சனி, 15 அக்டோபர், 2011

ஏமாற்று பேர் வழிகள் !


ஏமாற்று பேர் வழிகள் !

வள்ளலார் வழியைப் பின் பற்றி வந்தவர்கள் எல்லாம் பகுத்தறிவு வாதிகள் என்பது உண்மையாகும் .

நம் தமிழ் நாட்டில் ,பாரதியார் ,பாரதிதாசன் ,போன்றவர்களும் பெரியாரின் பகுத்தறிவும் அண்ணாவின் உலக அறிவும் இரண்டையும் சேர்ந்த பொது அறிவுக்கு இரைபோடும் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களும் மற்றும் உள்ள பகுத்தறிவு சிந்தனையாளர்களும் வள்ளலார் காட்டிய பாதை என்பதை மறைத்து அவர்கள் சொல்லியது போல மக்களிடம் போதித்து உள்ளார்கள் என்பது யாரும் மறுக்க முடியாது மறைக்கவும் முடியாது .

எது எப்படியார் சொல்லி இருந்தாலும் மக்களுக்கு அறிவு தெளிவு ஏற்பட்டால் போதுமானதாகும் .

இந்த உலகம் அறியாமையில் சாதி ,சமயம் மதம் என்ற பொய்யான கற்பனைக் கதைகளை உண்மை என்று நம்பி வாழ்ந்து அழிந்துக் கொண்டு இருந்த மனித சமுதாயத்தை திருத்துவதற்கு வந்தவர்தான் வள்ளலார் என்பவராகும் .ஆன்மீகம் என்ற பகுத்தறிவுக கொள்கையின் மூலம் மக்களை திருத்த வேண்டும் என்பதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கை களாகும், அவரை இறைவனே அனுப்பி வைத்தார் என்பது அவர் எழுதிய அருட்பாவில் பதிவு செய்துள்ளார்.அதில் சந்தேகம் எதுவும் இல்லை .

வள்ளலார் கொள்கைகளை பின் பற்றும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்த சன்மார்க்கர்கள் கண்ட உண்மையாகும்

ஆனால் இன்று சமுதாயத்தில் என்ன நடந்து கொண்டு உள்ளது .

ஆன்மிகம் என்ற பெயரில் கடவுள் பெயரை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் காவி உடை சாமியார்களும், துறவி, சந்நியாசி என்ற ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும் மற்றும் வேறு பல வழிகளில் போலி சாமியார்களும், புற்று ஈசல் போல் நாட்டில் பரவிக் கொண்டு வருகிறார்கள். மக்களும் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து வீண் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு அடிப்படைக காரணம் பேராசையே. ஆசையே அழிவிற்கு காரணம் என்ற உண்மையை உணராத மக்கள் பொய்யை உண்மை என்று நம்பி ஏமாந்து அழிந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

ஏமாற்றுக்காரர்கள் முதலில் - அரசியல் வாதிகளையும், உயர் அதிகாரிகளையும், பெரும் பணக்காரர்களையும் அழைத்து அவர்கள் தலைமையில், யோகம், தவம், தியானம், மந்திரம் தந்திரம் அபிஷேகம், ஆராதனை, வழிபாடு போன்றவற்றை நடத்தி நம்பவைத்து ஏமாற்று வேலையை ஆரம்பிக்கிறார்கள்.

அதைப் பார்த்த மற்ற சமூகத்தில் உள்ள பெரியவர்களும், திரைத்துறையை சார்ந்த பிரபல நடிகர்களும் நடிகைளும் மற்றும் மக்கள் மத்தியில் அறிமுகமான தொழில் அதிபர்களும் மற்றும் பலரும் போக ஆரம்பித்,து விடுகிறார்கள்.

பெரிய, பெரிய ஆட்களே நம்பித் தானே போகிறார்கள் நாமும் போகலாம் என்ற ஆசைகள் மக்கள் மன்தில் தோன்றிவிடுகிறது. அதன் அடிப்படையில் நடுத்தர மக்கள் ஏமாந்து வீண் போக ஆரம்பித்து விடுகிறார்கள். கூட்டம் சேர்ந்து விடுகிறது. ஏமாற்றுக்காரர்களுக்கு வேட்டையாட வசதியாகி விடுகிறது. பணம் பறிக்கும் வேலையை மிக சுலபமாக ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கவலையே இல்லாமல் போய் விடுகிறது.

சில பல போலி சாமியாகள் மாட்டிக்கொண்டாலும் மக்கள் திருந்துவதாக இல்லை. திருந்தவே மாட்டார்கள். சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருந்தாலும் திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதற்க்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் வாதியல்களும் அரசியல் தலைவர்களும் பெரும் பணக்காரர்களும், அரை குறை ஆன்மிக வாதிகளும் உடந்தையாக இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

மாயைக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் என்ன என்பதே தெரியாத ஆன்மிக வாதிகள் எல்லா மதத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

இவ்வுலகை கடவுள் படைத்தாலும் கடவுளை இவர்களால் படைக்க முடியுமா? மனிதர்களால் கடவுளை படைக்க முடியாது என்பது உண்மை.

கடவுள் இவ்வுலகை படைத்தாலும் கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகம் கிடையாது. பஞ்சம் பூதங்களான மாயையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதை தெரியாத ஆன்மிக வாதிகளும் மக்களும் மாயா உருவங்களை கடவுள் என்றும் தத்துவங்களை கடவுள் என்றும் மனிதர்களை கடவுள் என்றும் நம்பி வீண் போய் கொண்டு இருக்கிறார்கள்.

இதனுடைய உண்மை இரகசியங்களை வள்ளலார் திரு அருட்பா நூலில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் வள்ளலாரைத் தவிர வேறு எந்த ஞானிகளுக்கும் தெரியாது என்றே சொல்ல முடியும்.

அதனால் தான் கோயில் ஆலயம், சர்ச் மசூதி, பிரமீடு போன்ற சமய மதங்களில் உள்ளது போல் அமைக்காமல் ஜாதி மதம் சமயம் ஆசாரங்கள் அற்ற எல்லோருக்கும் பொதுவாகிய உருவ வழிபாடு அற்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வடலூரில் 1872 -ஆம் ஆண்டு தோற்றி வைத்துள்ளார். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார். அதற்காக வடலூரில் சத்திய தருமச் சாலையை 1867 -ல் துவங்கிவைத்துள்ளார். இன்று வரை ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய அன்னதானம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞான சபையில் வள்ளலார் கூறிய படி வழிபாட்டு முறையை செயல் படுத்தாமல் சமய மத வாதிகள் உள்ளே பகுந்து கொண்டு வள்ளலார் கருத்துக்களுக்கு மாறாக செயல் பட்டு வந்தார்கள்.

எங்களைப் போன்றவர்களின் எதிர்ப்புகளால் பல ஆண்டுகளாக போராடி பல ஆட்சியாளர்கள் செய்ய முடியாத காரியத்தை நீதி மன்றத்தின் வழியாக முன்னாள் தமிழக திராவிட முன்னேற்றக் கழக அரசு தீர்த்து வைத்தது அதற்க்காக வள்ளலார் வழியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமர சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் அன்பர்களின் சார்பில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.

 கடவுள் உருவமற்றவர் கல்லிலும் செம்பிலும் தங்கத்திலும் மரத்திலும் மண்ணிலும் கடவுள் இல்லை கடவுள் ஒளி மயமானவர். அவர் எல்லா உடம்பிலும் உயிர் ஒளி யாக இயங்கிக்கொண்டு இருக்கிறார். அதைத்தான் ஆன்மா என்கிறார்கள். உள்ளமே பெருங் கோயில் ஊன் உடம்பே ஆலயம். ஆலயமான உடம்பில் வாழும் உயிர்களுக்கு தொண்டு செய்யுங்கள் கருணை புரியுங்கள் அதுவே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார்.

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்துதல் வேண்டும் என்றார். வள்ளலார்,வள்ளலார் கூறும் கடவுள் வழிபாடு ஜீவகாருண்யம். பசித்த ஏழைகளுக்கு உணவளிப்பதும் பிணி தாகம் இச்சை எளிமை பயம் நேரிடும் போது அவற்றை நிவர்த்தி செய்வதும் இறைவழிபாடு என்றார்.

இப்பொழுது பசி என்ற அரக்கன் ஓர் அளவு குறைந்து உள்ளது ஏழைகளின் பசியை போக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பட்டினி இல்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பசி பிணி இரண்டும் மனிதனை கொள்ளும் விஷமாகும் இவை இரண்டையும் முக்கியமாக கவனிக்க வேண்டியது அரசின் கடமையாகும் .பொது நல அமைப்புகளின் கடமையாகும் .சன்மார்க்கர்களின் கடைமையாகும் .

மக்கள் தொண்டே மகேசன் தொண்டாகும்.

மக்கள் தொண்டு என்ற பெயரில் போலி சாமியார்களும் போலி மடாதிபதிகளும் போலி ஆசிரமங்களும் போலி குடில்கள், போலியான யோகம ,தவம தியானம்,காயகல்பம்,குண்டலினிசக்தி,பேராற்றல் ,ஈஷா யோகம மனோ சக்தி, என்பனவற்றை வைத்துக் கொண்டு ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை நம்ப வைத்து,கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள்,

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தயவு தாட்சண்யம் இன்றி, போலிகளை கைது செய்து சட்டப்படி சிறையில் அடைக்க வேண்டும்.

நம் நாட்டிலே முறையான ஆன்மிகமும் இல்லை முறையான வழிகாட்டுதலும் இல்லை. ஆன்மிகத்தை பற்றி போதிப்பதற்கு ஆன்மிகவாதிகளின் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்ற கட்டும் பாடும் இல்லை.

அரை குறை எல்லாம் ஆன்மிகம் பேசுகிறது. அரை குறை எல்லாம் ஆன்மிக ஆன்மிக நூல்கள் எழுதுகிறது. அரை குறை எல்லாம் அதற்க்கு ஆதரவு தருகிறது. ஏதும் தெரியாத அப்பாவி மக்கள் பார்த்தும் கேட்டும் படித்தும் வீண் போய் கொண்டு இருக்கிறார்கள்.

இந்து மதம் மட்டும் அல்ல எல்லா மதங்களிலும் உலக மக்களின் அறியாமையை பயன் படுத்தி குழப்பி கொண்டு தான் இருக்கிறார்கள்.

கண்களுக்கு தெரியாத கடவுளை பற்றி யார் யார் எதை வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் வணங்கலாம் வழிபடலாம் கடவுள் பெயரால் கொலையும் செய்யலாம். என்ற மூட நம்பிக்கைகள் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பரவிக் கிடக்கிறது. ஆதலால் தான் போலி சாமியார்கள் போலி வேடம் போட்டு மக்களை ஏமாற்றி கொண்டு  இருக்கிறார்கள்.

கடவுள் கொள்கையால் தான் இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம், மத வாதம் மிதவாதம், பயங்கரவாதம், நக்சல் பார்ட்டிகள், எல்லைத் தகராறுகள்,  அணு ஆயுதப் போர்கள், குண்டு வெடிப்பு போன்ற போர்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

எல்லோரும் ஓர் குலம் எல்லோருக்கும் ஓரே இறைவன் என்பதை அறியாத சமய,மத வாதிகளால்தான் குழப்பமும் போராட்டமும் போர்களும் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம் கடவுள் ஒருவரே! என்பதை அறியாத ஆன்மிக வாதிகளின் செயல்களாகும்.

ஆன்மீகத்தில் பகுத்தறிவு கொள்கைகளை விதைத்த வள்ளலார் அவர்கள் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அமைப்பின் வழியாகவும் அவைகளை பின்பற்றி வாழ்ந்த பாரதியார்,பாரதிதாசன் மற்றும் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் கொள்கைகளையும் பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலையும் பின் பற்றி வாழ்வாங்கு வாழ்வோம் .

நம்முடைய மத்தியஅரசும் தமிழக அரசும் மூட நம்பிக்கைக்கு முடிவு கட்டுமா? எப்படியோ போகட்டும் என்று விட்டு விடுமா? பொறுத்து இருந்து பார்ப்போம் .


அரசும் அதிகாரிகளும் என்ன செய்ய போகிறார்கள், சட்டமும் நீதி மன்றமும் என்ன தீர்ப்பு வழங்க போகிறது என்பதை மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.


.இதை ஏன் எழுதுகிறேன் என்றால் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை பெரியார் அண்ணா மற்றுமுள்ள அனைவரும் நன்கு படித்தவர்கள்.உலக பொது மறையான திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டியவர். வள்ளலார் மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர், வாழ்ந்து ஒளி தேகம் அடைந்தவர். மூட நம்பிக்கைகளையும் கலை உரைத்த கற்பனை களையும் குழி தோண்டி புதைத்தவர். ஜாதி மத சமய இன வேறுபாட்டை எல்லாம் பற்றற விட்டால் தான் மனிதனாக வாழ முடியும் என்றார் வள்ளலார்.

பெரியாருக்கும் அண்ணாவிற்கும் முன்னாடியே பகுத்தறிவு கொள்கைகளை நம் தமிழ் நாட்டில் விதைத்தவர். அவரை இன்னும் நம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வில்லை. அவரை சமய வாதியாகவே சமய வாதிகள் போற்றி வருகிறார்கள். ஆதலால் அவருடைய முற்போக்கான பகுத்தறிவு கொள்கைகள் மக்கள் மத்தியில் முடங்கி கிடக்கிறது. அவர்களிடம் இருந்து வள்ளலாரையும் அவர் எழுதிய திரு அருட்பாவையும் காப்ற்ற வேண்டியது நமது சுத்த சன்மார்க்கிகளின் கடமையும் தமிழக அரசின் கடமை யாகும்.

திரு அருட்பா முழுவதும் அறிவியல், வேதியல், விஞ்ஞானம், மெய்ப்பொருள் அடங்கியதாகும். உலக ஆராய்ச்சிக்கு பயன்படக் கூடியதாகும்.

வள்ளலார் தமிழில் தமிழ் நாட்டில் பிறந்ததற்காக இறைவனுக்கு பாராட்டுதலும் நன்றியும் பெருமையும் அடைவதாக தன் அருட்பாவில் குறிப்பிடுகிறார்.தமிழ் இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட மொழி என்று உறுதிப்பட பதிவு செய்துள்ளார் தமிழ் மெய்மொழி என்றும், எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி என்கிறார் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி என்கிறார்.

மனிதன் உயிரையும் உடம்பையும் உலகத்தையும் அறிந்து கொள்ள மொழி என்ற வரிவடிவம் சபதம் என்ற ஒலி வடிவம் வெளிச்சம் என்ற ஒளி வடிவம் தேவைப்பட்டது அதற்கு மொழி என்ற எழுத்துக்கள் தேவைப்பட்டது .அந்த மொழிதான முதன் முதலில் இறைவனால் தோற்று விக்கப் பட்ட மொழி தமிழ் மொழி என்கிறார் வள்ளலார்
 .
ஆதலால் இறைவன் சிறசபையாகிய ஆன்மாவில் விளங்குகிறார் செந்தமிழில் வாழ்கிறார் என்கிறார் வள்ளலார் .சாகாத கல்வியை கற்றுக் கொடுக்கும் மொழி தமிழ் என்கிறார் தமிழ் மொழியைக் கற்போம் காகாத மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்வோம் ..
 
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கடவுள் ஒருவரே !
அவர் அருட்பெரும் ஜோதியாக உள்ளார் !

நன்றி

தங்கள் ஆன்மநேயன்
செ.கதிர்வேல்.

மேலும் பூக்கும் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு