வெள்ளி, 8 நவம்பர், 2013

பணம் எதையும் செய்யும் !

பணம் எதையும் செய்யும் !

அறிவு சார்ந்த ஆசான்களும்,அறிவு சார்ந்த சிந்தனையாளர்களும்,பணம் படைத்தவர்களுக்கு அடிமை யாகிவிடுகிரார்கள்.பணம் படைத்தவர்கள் அவர்களை தன்வழிக்கு கொண்டு சென்று அற்ப பேரும் புகழ்க்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்க முற்படுகிறார்கள்.ஆசான்களும் அற்ப மகிழ்ச்சிக்கு கட்டுப்பட்டு அழிந்து போய் விடுகிறார்கள்.அப்பேற்பட்ட ஆசான்களின் வழியைப் பின்பற்றினால் நம்முடைய வாழ்க்கை என்னவாவது என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

அதனால்தான் வள்ளலார் --கண்டது எல்லாம் அனித்தியமே ,கேட்டது எல்லாம் பழுதே,கற்றது எல்லாம் பொய்யே ,நீர் களித்தது எல்லாம் வீணே,உண்டது எல்லாம் மலமே,உட்கொண்டது எல்லாம் குறையே உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே, என்று நமக்கு அறிவு புகட்டுகிறார். அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்ளுங்கள் ,

எனக்குத் தெரிந்த ஒருவர் மிகவும் திறமையும் அறிவும் ஆற்றலும் உள்ளவர் வள்ளலார்மேல் மிகவும் பற்று உள்ளவர் .சென்னையை சேர்ந்தவர் .யோகமுறைகளை நன்கு அறிந்தவர் தன்னலம் கருதாத தவசீலர்.அவர் ஒரு பணக்காரரிடம் வந்து மாட்டிக் கொண்டு வெளியே வரமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு இறந்து விட்டார்.ஆதலால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அறிவையும் ஞானத்தையும் பணத்தைக் கொண்டு பெறமுடியாது.என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்புடன் ஆண்மநேயன் ;--கதிர்வேல்  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு