செவ்வாய், 8 நவம்பர், 2011

ஆன்மாக்கள் மூன்று வகைப்படும் !

ஆன்மாக்கள் மூன்று வகைப்படும் !

இந்த உலகம் அணுக்களால சூழப்பட்டது அந்த அணுக்கள் ஏழு வகைப்படும் அந்த அணுக்கள் ;-- வாலணு,திரவஅணு,குருஅணு,லகுஅணு ,அணு ,பரமஅணு,,விபுஅணு, , என்பவையாகும் ,இந்த அணுக்களுடன் அறுபத்து நான்கு கோடி அணுக்கள் துணை அணுக்களாக உள்ளன இந்த அணுக்கள் எவ்வாறு சேருகின்றதோ அதுவே ஒவ்வொரு தோற்றத்திற்கும் காரண காரியமாகும் .இதில் உயிர் உள்ளது உயிர் இல்லாதது என இரண்டு வகையாக உள்ளன உயிர் உள்ளது இயங்கும் தன்மை வளரும் தன்மை உள்ளது .உயிர் இல்லாதது அசைவு இல்லாதது ,சடப்பொருள்கள் என்பதாகும் .

ஆன்மா ,உயிர் !

ஆன்மா என்பது மூன்று வகைப்படும் .அவை பக்குவ ஆன்மா ,அபக்குவ ஆன்மா ,பக்குவா பக்குவ ஆன்மா என்பவையாகும் அவை எங்கு இருந்து யாரால் அனுப்பப் படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆன்மா என்பது பல அண்டங்களுக்கும் வெளியே பஞ்ச பூதங்கள் இல்லாத அருள் வெளி என்னும் இடத்தில் இருந்து அருட்பெரும் ஜோதி என்னும் அருள் ஒளியால் ஒவ்வொரு அண்டங்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றன,அதனால் தான் அதை ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி என்பதாகும் அதை கண்டவர் வள்ளலார் ஒருவர்தான் என்பது உலகம் கண்ட உண்மையாகும் அந்த அருட்பெரும் ஜோதிதான் கடவுள் என்பதும் ஆண்டவர் என்பதும் இறைவன் என்பதுமாகும் ..அதைக் கண்டவர்களுக்கு மரணம் என்பதும் பிறப்பு இறப்பு என்பதும் எக்காலத்திலும் இல்லை என்பதாகும் அவர்களுக்கு ஒளி தேகம் பெற்றவர்கள் என்பதும் சுத்த பிரணவ ஞான தேகம் பெற்றவர்கள் என்பதாகும் .அதற்கு பேரின்ப சித்திப் பேரு வாழ்வு என்பதாகும் .

சரி அந்த மூன்று வகையான ஆன்மாக்களை பற்றி பார்ப்போம் .
இந்த உலகத்திற்கு அந்த ஆன்மாக்கள் வந்ததும்அந்த ஆன்மாக்களுக்கு மேலே சொல்லப்பட்ட அணுக்கள் ஆன்மாக்களின் தகுதிக்கு தகுந்தாற் போல் உருவம் என்ற வீடு கட்டிக் கொடுக்கப் படுகிறது வீடு கட்டிய உடன் ,ஆன்மாவில் இருந்து உயிர்,ஜீவன் என்னும் சக்தி வெளியே வந்து .அதன் அதன் தன்மைக்கு தகுந்தாற் போல் இந்த உலகத்தில் வாழ்கிறது ,வாழ்க்கையில் எந்த எந்த அணுக்களை உண்கிறதோ அனுபவிக்கின்றதோ அதற்கு வினை என்று பெயர் ,கன்மம் என்றும் கர்மா என்றும் பெயர் வைத்துள்ளார்கள் .நல்ல அணுக்களை அனுபவிக்கும் போது நல் வினை என்றும் கெட்ட அணுக்களை அனுபவிக்கும் போது தீவினை என்றும் சொல்லப் படுகிறது

அணுக்களின் சேர்க்கையால் உண்டான உடம்பு அணுக்களின் சேர்க்கையால் முதிர்ந்து பின் தாங்க முடியாமல் இனி இந்த உடம்பில் வாழ முடியாது என்று உயிர் ஆன்மாவில் அடக்கம் கொள்கிறது உயிர் அடக்கம் கொள்ளும் போது உடம்பு என்னும் அணுக்கள் வேலை செய்யாது அதனால் உயிர் போய் விட்டது என்கிறோம் .ஆனால் உயிர் போக வில்லை உயிர் ஆன்மாவில் அடக்கம் கொள்கிறது ஆன்மாவும் அழிவதில்லை உயிரும் அழிவதில்ல

ஆன்மா, உடம்பு என்னும் அணுக்களின் வீழ்ச்சியால் அதில் இருந்து வெளியே சென்று வேறு ஒரு புதிய வீடு அதன் தகுதிக்கு தகுந்தாற் போல் மீண்டும் அணுக்களைக் சேர்த்துக் கட்டிக் கொண்டு வாழ்கிறது இவை எல்லா ஜீவ ராசிகளுக்கும் பொருந்துவதாகும் ஆதலால் பக்குவமுள்ள ஆன்மா என்பது மனித உடம்பின் சேர்க்கையாகும்.பக்குவா பக்குவம் உள்ள ஆன்மா என்பது ஊர்வன ,பறப்பன ,நடப்பன போன்ற ஜீவராசிகளாகும்,அபக்குவ ஆன்மா என்பது மரம்,செடி, கொடிபோன்ற தாவரங்கள் என்பவைகளாகும்..

அதனால் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றும் .பிற்ப்புகளிலே மனிதப் பிறப்பு உயர்ந்த பிறப்பு என்றும் .இந்த பிறப்பு போனால் அடுத்து எந்த பிறப்போ என்றும் சொல்லுவார்கள் .ஆனால் மனித பிறப்பு ஒன்றுதான் உயர்ந்த அறிவு உள்ள பிறப்பாகும் இந்த உலகத்தில் வாழாமல் வந்த இடத்திற்கே செல்ல வேண்டுமானால் உந்த உலகத்தில் உள்ள எந்த அணுக்களையும் உண்ணாமலும் அனுபவிக்காமலும் உண்மையைத் தேடி வாழ்ந்தால் ஆன்மாவில் உள்ள அருள் என்னும் அருள் ரசம் சுரக்கும் அந்த அருளை யார் சுவைக்கிறார்களோ!அனுபவிக்கிறார்களோ அவர்களுக்கு மறுபடியும் பிறப்பு இறப்பு என்னும் தொடர்ச்சி இல்லாமல் துண்டிக்கப் படும்.அவர்களே இறைவனை அடைந்தவர்கள் என்பதாகும் .அவர்களே பக்குவமுள்ள ஆன்மாக்களாகும்.இதை விரிக்கில் இன்னும் பெருகும் .அனுபவத்தால் அறிக .

வள்ளலார் பாடல் ஒன்று !
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட கொண்டது எல்லாம் குறையே
உலகில்யலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடை பிடித்து மெய்ப்  பொருள் நன்கு உணர்ந்து
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

மேலும் தொடரும் .
அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு .
         

   

3 கருத்துகள்:

17 பிப்ரவரி, 2014 அன்று 10:07 AM க்கு, Blogger Saravanakumar.M கூறியது…

Arumai Iyya.

 
17 பிப்ரவரி, 2014 அன்று 10:11 AM க்கு, Blogger Saravanakumar.M கூறியது…

Entraya kalathil ethai adaivathu aeppadi?Valimuraikalaum koorinal miga sirappaga erukkume?

 
15 ஏப்ரல், 2014 அன்று 10:03 AM க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

நன்றி வாழ்த்துக்கள்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு