செவ்வாய், 5 ஜூன், 2012

உண்மைப் பொது நெறி ''சுத்த சன்மார்க்கம் ''!

''சத்திய ஞான சபை ''


உண்மைப் பொது நெறி ''சுத்த சன்மார்க்கம் '' !

உலகத்தில் மனித வாழ்க்கைக்கு ,பல நெறிகளை ,பல வழிமுறைகளை கற்பிப்பதற்கு பல மார்க்கங்கள்,பல பெரிய மனிதர்களாலும் ,பல அருளாளர்களாலும் வகுக்கப் பட்டுள்ளன் .அப்படி இருக்க... உண்மை பொது நெறியான சுத்த சன்மார்க்கம் என்பதை ஏன் அறிந்து,தெரிந்து கொள்ள வேண்டும்

உண்மைப் பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத்தை பற்றி ,நாம் அறிந்து தெரிந்து கொள்வதால் என்ன லாபம் ? என்பதை நாம் நினைக்கலாம்... கேட்கலாம் ..சந்தேகம் வரலாம் ..

உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் ...நாமும் அறிய வேண்டுவதும்...ஒழுக வேண்டுவதும் யாது எனில் :...மனிதனாக பிறப்பு கொடுத்ததின் நோக்கம் ..இந்த உலகத்தில் வாழ்ந்து அழிந்து போவதற்கு அல்ல.... என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும் .

மனிதப்பிறப்பு !

இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட ...ஆன்மா என்னும் ஒளியானது ....தாவரம் முதல் மிருகம் வரை ,...உள்ள ஜீவன்கள் ...இந்த உலகத்தில் பிறந்து பிறந்து --வாழ்ந்து வாழ்ந்து ...இறந்து இறந்து...பின் இந்த மனித தேகம் கிடைத்துள்ளது என்பதை முதலில் நாம் அறிந்து,தெரிந்து கொள்ள வேண்டும் .

உயர்ந்த பிறப்பு என்பதும்... உயர்ந்த அறிவு என்பதும் ....உயர்ந்த செயல என்பதும் ,மனித பிறவிக்கு மட்டும் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்,

மனிதனுக்கு மட்டும் ,சிந்திக்கும் திறன் ...பேசும் திறன் ...எதையும் அறியும், அறிவுத் திறன் ,..மேலும் ..மனம் ,சொல்,செயல் ..போன்ற சிறப்பு அம்சங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டு உள்ளது .மற்றப் பிராணிகளுக்கு இல்லாத உயர் அறிவாகிய பகுத்தறிவு மனிதனுக்கே அமைந்திருக்கிறது ,மேலும் பகுத்தறிவு என்பது பூகோள...ரசாயன,சாத்திர அறிவுகளுக்கு அப்பாற்பட்ட ''இறை உணர்வினையும் ''கொடுக்கப்பட்டுள்ளது .இறை உணர்வு உடையவனே மனிதன் எனப்படுவார்கள் .அதனால்தான் மனித பிறப்பு ..எல்லா பிறப்புகளிலும் உயர்ந்த பிறப்பு என்பதாகும் .

உயர்ந்த பிறப்பு என்பதை புரிந்த கொண்ட நாம் ,உயர்ந்த மார்க்கம் ,உயர்ந்த கொள்கை ,உயர்ந்த வாழ்க்கை எவை என்பதை,அறிந்து கொள்ள தவறி விட்டோம் .காரணம் ...உலகத்தில் உள்ள எல்லா மனித ஜீவர்களுக்கும் ,பொதுப்படையான....உண்மைப் பொது நெறியை எவரும் படைக்கவில்லை .தோற்றுவிக்கப் படவில்லை .

சாதி மார்க்கம் .சமய மார்க்கம்,மதமார்க்கம் ,சாத்திரமார்க்கம்,தோத்திர மார்க்கம் ,என பல மார்க்கங்கள் உள்ளன ,அதனால் மனிதர்கள் ,ஆன்மநேயம் ,மனித நேயம் இல்லாமல் ,பிளவுப்பட்டு அழிந்து கொண்டு இருக்கிறார்கள் .. அனைவருக்கும்,உண்மையான ,பொதுவான ஒரு மார்க்கத்தை {வழியை }கண்டு பிடித்து வழிநடத்த,..முன்னாடி உள்ள பெரியவர்கள் ,எவருக்கும் தெரியவில்லை ....பொதுவான மார்க்கமும் இல்லை ..என்பதை வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடலைப் பார்ப்போம் .

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே யபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே ''சன்மார்க்க நிலைதனிலே ''ஞான
நிருத்தமிடும் தனித் தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றேன் உமையே .!

சாதி ,சமயம்,மதம்,சாத்திரம்,கோத்திரம் ,,போன்ற பொய்யான நெறிகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ...நம்முடைய பெரியவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் ...அவற்றை பின்பற்றி கடைபிடித்து வந்த மக்கள்,உண்மை என்னவென்று தெரியாமல் சண்டையிட்டு கொண்டும் ,மாண்டு {இறந்து} கொண்டும் இருக்கிறார்கள் ...வீணாக அழிந்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதை அறிந்த ,உண்மையான,பெய்ப்பொருள் என்னும் ஆண்டவர் {இறைவன் }....''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ''...உண்மைப் பொது நெறி  என்னும் ''சுத்த சன்மார்க்கம் நெறியை '' தோற்றுவித்து உள்ளார்... அந்நெறியின் வழியாக மனிதர்களை.... அழியாமல் வாழ்வது .. வாழ வைப்பது எப்படி என்பதை...உலக மக்களுக்கு தெரியப் படுத்தியுள்ளார் ,

நமது அருட்தந்தை திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் ...உடம்பில் கலந்து,....உயிரில் கலந்து ....,ஆன்மாவில் கலந்து ..அருளின் முழு பூரணத்தை ,அளித்து ....மரணத்தை வென்று ...ஒளிதேகம் பெற்றுப் பேரின்ப பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ,வள்ளலாருக்கு ....முழுமையான ஆற்றலையும் அனுமதியும் கொடுத்து ,....ஐந்தொழில் வல்லபத்தையும் தந்து ...அவரது ஆன்மாவில் இறங்கி ,உள் இருந்து செயல் பட்டுக் கொண்டு இருப்பவர் ...அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.

சுத்த சன்மார்க்கம் காட்டும் மனித வாழ்க்கை !  

 உலகத்தில் உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் ,இந்தப் பிறப்பினால் அடையத் தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள பொழுதே விரைந்து அறிந்து அடைய வேண்டும் .

அந்தத் தலைப்பட்ட ஆன்ம இன்ப வாழ்வு எத்தனை வகை ?என்று அறியவேண்டும் எனில் ...

இம்மை இன்ப வாழ்வு ....மறுமை இன்ப வாழ்வு ....பேரின்ப வாழ்வு ...என மூன்று வகை என்று அறிந்து கொள்ள வேண்டும் .

சிறிய தேக கரணங்கள் ....,,பெரிய தேக கரணங்கள் ...எல்லா தேகங்களும் ,எல்லா கரணங்களையும்,... அறியப் பெற்று வாழ்வதே மனிதப் பிறப்பின் இரகசியமாகும் .என்பதை ''வள்ளல் பெருமான்'' ...''ஜீவ காருண்ய ஒழுக்கம்'' என்ற பதிப்பில் பதிவு செய்துள்ளார் ... படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

மனிதன் ....மனிதனாக வாழ்ந்து ....அருளைப் பெற்று ...இறைநிலையை அடையலாம் என்பதை சொல்ல வந்த ,மதங்கள்... சமயங்கள் ,யாவும்  ...முறையான ..உண்மையான வழிமுறைகளை,மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு சொல்லவில்லை,உண்மையை மறைத்து ...வெளியே தத்துவங்களாக படைத்துள்ளார்கள் ....உடம்பையும் உடம்பின் உள்ளே செயல்படும் கருவிகள் யாவையும் ,...வெளியே கோயில்களாகவும் ,ஆலயங்களாகவும் ,சர்சுகளாகவும் ,மசூதிகளாகவும்,பிரமீடுகளாகவும் படைத்து ,...அதன் உள்ளே ...கடவுள் இருப்பதாக படைத்து விட்டார்கள்

மண்,...கற்கள்....இரும்பு,..செம்பு.....தங்கம்....பஞ்சஉலோகம் ..போன்ற அசையாத ஜடப் பொருள்களைக் கொண்டு உருவங்கள் செய்து ,அதில் கடவுள் காரியப் படுகிறார் என்பது பக்தி மார்க்கத்தின் செய்லபாடுகளாகும்.

இவற்றை பகுத்தறிவு உள்ள மனிதர்கள் ஏற்றுக் கொள்வதில்லை .இவை வாழை மட்டையில் தீ பிடிக்காதது போலாகும் .

 உண்மையான கடவுளைப் பற்றி சொல்லாவிட்டாலும்,...காட்டுவதற்கு முடியாவிட்டாலும் பரவாயில்லை .....ஒரே இடத்தில் இருந்து வந்த,,ஆன்மநேய ,சகோதர உயிர்களை ,சாதி ...சமயம்...மதம் என்ற பிரிவினையை உருவாக்கி ,ஒவ்வொரு மதங்களும் ,...சமயங்களும் ..சாதிப் பிரிவினைகளை உருவாக்கி விட்டன ,அதனால் அவைகள்  யாவும்,.....தன்னுடைய கொள்கைகளும் செய்லபாடுகளும் ...உயர்ந்தது ...தாழ்ந்தது ..என்று தன்னைத்தானே ,போட்டிப் போட்டுக் கொண்டும் ..சண்டையிட்டு கொண்டும் அழிந்து வீண் போய் கொண்டு இருக்கின்றன ...

அவைகளின் பொய்யான வழிகளைப் பின்பற்றி ,அதன்படி வாழ்ந்து வந்த  மக்கள் ...அழிந்து கொண்டே இருக்கிறார்கள், என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பார்த்தால் தெரியும் .

பேருற்ற உலகில் உறு சமயமத நெறிஎலாம்
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதமுற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினார் இன்னும் வீண்
போகாதபடி விரைந்தே
புனிதமுறு ''சுத்த சன்மார்க்க நெறி ''காட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி யெல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரித நீ
என்பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில்
வேறு எண்ணற்க எனற குருவே
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்குண ஆனந்த பரநாதாந்த வரை யோங்கும்
நீதி நடராஜ பதியே !

என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார் ,

உலகில் உள்ள சமயங்களும் ,மதங்களும் ,மார்க்கங்களும் உண்மை எவை என்பதை உணராமல் ..பேய் பிடித்த குழந்தைகள் போல் ...உனது பெரிது ..எனது பெரிது ..என்று சிறுப்பிள்ளைத் தனமாக ,சண்டைப் போட்டுக் கொண்டும்,போரிட்டுக் கொண்டும் {போருற்று} அழிந்து வீண் போய் கொண்டு இருக்கிறார்கள் .

ஆதலால் என்னுடைய மகனாகிய உனக்கு ...{வள்ளலார் }இப்போது ...அவசியம் அவசரம் என்பதால் ஒரு முக்கிய பணியை உமக்குத் தருகிறேன் ,அவற்றை ஏற்றுக் கொண்டு '''சுத்த சன்மார்க்கம் ''என்னும் உண்மைப் பொது நெறியின் வாயிலாக ...''உண்மையான இறைவன் யார் ''? நாம் யார் ?இறைவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு ?நாம் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து எப்படி வாழவேண்டும் ? வாழ்வதற்கு உண்மையான வழிக் காட்டும் மார்க்கம் எவை என்பதை...,உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும் .

உலக மக்கள் அனைவரும் உண்மையை,அறிந்து உணர்ந்து ,எல்லோரும் அளவில்லா பேரின்பத்தில் வாழ வேண்டும்....இதுவே என்னுடைய ஆணையாகும் என்பதை ..''உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! ''...வள்ளல் பெருமானுக்கு இட்ட கட்டளையாகும் .

அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் கட்டளையை.... சிரமேற் ஏற்றுக் கொண்டு.. ''திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் ''--- அவர்களால் ,...தொடங்கி செயல்பட்டுக் கொண்டு வரும் மார்க்கம்தான் ..உண்மை பொது நெறியாகிய '''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்பதாகும் . மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல வருமாறு ;--

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் ----என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வானாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து !

இவ்வுலகில் உள்ளவர்கள் மட்டும் அல்ல ,  எல்லா உலகங்களிலும் உள்ளவர்களும் ...உண்மைப் பொது நெறியாகிய ''சுத்த சன்மார்க்க நெறியை'' ..பாராட்டி மகிழ்ந்து புகழ்ந்து போற்றுகிறார்கள் என்கிறார்... வள்ளல் பெருமான்;--

உலகில் உள்ள எல்லா சமயங்களுக்கும் ,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,உண்மைப் பொது நெறியாக ....சுத்த சன்மார்க்கம் விளங்குகிறது என்கிறார் வள்ளலார் .

இதுவரையில் மக்கள் உண்மை மார்க்கம் என்ன என்று தெரியாமல், பொய்யான மார்க்கங்களை உண்மை என்று நம்பி ஏமாந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் .ஆதலால் இறைவனே உண்மை மார்க்கமான ---''சுத்த சன்மார்க்கத்தை''--- வள்ளலார் மூலமாக உலகம் முழுவதற்கும் அறிமுகப் படுத்தி உள்ளார் .

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு
வரு நெறியில் எனை யாட்கொண்டு அருள் அமுதம் அளித்து
வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல
பெரு நெறியில் சித்தாட திருஉளம் கொண்டு அருளிப்
பெருங் கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே
கருநெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர்
கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே !

எனற உண்மையை ---உலக மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார் வள்ளலார் --.உண்மைப் பொது நெறியாகிய சுத்த சன்மார்க்க நெறி --உலகம் முழுவதும் பறந்து விரிந்து பறை சாற்றும் ,---இவற்றை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.--எனவே இதுவே உலகப் பொது நெறியாகும் ---''கடவுளின் உண்மை நெறியாகும்.''

பொதுவானது என்பது எப்படி ?

எல்லா அண்டங்களையும் எல்லா உலகங்களையும் ,எல்லா உயிர்களையும்,எல்லாப் பொருள்களையும் ,மற்றைய எல்லா வற்றையும்,
தோற்றுவித்தும் ,
விளக்கஞ் செய்வித்தும்,
துரிசு நீக்குவித்தும் ,
பக்குவம் வருவித்தும்,
பலன் தருவித்தும்,
எங்கும் பூரணராகி விளங்குகின்ற ''ஓர் உண்மைக் கடவுள் ''--உண்டு என்றும் ,அக்கடவுளை--- உண்மை அன்பால் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் ---அக்கடவுள் திருவருள் ---நமது கருத்தின் கண் வெளிப்பட்டு,விளங்கும் என்றும்,---அத்திருவருள் விளக்கத்தால் மரணம்,--பிணி,--மூப்பு ,--பயம்,-- துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து எக்காலத்தும்-- எவ்விடத்தும் --எவ்விதத்தும் --எவ்வளவும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைதல் கூடும் என்றும்,---எங்கள் அறிவில் தேவரீர்---'' திருஅருளால்'' உண்மைப்பட உணர்த்தி அருளப் பெற்றோம் .

இங்கனமாக சுத்த சன்மார்க்கத்தில் வழிபடும் கடவுள் ''பொதுக் கடவுளாக''வெளிப்படுத்த பட்டு உள்ளது.அந்த உண்மையான ---பொதுக் கடவுள் தான் ''அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும்'' அந்த கடவுள் தனக்கு எப்படி தெரிந்தது என்பதை விளக்கமாக சொல்லுகிறார் ---வள்ளலார் ,

கடல் கடந்தேன் கரையடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி எலாம் கண்டேன்
அடர்கடந்த திருவமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்
அறிந்து தெளிந்து அறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என்வசம் ஓங்கினவே
இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருட்செயலே.!

இறைவனை அறிந்து கொள்ளும் தடைகள் ,அனைத்தையும் நீக்கி ...கதவு திறந்து ...உண்மையான மெய்ப்பொருளை கண்டேன் .....இதனால் என் உள்ளம் குளிர்ந்தது ...உயிர் நிலைப் பெற்றது ...உள்ளம் எலாம் மகிழ்ச்சி அடைந்தது ..என்றும் அழியாத ஒளி உருவாய் அழியாமை அடைந்தேன் .இறைவன் எந்த வடிவில் உள்ளாரோ ,அதன் வடிவாக மாறினேன் ....இறைவன் செயல் அனைத்தும் என்வசம் நிறைந்து ஓங்குகிறது ....இத்தனையும் பொது நடம் செய்யும் இறைவனுடைய அருட் செயலே ...இறைவன் தரும் அருள் அமுதம் ...இத்தனைக்கும் காரணமாகும் ..என்கிறார் வள்ளலார் .

சாகாதவனே சன்மார்க்கி என்றும் .....சுத்த சன்மார்க்கம் ஒன்றே சாகாத கல்வியை கற்றுத் தரும் பொது மார்க்கம் என்றும் ....கடவுளால் உண்டாக்கப்பட்டப் உண்மைப் பொது நெறி ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்னும் புதிய நெறியை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார்

இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலை மேல் ஏற்றி இருக்கின்றார் ,ஏன் என்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது --,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர் களானால் --என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரையில் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தை பெற்றுக் கொண்டார்களா ?என்றால் யாரும் பெற்றுக் கொள்ள வில்லை .

ஏன் விடவேண்டும் ? வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் மோர்
பவநெறி இதுவரை பரவியது அதனால்
சென்னெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ
புன்னெறி தவிர்த்து ஒரு ''பொது நெறி '' எனும் வான்
புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக எனற என்னரசே
தனி நடராஜ சற்குரு மணியே !....என்றும் ,

நண்ணிய மதநெறி பலபல அவையே
நன்றற நின்றன சென்றன சிலவே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
அலைதரு கின்றனர் அலைவற மகனே
புண்ணியம் உறுதிரு அருள் நெறி இதுவே
''பொது நெறி '' என அறிவுற முயலுதி நீ
தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
தனி நடராஜ என் சற்குரு மணியே .!

மேலே கண்ட பாடல்களில் தெளிவான தமிழில் ,அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு தெரியப்படுத்தி உள்ளார் ....சமயங்களின் செயல்பாடுகளும் ..மதங்களின் செயல்பாடுகளும்.....மக்களை எந்த அளவிற்கு அறியாமை என்னும் பள்ளத்தில் ...தள்ளி விட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .இனிமேலும் பள்ளத்தில் விழுந்து அழியாமல் ...அனைத்து பற்றுகளையும் விட்டுவிட்டு வாருங்கள் என்று ,அனைத்துலக மக்களையும் அழைக்கிறார் .....நமது அருட்தந்தை அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் .

எதை விட வேண்டும் !

இதுவரையில் நாம் பற்று வைத்துக் கொண்டு இருந்த சைவம்,வைணவம்,முதலிய சமயங்களிலும்,வேதாந்தம்,சித்தாந்தம் என்று சொல்லப்படுகின்ற,இந்துமதம்,--கிருத்துவமதம்,---இஸ்லாமியமதம்,---புத்தமதம்,---ஜைனமதம்,முதலிய மதங்களில் எதிலும்,.....லஷியம் வைக்க வேண்டாம் ,{அவற்றில் தெய்வத்தைப் பற்றி }---மறைமுகமாக குறித்து இருக்கின்றதே அன்றிப் புறங் கவியைச் சொல்ல வில்லை ---அவ்வாறு அவர்கள் சொல்லியதை பயிலுவோம் என்றால்,--அதில் உண்மையும் இல்லை !-- அவற்றை முழுதும் படித்து அறிந்து கொள்ள ---நமக்குக் காலமும் நேரமும் இல்லை ....ஆதலால் அவற்றில் லஷியம் வைக்க வேண்டாம்.

அவர்களின் நிலைப்பாடு என்ன ? அவர்களுக்கு எந்த அளவிற்க்கு இறைவன் அருள் கிடைத்து உள்ளது. என்பதை வள்ளலார் சொல்லுகிறார்கள் .

அறங்குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை எதனால் எனில் இம் மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெருவதுமாய் உழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத்தலமை பதத்தலைமை வாய்த்தனர் அங்கு அவர் பால்
இறங்களில் என் பேசுதலால் என் பயனோ நடஞ் செய்
இறைவர் அடிப் புகழ் இருக்கின்றேன் யானே !

மேலே கண்ட பாடல்களில்...அவர்களின் தகுதி என்ன என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளலார்--அவர்களும் மனிதர்கள் போல்,உண்ணுவதும் ,உறங்குவதும்,மீண்டும் பிறப்பு இறப்பு உள்ளவர்கள் என்பதாகும் . மனிதர்களைப் போல் வாழ்ந்து,சில பல விரதங்களில் இருந்து சிறிய தேக கரணங்களைப் பெற்று ....பின் பெரிய தேக கரணங்களைப் பெற்று ...முழுமையான அருள் தேகத்தைப் பெறாமல் --ஓர் சிறிய அற்ப சித்தியைப் பெற்றுக் கொண்டு உள்ளவர் களாவார்கள்,

ஆதலால் மதத் தலைவராகவும் ...பதத் தலைவர்களாகவும் ...போதகராகவும் பொறுப்பேற்று ...சிறிய பொறுப்புகளில் இருந்து வந்து உள்ளார்கள்....அவர்களை உண்மையான அருளாளர்கள் என்று நினைதது வழிபாடு செய்வது அறியாமையாகும்.---அவர்களைப் பற்றி போற்றிப் பேசுவதாலோ,...அவர்களைப் போற்றி வழிபாடு செயவதாலோ ,எந்த பயனும் இல்லை ,--

நான் உண்மையான கடவுளைக் கண்டு கொண்டேன் ...அக் கடவுளை உண்மை அறிவால் ..உண்மை அன்பால் ...உண்மை அருளால் ... ''பரிபூரண அருளப் பெற்று ''அவருடைய அருளை முழுமையாகப் பெற்று மரணத்தை வென்று ,.....பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்கிறேன் ,என்கிறார் வள்ளல் பெருமான் .
நீங்களும் அந்த உண்மையான கடவுளை ...தொடபு கொண்டு அருளைப் பெற்று வாழ்வதற்கு எந்த தடைகளும் கிடையாது ,ஆதலால் நீங்கள்... எந்த--ஆன்மீகத்  தலைவர்களையும்...கர்த்தர்களையும் ,...போதகர்களையும் ...பின்பற்றிச் சென்று ..அவர்களுடைய போதனைகளில் மயங்க வேண்டாம் .அவர்களை உண்மையானவர்கள் ...என நினைந்து ...வழிபாடு செய்ய வேண்டாம் ...அந்த ..,..சமய,..மத வாதிகளால் எந்த பயனும் இல்லை என்பதை தெளிவாக விளக்கி உள்ளார், நமது அருட் தந்தை வள்ளலார் அவர்கள் .

ஆகையால்.. அவர்களால் உண்டாக்கிய மார்க்கங்களில்,-- முழுமையான உண்மை இல்லை ,கர்மசித்தியை லேசாக சொல்லி இருக்கிறார்கள் ..ஆதலால் நாம் அடைய வேண்டுவது ,முடிவான ''ஆன்ம லாபமாகிய '' கடவுள் அனுபவமே அன்றி வேறில்லை ...நமக்கு சொர்க்கம் நரகம் போன்ற விசாரம் தேவை இல்லை .சொர்க்கம் நரகம் விசாரம் உள்ளவர்கள் ,தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப லாபத்தைப் பெற்று ,முடிவில் தடைப்பட்டுத் திருவருள் துணையால் ,கருணை நன்முயச்சி எடுத்துக் கொண்டு ,பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள் அஃது அருமை .

இத்தருணம் ஆண்டவர் எல்லா வற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு ,முடிவான இன்ப அனுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகா வாக்கியத் திருமந்திரத்தை {த்தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகா வாக்கியத்தை }எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் ,எனது மெய்யறிவின் கண் அனுபவித்து எழுந்த, உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பத்தை,...நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் ....திரிபு ....மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ''ஆன்மநேய ஒரிமைப்பாட்டு உரிமையைப் பற்றிக் ''குறிப்பித்தேன் ....குறிப்பிக்கின்றேன் .....குறிப்பிப்பேன் .

நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில் ....நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே ,ஆண்டவர் முதற் சாதனமாக ...

''அருட்பெருஞ்சோதி .........அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை .......அருட்பெருஞ்ஜோதி ''

என்னும் திருமந்திரத்தை ,வெளிப்படையாக அறிவித்துள்ளார் .இந்த மாபெரும் உண்மை ''மகா மந்திரம் ''தெரியாமல் கண்ட ,கண்ட மந்திரங்களை மக்களுக்கு போதித்து உள்ளார்கள் .காரணம் அவர்களுக்கு உண்மை தெரியாது .  

அவர்களுக்கே உண்மை தெரியாமல்...உண்மைக் கடவுளைத் தேடிக் கொண்டும் ..அலைந்து கொண்டும் இருக்கும் போது ....நமக்கு எப்படி உண்மையை உணர்த்த முடியும் ...அதுமட்டும் இல்லை ...அவர்கள் மரணத்தை வெல்ல முடியாதவர்கள் ,..மரணத்தை வென்றவர்களால் தான் உண்மையை அறியமுடியும் --உணரமுடியும்,--.''உண்மையை அறிந்தால் தான் மரணத்தை வெல்ல முடியும்'',----இறைவனிடம் முழுமையான அருளைப் பெற்றவர்களால் தான்,--''கடவுள் நிலை அறிந்து அம்மயமாகத் தன்னை மாற்றிக் கொள்ள முடியும் ''.இவையே உலக மக்களுக்கு வள்ளலார் அறிவித்த,...அறிவுறித்திய ...உண்மை நெறியாகிய ''சுத்த சன்மார்க்க பொது நெறியாகும் .
 
உண்மை நெறியை விடுத்து... வேறு ஒன்றிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார் வள்ளலார்,--.ஏன் எனில் அந்த சமயங்களிலும் ,மதங்களிலும்,அற்ப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமே அல்லது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை என்னும் ஆன்மா அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுதற்கு முடியாது.ஏன் எனில் நமக்கு காலம் இல்லை .மேலும் இவைகளுக்கு எல்லாம் சாஷி நானே இருக்கின்றேன் .

எனக்கு அப்போது, அற்ப அறிவாக இருந்தது !

நான் முதலில் சைவ சமயத்தில் லஷியம் வைத்துக் கொண்டு இருந்தது.உண்மைதான் --- ,அவை இவ்வளவு ..அவ்வளவு.. என்று அளவு சொல்ல முடியாது .அது பட்டணத்து சுவாமிகளுக்கும் ,--வேலாயுதம் ---அவர்களுக்கும்,இன்னும் பலருக்கும் தெரியும்.அந்த லஷியம் எப்படிப் போய் விட்டது,? பார்த்தீர்களா !அப்படி லஷியம் வைத்ததற்கு சாஷி, வேறே எதுவும் வேண்டியது இல்லை,--

நான் பாடி இருக்கிற ...எழுதி வைத்திருக்கிற ...திருஅருட்பாவில் அடங்கி இருக்கின்ற, பக்திப் பாடலையும்...மற்றவர்கள் பாடிய பக்திப் பாடலையும் சபைக்குக் கொண்டு வந்தால் ....அவைகளே சாட்சி சொல்லிவிடும் !,மற்றவர்கள் பாடல்களை விட,...நான் பாடிய பாடல்கள் ...உயர்ந்த கருத்து ஆழம் உள்ள ...பக்திப் பாடல்களாகும் ...ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் ,அப்போது எனக்கு ...அவ்வளவு கொஞ்சம் ''அற்ப ''அறிவாக இருந்தது என்கிறார் வள்ளலார் ....

தான் எழுதிய பாடல்களில் குற்றம் உள்ளது என்றும் ,..''அற்ப அறிவுடன் எழுதியது என்றும்'' சொல்லும் உண்மையான அருளாளர் ,எந்த உலகத்திலும்  யாராவது உண்டா ? வள்ளலார் ஒருவர் தான்,...தான் எழுதிய பாடல்களில் குற்றம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டவராகும் ...தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டவராகும்.

நான் மாயையால் கலங்கி... பக்திப் பாடல்களை பாடிக் கொண்டு இருக்கும் போதும் ...உண்மையைத் தேடிக்கொண்டே இருந்தேன். ,உன்னுடைய சாயையாகத் தான் அனைத்தையும் பார்த்தேன்...மற்ற தெய்வங்களைப் பற்றிப் பாடிய போதும் உண்மை எங்கே இருக்கிறது என்பதைத் தேடிக் கொண்டே தான் இருந்தேன்.....பல வண்ணங்கள் பல வடிவங்களைப் பார்த்துப் பாடிய போதும் ,உன்னுடைய சாயையாகவே பார்த்தேனேத் தவிர ...வேறு உண்மை என்னவென்று அறியேன் .இறைவா !...இதுவரை பொருத்தது போதும், என்னுடைய மயக்கம் எல்லாம் போக்கி உண்மையைத் தெளிவிக்க வேண்டும் .
அண்ணல் நின் உண்மையான பாதம் அறிய {உருவம் }நான் அறியேன் .உண்மை என்பது ''ஒன்று ''என்றே எண்ணி எண்ணி அலைந்தேன் ..வேறு எண்ணியது இல்லை... ஆதலால் சத்தியம் வைத்து சொல்கிறேன் ,என்னுடைய மயக்கத்தை நீக்கி ,....அறிவை தெளிவித்து ....உண்மையை உணர்ந்த்த வேண்டும் .அதுவே உண்மையை உணர்த்தும் உன்னுடைய கடமையாகும்,...கருணையாகும் என வேண்டுகிறார் ....நமது வள்ளல் பெருமான் அவர்கள் .பதிவுய் செய்துள்ள பாடல் வருமாறு .

மாயையால் கலங்கி வருந்திய போதும்
வள்ளல் உன் தன்னையே மதித்துன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே யல்லால்
தலைவா வேறு எண்ணியது உண்டோ
தூய பொற் பாதம் அறிய நான் அறியேன்
துயர் இனிச்சிறிதும் இங்கு ஆற்றேன்
நாயகா எனது பயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவது உன் கடனே !

வண்ணம் வேறு எனினும் வடிவம் வேறு எனினும்
மன்னிய உண்மை ஒன்று என்றே
எண்ணியது அல்லால் சச்சி தானந்தத்
இறையும் வேறு எண்ணியது உண்டோ
அண்ணனின் பாதம் அறிய நானறியேன்
அஞரினிச் சிறிதும் இங்கு ஆற்றேன்
திண்ண மேல் நின்மேல் ஆணை என்னைத்
தெளிவித்துக் காப்பது உங்கடனே !

மேலும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு இருக்கும் போதும்... உண்மைத் தெரியாமல் ,அலைந்து கொண்டு இருப்பதையும் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார் .

ஏன் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்றால் ,..பக்தி மார்க்கத்தில் சென்றால் ...உண்மையானப் பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத்திற்கு மக்கள் செல்ல முடியாது ...அவை ..சரியை...கிரியை...யோகம்..ஞானம்,..என்னும் ஆரம்ப நிலையாகும்..அவற்றை கடைபிடித்து மேலே ஏறுவதற்கு ... காலம் போதாது என்பதால் ..குற்றத்தை ஒப்புக் கொண்டார் .

 ஆதலால் சுத்த சன்மார்க்கத்தின் முதல் படியானது .....எவை என்றால் ...சரியை....கிரியை ...யோகம்...ஞானம் ...என்னும் நான்கில் ,நான்காவது ஞானத்தில் ,சரியை...கிரியை...யோகம்...ஞானம் ,என்கின்ற நான்கில் ,நான்காவது படியாகிய...ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை என்னும்படி ...பதினைந்தாம் படியாகும் ....இதுவே சுத்த சன்மார்க்கத்தின் முதல்படியாகும் . ..இவையே ஞான மார்க்கமாகும் .என்பதை தெளிவாக விளக்குகிறார் .....வள்ளல் பெருமான் அவர்கள் ..

மேலும் அவர் சொல்லியது !

இப்போது ஆண்டவர் என்னை ''ஏறாத நிலைமேல்'' ஏற்றி இருக்கின்றார் இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது .ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர் களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ?பெற்றுக் கொள்ள வில்லை

நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலைக்கு, தூக்கி விட்டது என்றாலோ ,அந்த லட்சியம் என்னை தூக்கி விடவில்லை ,--பின் எவை என்னை தூக்கிவிட்டது என்றால் .

உண்மைப் பெருநெறி ஒழுக்கமும்...{சுத்த சன்மார்க்க ஒழுக்கம் }
உயிர்கள்மேல் நான் வைத்திருந்த ,அன்பும்..தயவும்..ஒருமையும் ...கருணையும் நிறைந்து வாழ்ந்ததால், ..கடவுளின் உண்மைத் தன்மையாகிய இயற்கை விளக்கம் என்னும் ''அருள் '' அதாவது கடவுள் தயவு , ...என்னுடைய ஆன்ம அறிவில் விளங்கியது ,.அதுபொழுது கடவுள் எல்லா உயிர்களிலும் உள்ளார் என்பதை உணர்ந்தேன் .

கடவுள் வேறு ...ஆன்மா வேறு ....உயிர்கள் வேறு ..அல்ல என்பதை அறிந்தேன் ... கடவுளும் ஒன்று தான்-- ,கடவுளால் உண்டாக்கப் பட்ட ..உயிர்களும் ஒன்றுதான்,என்ற ''ஒருமை'' என்னும் உண்மை அறிவு தெரிய வந்தது .அந்த உண்மை அறிவைக் கொண்டு உணர்ந்த போதே,...உயிர்களின் மேல் அன்பு ,தயவு,கருணை,அருள் மேலோங்கி விட்டது என்கிறார் வள்ளலார் .அதனால்தான் ஒருமை என்னும் ..''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை ''...என்னும் உண்மையை உணர்ந்தேன்.அதேபோல் மனிதனாக பிறந்த அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றார் .

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும் .....என்றும் .

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை யுளராகி உலகியல் நடத்தல் வேண்டும் ...என்றும்

இருளாமை யுறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம்
வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பம் அடைதல் வேண்டும் ....என்றார் .

கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சி பெருகி விட்டது,என்கிறார் வள்ளலார். ''கருணை வேறு ...கடவுள் வேறு '' இல்லை என்பதை சுத்த சன்மார்க்க நெறியின் வழியாக அறிந்து கொண்டேன் என்கிறார் .''அந்த தனிப்பெருங் கருணைத்தான் ''...என்னை ஏறா நிலைமிசை ஏற்றி விட்டது ,அவை யாதெனில் அன்பு, தயவு ,கருணை என்னும் வழியில் வாழ்ந்ததால் ..''கடவுளின் தனிப்பெருங் கருணையால்''... ''பூரண அருள் அமுதம்''...என்னுடைய ஆன்மாவில் பதிவானது .--இதற்கு அடிப்படைக் காரணம் ...தயவு என்னும் ''கருணை'' தான் என்னை தூக்கி விட்டது ,தயவு என்னும் கருணைதான் வள்ளலார் காட்டிய --உண்மைப் பொது நெறியான சுத்த சன்மார்க்கமாகும்.--இவைவே இறைவனைக் கண்டு,களித்து,கருணைக் கொண்டு அருளைப் பெரும் மார்க்கமாகும்.

கருணை எப்படி வரும் !

தயவு வந்தால் கருணை வரும்,...அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்....அந்த ஒருமை இருந்தால் தான் தயவு தானே வரும் ,...தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்...இப்போது என்னுடைய அறிவு அண்டம் ..அண்டகளுக்கும் ...அப்பாலும் கடந்து இருக்கிறது...அது ..அந்த ஒருமையினாலே தான் வந்தது....நீங்களும் என்னைப் போல் ஒருமை யுடன் இருங்கள் .

ஒருமையால் வள்ளலார் கண்ட காட்சி !

உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுவென அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன் திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லது ஒன்றென அறிந்தேன்
மயிரெலாம் புளகித் உளமெலாம் கனிந்து
மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்
பயிரெல்லாம் தழைக்கப் பதியெலாம் களிக்கப்
பாடுகின்றேன் பொதுப் பாட்டே .!

கடவுள் அருளைப் பெற்றதும் ...கடவுள் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவர் என்பதை அறிந்தேன் .கடவுள் என்பவர் ..சாதி..சமயம்..மதம் ..போன்ற குறுகிய வட்டத்துக்குள் இருப்பவர் அல்ல ...என்பதை அறிந்தேன் .தத்துவங்களை கடந்தவர் என்பதை அறிந்தேன்...எல்லா உயிர்களிலும் கடவுள்'' உள் ஒளியாக'' இயங்கிக் கொண்டுள்ளார் என்பதை அறிந்தேன் .உலகில் உள்ள அனைவரும் கடவுளை ..அறிந்து ,தெரிந்து கொள்ள வேண்டுமானால் ...அனைத்து உலக மக்களுக்கும் ..ஒரு பொது நெறியை ...உண்மைக் கடவுள நெறியை ...தோற்றுவிக்க வேண்டும் என்று ..கடவுள் ஆணைப்படி ..''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்ற சுத்த சன்மார்க்க பொது நெறியை தோற்றுவித்து ....அதன் வழியாக அனைத்துலக மக்களும் அறிந்து தெரிந்து கொள்ள பொதுவானப் பாடலை படைத்துள்ளேன் என்கிறார் ....நமது அருத்தந்தையார் அருட்பிரகாச வள்ளலார்....

ஒருமை என்பது ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்.எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு,--உடம்பு வேறு வேறாக இருந்தாலும் உடம்பை இயக்கம் ..உள் ஒளி ...என்னும் ''ஆன்மா ''ஒரே தன்மை உடையது ,அதில் பேதம் எதுவும் இல்லை ...ஆதலால் ''உயிர் உள் யாம் எம்முள் உயிர் ..இவை ,உணர்ந்தே ''உயிர் நலம் பரவுக'' என்று உரைத்த மெய் சிவமே!'''' ...எனவும்-- ''எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே !''...என்றும்-- ''யாரே என்னினும் இரங்கு கின்றாற்கு சீரே அளிக்கும் சிதம்பர சிவமே!'',....என்றும்-- ''உயிரெலாம் பொதுவில் உளம் பட நோக்குக செயிரெலாம் விடுக எனச் செப்பிய சிவமே !''..என்றும்-- ''கொல்லா நெறியே குருவருள் நெறி எனப் பலகால் எனக்குப் பகர்ந்த மெயச் சிவமே !'''... என்றும் .விளக்கம் அளித்துள்ளார் .

சிவன் என்பது வேறு ,சிவம் என்பது வேறு !

ஆன்ம அறிவால் அறிகின்ற ...போது ...ஒருமைத் தானே வரும் ....வள்ளலார் சிதம்பர சிவமே என்பது ....அருட்பெரும் ஜோதி ஆண்டவர் இருக்கும் திருசிற்றம்பலம் என்பதாகும் ....அதாவது ''...அருள் பெருவெளி ''என்பதாகும் ..அதே போல் சிவம் என்பது ..சைவ சமயத்தில் சொல்லும் சிவன் அல்ல ....சிவன் என்பது உருவத்தைக் குறிப்பதாகும் .....சிவம் என்பது ''அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்னும் ஒளியைக் குறிப்பதாகும் ''....அதாவது அண்டங்களை எல்லாம் இயக்கிக் கொண்டு உள்ள ..''அருட் பேரோளி ''என்னும் ஒளியைக் குறிப்பதாகும் .

கடவுள் வேறு ,..ஆன்மாக்கள் வேறு ,...உயிர்கள் வேறு,...என்பதை மறந்து அனைத்தும் ஒன்றுதான் என்பதை அறிவால் ...அறிகின்ற போது ..உண்டாகும் தெளிவு, ..ஒருமை என்பதாகும் .அந்த ஒருமை வருவதற்கு முதல் சாதனம் ''ஜீவ காருண்யம்,'' அதாவது உயிர் இரக்கம் என்னும் ''கருணை ''தான்,சுத்த சன்மார்கத்தின் முதல் படியாகும் .இதுவே கடவுள் வழிபாடாகும்.

அதனால்தான் ''ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்'' என்றார்.திறவு கோல் இல்லாமல் சென்றால் ..மோட்ச வீட்டின் கதவை திறக்க முடியாது...மறுபடியும் கீழே வந்து,..பிறந்து,பிறந்து,..இறந்து,இறந்து ---மறுபடியும் மனித பிறப்பு எடுத்து ,..நன் முயற்ச்சி செய்து -உயிர் இரக்கம் என்னும் ஜீவ காருண்யம் செய்து -,அத்திறவு கோலை சம்பாதிக்க வேண்டும் .அதனால்தான் ..அதற்கு காலம் இல்லை.. இப்பிறவியிலே விடாமுயற்சி செய்து ,ஜீவ காருண்யத்தைக் கடைபிடித்து ,..கருணையை வரவழைத்துக்  கொண்டு, ஒருமையை அறிந்து ,இறைவன் அருளைப் பெற்றுக் கொண்டு மோட்ச வீட்டின் திறவுகோலை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் .  

அருளைப் பெறுவதற்கு தடையாக இருப்பது எவை ?

உண்மை பொது நெறியான சுத்த சன்மார்க்கத்திற்கு செல்ல முக்கியத்   தடையாக இருப்பது , சமயங்கள் ,மதங்கள் ,மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் ,வருணம்,ஆசிரமம்,முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும்,தடையாக உள்ளன .அதை மனத்தில் பற்றாத வண்ணம் வாழ்க்கையில் கடைபிடித்து ஒழுக வேண்டும்.அவ்வாறு பழக்கத்தில் இருந்தோ மானால்,''கடவுள் கருணைத்''...தானாக நம்மைத் தேடிவரும் .

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைப்பிடிப்பதால் ,கடவுளின் இயற்கை விளக்கமான அருள் ஆற்றல் ,ஆன்மாவின் உள் ஒளியிலே பதிவாகும் .அந்த ஒருமை வருவதற்கு மேற்கூரியவை அனைத்தும் தடையாக உள்ளன ஆதலால் அவைகள் அனைத்திலும் எவ்விதப் பற்றும் வைக்காமல்,அவைகளை ஒழித்து, புதைத்துவிட வேண்டும் --இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விட வேண்டும் என்கிறார் .

அவைகளை எப்படி அழிக்க வேண்டும் என்று வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் வருமாறு !

இருளான மலமறுத்து இகபரங் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழி துறை தெரியாமல் மண் மூடிப் போகத்
தெருளான சுத்த சன்மார்க்கம் ஒன்றே
சிறந்து விளங்க வோர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடல் செய்தீரே
அருட்பெரும்ஜோதி என் ஆண்டவர் நீரே !

என்றும் --

இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப் புன்செயிலில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
வழக்கெல்லாம் குழிக் கொட்டி மண் மூடிப்போட்டுத்
தெருட் சாருஞ் சுத்த சன்மார்க்க நன்நீதி
சிறந்து விளங்க வோர் சிற்சபை காட்டும்
அருட்ஜோதி வீதியில் ஆடச் செய்தீரே
அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே!

மெய் அறிவை விளக்கும்--''உண்மைப் பொது நெறியான சுத்த சன்மார்க்கத்திற்கு''.. எவை எவை தடையாக இருக்கின்றனவோ அவைகளை எல்லாம் .,அதிக வெப்பத்தால்,காய்ந்து போன , ...வெடிப்பு உண்டான, ..புஞ்செய் நிலத்தை ஆழமானக் குழியைத் தோண்டி ,மீண்டும் வெளியே வராமல் புதைத்து,..மண்ணை போட்டு மறைத்து விடுங்கள் என்கிறார் .இதை விட இன்னும் வேறு என்ன சொல்ல வேண்டும் ,அந்த அளவிற்கு சாதிகள் ...சமயங்கள்.. மதங்கள் ...சாத்திரங்கள் ...ஆசாரங்கள் மக்களை அழித்துக் கொண்டு உள்ளது என்பதை, நாம் அனைவரும் அறிந்து,புரிந்து, தெரிந்து--எவற்றிலும் பற்று வைக்காமல், தூக்கி எரிந்து விட வேண்டும் ....மீண்டும் தொடர்பு கொள்ளாமல்,விட்டுவிட வேண்டும்.

மேலும் வள்ளலார் குறிப்பிட்டது... உண்மைப் பொது நெறியான சுத்த சன்மார்க்கத்தின் ''உண்மை கடவுள் ஒருவரே ''அவர் யார் ?-- ''கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர்! ''என்பதை உண்மை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்.அவரை எப்படி அறிந்து கொள்ள வேண்டும் .ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக உணர வேண்டும்... உணர்வது எப்படி என்பதை வள்ளலார் நமக்குத் தரும் பாடல் ;-

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கிகின்றேன்
பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருணம் இதுவே !

இதை எல்லாம் அறிய ,...அறிந்து கொள்ள விருப்பம் உள்ள நாம் ...மீண்டும் வேறு எதையாவது ,காணலாமா ?கேட்கலாமா ?படிக்கலாமா ? களிக்கலாமா? உண்ணலாமா ?உறங்கலாமா ?வீண் காலம் களிக்கலாமா ?என்பதை விளக்கும் ஒரு அற்புதமான பாடல் வருமாறு !

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே யுட்கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைப் பிடித்து மெய்ப் பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

நான் மற்றவர்கள் போல் பொய் சொல்லவில்லை ...உண்மையே சொல்கின்றேன் ..ஏன் என்றால் நீங்கள் அனைவரும் என்னுடைய சுற்றம் என்பதாலே உரைக்கின்றேன் ...என்னுடைய ஆன்மநேய உடன் பிறப்புக்கள் நீங்கள், ...நாம் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து வந்துள்ளோம் ,

அவரவர்கள் செய்கைக்குத் தகுந்தாற்போல், .மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்டது உடம்பு என்னும் வீடாகும் ......அனைத்து உயிர்களின் உடம்பும் ,அதனுள் உள்ள உறுப்புகளும் ...ஏழுவிதமான அணுக்களின் கூட்டுச் சேர்க்கையால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்புகளாகும் ..அணுக்களின் பேதத்தால் உருவங்கள் வேறுபடுகின்றன .....உருவங்கள் பேதப்பட்டாலும் உருவங்களை இயக்கும் உட்பொருள் {ஆன்ம ஒளி }ஒரே தன்மையுடையதாகும் உருவங்களின் பேதத்தால் ..உண்மை தெரியாமல் பிரிந்து பிரிந்து ,பிறந்து பிறந்து வாழ்கிறோம்.....ஆதலால் நாம் எங்கு இருந்து வந்தோம் என்ற ''விலாசத்தை தொலைத்து விட்டோம்.''

உண்மையான விலாசம் தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம் !

பல்லாண்டு காலமாக,..நமக்கு வழி காட்டிய அருளாளர்கள் --அவர்கள் காட்டிய ஆன்மீக மார்க்கங்கள்,..எதுவும்,.. நமக்கு ''கடவுளின் '' சரியான விலாசத்தை சொல்லவும் இல்லை! தரவும் இல்லை! .காட்டவும் இல்லை !--அவர்களும் செல்லவில்லை...நாமும் கேட்கவில்லை ..நாம் கேட்காவிட்டாலும் அவர்கள் சொல்லி இருக்க வேண்டும் ...ஏன் ?சொல்ல வில்லை ..அவர்களுக்கும் உண்மையான விலாசம் தெரியவில்லை ,அதனால் அவர்களால் சொல்லவும்  முடியவில்லை ...காட்டவும் முடியவில்லை,--இன்னும் விலாசத்தை தேடிக் கொண்டே இருக்கிறார்கள் .

தெரியவில்லை என்று சொல்லி இருக்கலாம் -பொய்யான விலாசத்தைக் கொடுத்து,மக்களை அலைய விட்டு விட்டார்கள் .அவை எவ்வளவு பெரிய குற்றம் ,..எவ்வளவு பெரிய துரோகம்,..பொய்பிடித்த அருளாலர்கள் பேச்சைக் கேட்டு, மக்கள் உண்மை வழி தெரியாமல் அலைந்து அலைந்து ..அழிந்து அழிந்து ..வீண் போய் கொண்டு இருக்கிறார்கள் .

என்பதை உணர்ந்த ''அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.''--உண்மையை உலகிற்கு உணர்த்தி ,..உண்மையை அறிவித்து ...உண்மையான விலாசத்தை கொடுத்தும் ,----காட்டியும் உள்ளார் ,--உண்மை விலாசத்தை அறிந்து ..தெரிந்து..வாழ்ந்து ,நமக்கெல்லாம் வழிக் காட்டி உள்ளார் நமது அருட்தந்தை வள்ளல்பெருமான் அவர்கள் .

மெய்ப் பொருளை ...கேட்டு,,,படித்து ..பார்த்து .. அறிந்து ...அன்பு செய்து ..அருளைப் பெற்றுக் கொண்டு.... அனைவரும் ,''பேரின்ப சித்திப் பெருவாழ்வு'' வாழும் பொருட்டு --''உண்மைப் பொது நெறியான சுத்த சன்மார்க்கத்தை'' தோற்றுவித்து,இயற்கை உண்மையை,--இயற்கை விளக்கத்தை,--இயற்கை இன்பத்தை--அறிந்து கொள்ள வேண்டும் என்பதால்--,உண்மை இறைவர் ''அருட்பெருஞ்ஜோதியால்'' வருவிக்க உற்றவர்தான்---திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .
    
அதனால்தான் உண்மை உரைக்கின்றேன் என்கிறார் வள்ளலார் !

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர்
உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர்
எண்மை யினால் என நினையீர் எல்லாஞ் செய் வல்லான்
என்னுள் அமர்ந்து இசைக் கின்றான் இதைக் கேண்மின் நீவிர்
தன்மை யொடு சுத்த சிவசன்மார்க்க நெறியிற்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ வளிக்கக்
கண்மை தரும் ஒரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் மிது தானே !

என்றும் அழியாத ''கருணை நிதி ''என்னும் ''பேர் அருளை ''வழங்குதற்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வருகை தர உள்ளார்...நீங்களும் பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை,அந்த அருள் நிதியை பெறுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் .உண்மை ஒழுக்கத்துடன், எவ்வித உலகப் பற்றும் இல்லாமல், அந்த உண்மைப் பொது நெறியான சுத்த சன்மார்க்கம் என்னும் கருணை நெறியை கடைபிடித்து தயார் நிலையில் இருப்போம். ஆண்டவர் வருவார் அருளைத் தருவார .பெற்று பேரின்ப பெருவாழ்வில் வாழ்வோம் .

சன்மார்க்கத்தின் வேறுபாடுகள் !

மற்ற மார்க்கத்திற்கும் --சுத்த சன்மார்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை வள்ளலார் விளக்கம் அளிக்கிறார் ,அதை கவனித்து பாருங்கள்.!

சமய சன்மார்க்கமும் ,--மத சன்மார்க்கமும் --ஆகிய இவைகளுக்கு உள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம்,அதில் சமய சன்மார்க்கம் 36,-அதை விரிக்க ஆறு கொடியாம்.இது போலவே மதத்தினும்-36,--

மேற்குறித்த சமய ,மதங்களிலும் ஏம சித்தி ,தேக சித்தி,முதலியவை உண்டு.அவை சமய மதங்களில் சொல்லுகிற ,கர்த்தர் மூர்த்திகள் ,ஈசுவரன்,பிரமம்,சிவம்,முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே யொழிய அதற்கு மேல் இருக்காது.

சமய மதங்களிலும் சமரசம் உண்டு.--அவை வேதாந்த சித்தாந்த சமரசம்,--யோகாந்த கலாந்த சமரசம்,--போதாந்த நாதாந்த சமரசம்,--இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம்,--இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம்,--இதற்கு அதீதம் சுத்த சமரசம்,--

ஆதலால் சுத்த சன்மார்க்கத்தில் ...சன்மார்க்கத்தைச் சேர்க்கச் ...சுத்த சன்மார்க்கமாம் ,...இவை பூர்வோத்திர ஞாயப்படி ,கடைத்தலைப் பூட்டாக ,சமரச சுத்த சன்மார்க்கம் என மறுவின --இதற்குச் சாதனம் ,ஒருவாறு ஷ்டாந்த சமரசம்.,ஆதலால் வள்ளலார் முதலில்,சமரச வேத சன்மார்க்கம்  என்று பெயர் வைத்தார் ,--பின் ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம் சத்திய சங்கம் என்று பெயர் வைத்தார் ,'''அடுத்து வேதம் என்ற வார்த்தையும்,ஷடாந்த என்ற வார்த்தையும்,எடுத்துவிட்டு ,

''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்று பெயர் வைத்துள்ளார் !

வள்ளலார் ஏன் அப்படி பெயர் மாற்றினார் என்பதைப் பார்ப்போம்.
ஆன்மாவுக்கு அனன்னிய அருள் எப்படியோ ,அதைப்போல் சுத்த சன்மார்க்கத்துக்கு அனன்னியமாக இருப்பது சர்வ சித்தியாம்.--சுத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று ,--ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று,--சமரச சன்மார்க்கம் ஒன்று --சுத்த சன்மார்க்கம் ஒன்று --ஆக மூன்று ;--

ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் மூன்று --சிற்சபை ஒன்று --பொற்சபை ஒன்று,--சுத்த ஞான சபை ஒன்று ,ஆக மூன்று --இவைகள் மூன்றும்தான் படிகளாக இருக்கும் .சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலத்தில் எல்லாம்,ஆண்டவர் வெளிப்படையாகத் தெரிவிப்பார் .

சமய மத,சன்மார்க்கிகளில் தாயுமானவர் சுவாமிகளும் ,இன்னும் அநேக பெரியோர்களும்,சுத்த பரப் பிரம்மத்தினிடத்தில்,இன்டறக் கலந்து விட்டதாக முறையிடுவது உண்மையா ?பொய்யா ?என்றால் பொய்யாகும் என்கிறார் வள்ளலார் .சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும்.:என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும்.

மற்றச் சமய மதம் மார்க்கங்கள் எல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப் படிகள் ஆதலால் அவற்றில் ஐக்கியம் என்பதே இல்லை....தாயுமானவர் முலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர் !--மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம் ....சமய மத மார்க்கத்தில் நித்திய தேகம் கிடையாது....இது சாதக மார்க்கமே ! ...அன்றிச் சாத்தியம் இல்லை !

நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும் போது இவர்கள் யாவரும் உயிர் பெற்று மீள வருவார்கள்.....முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேட ஞானத்தோடு..... சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்களாய் வருவார்கள்.--சத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள் என்று வள்ளலார் தெரிவித்து உள்ளார் .
இதில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்ன ? எல்லா மார்க்கங்களிலும் உயர்ந்த மார்க்கம்,-- சுத்த சன்மார்க்கம் என்னும் உண்மைப் பொது  நெறியாகும்.ஆதலால் தான் சாகாதவனே சன்மார்க்கி என்றார் வள்ளலார் .--சாகாதக் கல்வியைக் கற்றுத் தருவது ,சுத்த சன்மார்க்கமாகும் .

சுத்த சன்மார்க்க கொள்கையைக் கடைபிடிப்பவர்கள்,- பெருங் குணத்தவர்கள்----,மரணத்தை வெல்லும் சக்தி வாய்ந்தவர்கள் --,அவர்களுக்கு வள்ளலார் சொல்லும் புத்திமதிகள் அடங்கிய பாடலைப் பார்ப்போம்!

மற்று அறிவோம் எனச் சிறிது தாழ்ந்து இருப்பீர் ஆனால்
மரணம் என்னும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை உம்மாலே தடுக்க முடியாதே
சமரச சன்மார்க்க சங்கத்தவர் அல்லால் அதனை
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர்
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள்
அம்பல பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே !

என்று சத்தியம் வைத்து மக்களை அழைக்கிறார் !இப்படி ஒரு கருணை உள்ளம்  கொண்ட... அருளாலரை நமக்கு அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அறிமுகப் படுத்தி உள்ளார், தாயாகவும் தந்தையாகவும் குருவாகவும் கடவுளாகவும் --இருந்து நம்மைக் காப்பாற்ற --நம் ஆன்மாவில் என்றும் நீங்காது செயல் பட்டுக் கொண்டு உள்ளார் --நம்முடைய அருள் தந்தை அருட்பிரகாச வள்ளலார் !--அவர் தோற்றுவித்தது தான்..''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்னும் உலகப் பொது உண்மை மார்க்கமாகும் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் .

உண்மைப் பத்திரிகை .!வள்ளலார் பதிவு செய்துள்ளது !

இனிவரும் காலங்களில்{ "சுத்த சிவசன்மார்க்கம் }...''சமரச சுத்த சன்மார்க்க சந்திய சங்கம் ''என்னும் ''பொது நெறி ஒன்றே ''இனி எக்காலத்தும் விளங்கும் .இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை .தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலம் தொட்டு ,அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும் .அதன் மேன் மேலும் வழங்கும் .

பல வகைப்பட்ட சமய பேதங்களும் ,....சாத்திர பேதங்களும் ,...சாதி பேதங்களும் .....ஆசார பேதங்களும் ...போய் .. சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் ஒன்றே விளங்கும் ..இது கடவுள் சம்மதம் என்கிறார் .

ஏன் பழைய மார்க்கங்கள் எல்லாம் ஒழிய வேண்டும் !

சித்தர்களில் மூன்று வகை உண்டு ! கர்மசித்தர் ..யோக சித்தர் ..ஞான சித்தர்...என்பதாகும்

இதுவரையில் கர்ம சித்தருடைய காலம் ...அதனால் சமயங்களும் ,..மதங்களும்..பரவி இருந்தன.இப்போது வரப்போகிறது {நடந்து கொண்டு இருப்பது }..ஞான சித்தருடைய காலம் ,..இனிமேல் சாதி ...சமயம்..மதம் முதலான ஆசாரங்கள் எல்லாம் போய் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ''ஒன்றே விளங்கும் .சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தர்கள் ....மூர்த்திகள்...ஈசுரன் ...பிரமம்...சிவம் ..முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே யொழிய அதற்கு மேலிராது .

சமய ,மதங்களில் சொல்லுகிற கர்த்தர்கள் உடைய சித்திகள் ..சர்வ சித்திகளுடைய கடவுளின் சித்தியின் லேசங்கள் .{மிகவும் சிறியது }...அந்த சர்வ சித்தியுடைய ..''கடவுளுக்கு ஒப்பாகார்கள் ''...கோடி ..கோடி..பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள் ...இப்போது இருக்கும் வேதாகம ,புராணங்களிலும் ..சமய மதங்களிலும் ...லட்சியம் வைக்காதீர்கள் .

அப்படியும் வைத்தால் ... சமரச சுத்த சன்மார்க்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது ..வராவிட்டால் நீங்கள் அடையப் போகிறது ஒன்றும் இல்லை ...ஆதலால் அவைகளை எல்லாம் பற்றற விட்டு ..சரவ சித்தியுடைய ''கடவுள் ஒருவர் உண்டு என்றும் ''...''அவர் ஒருவரே ''...என்றும் ,அவரை உண்மை அன்பால வழிபாடு செய்ய வேண்டும் .

அப்படிப்பட்ட ..சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு உரிய கடவுளை வழிபாடு செய்வதற்குச் சாதனம் இருவகைப்படும் ;---ஒன்று ...பர உபகாரம் ...இரண்டாவது ...சத்விசாரம் என்பதாகும் .பர உபகாரம் என்பது ;--தேகத்தாலும் ...வாக்காலும் ...திரவியத்தாலும்...உபகாரஞ் செய்வது .

சத்விசாரம் என்பது ;---நேரிட்ட பட்சத்தில் ....ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடு இருப்பது....அதாவது ,கடவுளது புகழை விசாரித்தல் ....ஆன்மாவின் உண்மையை விசாரித்தல் ....தன சிறுமையைக் கடவுளிடத்தில் .விண்ணப்பித்தல் ,இந்த மார்க்கத்தால்தான் சுத்த தேகம் .என்னும் பேரின்ப பெருவாழ்வு பெற முடியும் .

ஞான தேகம் பெற்றவர்தான் ஞான சித்தர் என்பவராகும் .கர்ம சித்தர் காலம் முடிந்து ஞான சித்தர் காலம் நடந்து கொண்டு இருக்கிறது.'''ஞான சித்தர் என்பவர் நமது திருஅருட் பிரகாச வள்ளலார்''என்பவராகும் .

30...1...1874,..ஆம் ஆண்டு தை மாதம் ...19,.ஆம் தேதி வெள்ளிக் கிழமையில் இருந்து ஞான சித்தர் காலம் ,செயல் பட்டுக் கொண்டு வருகிறது ...என்பதை உலகில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்....என்பதை கீழ் வரும் பாடலில் பதிவு செய்துள்ளார் .

கருநாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும்
கலக்கமுறேல் இது தொடங்கிக் கருணை நடப் பெருமான்
தருநாள் இவ்வுலகம் எலாம் களிப்படைய நமது
சார்பின் அருட்பெருஞ்ஜோதி தழைத்து மிக விளங்கும்
திருநாள் களாம் இதற்கோர் ஐயமில்லை இதுதான்
திண்ணம் இதை உலகறியத் தெரித்திடுக மனனே
வருநாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல்
வருநாளில் இன்ப மயமாகி நிறைவையே !

என ....உலக மக்கள் அறியும் பொருட்டு ,...வள்ளல் பெருமான் மிகவும் தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார் .மனிதன் மனிதனாக வாழ்ந்து ..மனிதன் தெய்வ நிலைக்குச்சென்று ....பேரின்ப பெருவாழ்வு வாழ்வதற்கு ....இதுவே நல்ல தருணமாகும் .அதற்கு உண்மைப் பொது நெறி... சுத்த சன்மார்க்கம் ஒன்றே என்பதை அறிந்து ,தெரிந்து அதன்படி வாழ்ந்து ,,,மற்றவர்களுக்கும் வழிகாட்டுவோம் .

சுத்த சன்மார்க்கம் ஒன்றே உண்மைப் பொது மார்க்கம்!--சுத்த சன்மார்க்கம் ஒன்றே சாகாதக் கல்வியைத் கற்றுத் தரும் மார்க்கம்!--சுத்த சன்மார்க்கம் ஒன்றே இறைவனால் உண்டாக்கப் பட்ட மார்க்கம்! சுத்த சன்மார்ககத்துக்கு தலைவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒருவரே ! செயல்படுத்துபவர் திருஅருட் பிரகாச வள்ளலார் ....அதனாலதான் நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்றார் .

உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாகி
இலகவருள் செய்தான் இசைந்து ....திலகனென
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து.

இவை உண்மை இது சத்தியம் ,!

மேலும் தொடரும் ;--

அன்புடன் ஆன்மநேயன்;--கதிர்வேலு .        
   

     

1 கருத்துகள்:

12 டிசம்பர், 2012 அன்று AM 8:50 க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

ஆன்மநேய அன்புடையீர் வந்தனம் ,உங்களின் அன்பான பதிலுக்கு மிக்க மகிழ்ச்சி .உங்களை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்றும் துணையாக இருந்து காப்பாற்றுவார் .

நன்றி வந்தனம் ;--கதிர்வேலு.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு