் கருணையாக செயல் பட்டுக் கொண்டு உள்ளது. அந்த கருணை உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் இருந்து பெறுவதுதான் அருள் என்பதாகும்.ஜோதி மலை என்பது இறைவன் இருக்கும் கோட்டையாகும் அது அருள் பெருவெளியாகும் .

அதனால்தான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார் 
ஞான வீட்டின் கதவைத் திறக்க வேண்டுமானால் ஜீவ காருண்யம் என்னும் சாவியை முதலில் நாம் பெற வேண்டும்.அதற்கு மேல் நிறைய தடைகள் இருக்கிறது அந்த தடைகள் எல்லாம் சத்விசாரம் என்னும்,தன்னை அறிந்து இன்பமுற தந்திரங்கள் அறிந்து கொள்ள வேண்டும் .

ஞானம் அடைய பெற வழி நம்முடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் உள்ள நடுக்கண்ணில் உள்ள ஒளியை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்.அதுதான் சிற்சபை என்பதாகும்.
சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தி எல்லாம் சத்தியம் சேர்ந்திடும் என்கிறார் வள்ளலார்.

உடம்பை இயக்குவது மனம் ,உயிரை இயக்குவது ஆன்மா என்னும் நடுக்கண் ஒளியாகும் .அந்த ஒளியை தொடர்பு கொள்ளுவதே .உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் ஞானம என்னும் அமுதமாகும்.அந்த ஞானத்தைப் பெறுவதே இறைவனை அடைவதாகும் .

அதற்கு மனதை அடக்கி சிற்சபைக் கண் மனத்தை செலுத்த வேண்டும்.மனத்தை அடக்கத் தெரிந்தவன் மனிதனாகும் .அவனே ஞானத்தைப் பெரும் வழியைத் தெரிந்தவன்.

உங்கள் ஆன்மநேயன்;--கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு