திங்கள், 31 அக்டோபர், 2011

ஆண் பெண் என்ற பேதம் எதிலும் இல்லை !\


ஆண் பெண் என்ற பேதம் எதிலும் இல்லை !\

ஆண் பெண் என்ற பேதம் உருவத்தால் அறிகிறோமே தவிர உண்மையில் இல்லை உண்மையில் அனைத்தும் ஒன்றுதான் அதன் பெயர் அருட் பிரகாச ஒளி அருட்பெரும் ஜோதி என்பதாகும் .அதைத்தான் ஆன்மா என்றும் ஆன்ம பிரகாசம் என்றும் உயிர் ஒளி என்றும் ,முச்சுடர் என்றும் ,அறிவு என்றும் பல பெயர் வைத்து உள்ளார்கள் நமது பெரியோர்கள் .அந்த உண்மையான ஒளியைக் கண்ணால் கண்டவர்கள் யாரும் இல்லை கண்டதாக சொல்லுவார்கள் அனைத்தும் பொய்யானதாகும் .ஏதோ ஒன்றைக் கண்டுவிட்டு அதுதான் இது என்பார்கள் அதில் உண்மை இல்லை

அந்த உண்மையான ஒளி எப்பொழுது தெரியும் என்றால் தன்னுடைய உடம்பில் உள்ள அணுக்கள் முழுவதும் தோற்றம் இல்லாமல் ஒளி அணுக்களாக அதாவது ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து விட்டப் பிறகு தான் அந்த உண்மையான அருட்பெரும் ஜோதி ஒளி அதன் வாயிலாகத் தெரியும் அப்போது புறத்தில் தோன்றும் கண்கள் அகக் கண்களாக மாறி விடும் அப்போது புறத்தில் உள்ளது அனைத்தும் உருவம் அற்ற ஒளி அணுக்களாக தோற்றம் அளிக்கும்
அதுவே உண்மையான அருள் ஒளி தேகம் பெற்றதாகும் .மரணம் இல்லாத ,பிறப்பு இறப்பு அற்ற அருள் நிலையாகும்

நாம் அனைவரும் ஆணாகவும் பெண்ணாகவும் உருவத்தால் பேதப் பட்டு வாழ்ந்து வருகிறோம் .நாம் உண்ணும உணவு அதன் தன்மைக்கு தகுந்தாற் போல் இரத்தமாக மாற்றி அதன் மத்தியத் தரமாகிய சக்தியை விந்துவாக மாற்றம் செய்து விடுகிறது .இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரித்தான் செயல் படுகிறது .அந்த விந்துவின் தன்மைக்குத் தகுந்தாற் போல் உணர்ச்சி என்னும் அன்பு ஆசை காமம் .மோகம் தூண்டுகிறது ,அதற்கு காதல் அன்பு என்று  பொதுவாக சொல்லிக் கொண்டு வருகிறார்கள்

அதற்கு சாதி மதம் சமயம் இனம் என்ற பேதங்கள் கிடையாது விந்துவின் இயல்புக்குத் தகுந்தாற் போல் செயல்படுவதாகும் இவற்றால் ஆண் பெண் சேர்க்கை தொடர்ந்து கொண்டே உள்ளன உயிர்கள் உருவாகிக் கொண்டே உள்ளது விந்துவின் அணுக்களின் அளவைக் கொண்டுஆண் பெண் என்ற உருவம் பேதப் படுகிறது இவைகள் எக்காலத்தும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன .இதனால் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன இவற்றை தடை செய்ய மக்கள் தொகையைக் குறைக்க அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாடு போன்ற பல வழிகளை கை  ஆள்கிறது அதனால் மக்கள் தொகை அதிகரிப்பு குறையுமா என்றால் எக்காலத்திலும் குறையாது .

ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் இருந்தால் குறையுமே தவிர வேறு எந்த வழியாலும் குறைக்க முடியாது .ஆண் பெண் சேர்க்கை எப்போது குறையும் என்றால் அவரவர்கள் உயிரின் இயக்கமாகிய அருள் ஒளியின் {அதாவது ஆன்மாவின் }உண்மைத் தன்மையை உணர்ந்தால் ஆண் பெண் சேர்க்கை தவறானது என்பதை அறிந்து அதில் நாட்டம் கொள்ளாமல் வாழ்ந்தால் மக்கள் தொகை குறையும்

,எப்படி உணர முடியும் யார் அதற்கு வழி காட்டுபவர் என்ற கேள்வி எழும் அல்லவா ?நமக்கு பல வழிகளில் நம்முடைய பெரியோர்கள் வழி காட்டி உள்ளார்கள் அத்தனையும் பொய்யான வழிகள் அவர்கள் காட்டிய வழிகள் உண்மையாக இருந்தால் நாம் இப்படி துன்பப்பட வேண்டியது இல்லை .அவரவர்களுக்கு தெரிந்த பொய்யான கற்பனைக் கதைகளையும் பொய்யான வழிமுறை போதனைகளையும் சொல்லி விட்டு போய் விட்டார்கள் நாமும் இதுவரை அதுவே உண்மையாக இருக்கும் என்று நம்பி ஏமாந்து வாழ்ந்து கொண்டு வருகிறோம் .

சரி எப்படி உண்மையை அறிந்து கொல்வது என்ற கேள்வி நம் மனதில் எழுகின்றது அல்லவா ?நாம் யாருடைய நூலகளையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை !நமக்கு உள்ளே ஒரு மெய்ப் பொருள் உள்ளது அதுதான் இந்த உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளது என்பதை அறிவின் வாயிலாக அறிந்து அந்த மெய்ப் பொருளைத் நம்மை நாமே நம் உடம்பில் உள்ளதை இடை விடாது தேட வேண்டும் அப்படித் தேடிக் கொண்டே இருந்தால் அதுவே நல்லது எது கெட்டது எது,கேட்டது எது என்பதை தெரிவிக்கும்

ஆனால் உண்மை உணர்வுடன் தேடவேண்டும் அதை தேடுவதற்கு விந்தை வெளியே விடாமல் இருந்தால் சரியான விடை கிடைக்கும் விந்து அறிவைத் தூண்டும் திரியாகும் அதனால் விந்தை வெளியேற்றக் கூடாது.சரி இதனால் என்ன பயன் என்ன லாபம் என்றால் .ஒரு ஆணும பெண்ணும் சேரும் போது உண்டாகும் இன்பத்தைக் காட்டினும் கோடி மடங்கு பல கோடி மடங்கு அளவிற்கு இன்பம் உண்டாகும் ஏன் உண்டாகும் என்றால் நம்முடைய ஆன்மா என்ற ஒளியில இருந்து அருள் என்ற விந்து சுரக்கும் அதற்கு அமுதம் என்று பெயராகும் அந்த அமுதம் சுரக்கும் போது அடையும், அந்த இன்பத்தை சொல்லால் அளவால் அளவிட முடியாது அந்த அளவிற்கு மகிழ்ச்சி தருவதாகும் .

இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதாகும் இதில் பேதம் கிடையாது அந்த இன்பம் கிடைக்கும் போது நீங்கள் நினைத்தது நினைக்காதது எல்லாம் நடக்கும், கிடைக்கும் அதனால் பல வகையான சித்துக்கள் கை கூடும், நடக்கும் அதை தவறான வழிகளில் பயன் படுத்த கூடாது.அப்படியே மேலும் தேடிக் கொண்டே இருந்தால்

நம்முடைய பூத விந்து அணுக்களால் உருவான உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும் .முழுமையாக மாற்றம் அடைந்த பின் தான் உண்மையான அந்த அருட்பெரும் ஜோதி ஒளி தெரியும் அப்போது புறக் கண்கள் தெரியாது இருக்காது அதுவும் அந்த அருட்பெரும் ஜோதி உள்ளே அடங்கி விடும் அப்போது தெரிவது ஒரே கண் அதுதான் அருட் கண் என்பதாகும் .ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்தால் பிறப்பு இல்லை .இறப்பு இல்லை, அந்த ஒளி உடம்பை எந்த
சக்தியாலும் அழிக்க முடியாது அது எங்கு வேண்டுமானாலும் செல்லும் அந்த உடம்பைப் பெற்றவர்கள் தான உயிர்களுக்கு நன்மை செய்ய முடியும் உயிர்களை காப்பாற்ற முடியும்

அப்படி பெற்றவர்கள் இந்த உலகத்தில் யார் என்றால் ஒரே ஒருவர்தான் அவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .அவர் என்னை வணங்க வேண்டாம் வழிபட வேண்டாம் என்றார் . எல்லோருக்கும் பொதுவாகிய அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ஒருவர் உள்ளார் அவரை வெளியே எங்கும் தேட வேண்டாம்  ஒவ்வொருவரின் உடம்பை இயக்கும் உள் ஒளியாக புருவ மத்தியின் , உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கும் மேலே ஒரு ஒளி வடிவமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது .
அதை உண்மை அன்பால் உண்மை இரக்கத்தால் அதையே தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு எல்லா உண்மைகளையும் எல்லா நன்மைகளையும் அதுவே கொடுக்கும் என்றார்கள் ஆதலால் மனிதனாக பிறந்த அனைவரும் ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் உண்மையைத் தேடுவோம் உண்மையை அறிவோம் உண்மையுடன் வாழ்வோம் உண்மையான இடத்திற்கு செல்வோம் அதுவே இந்த உலகத்தில் மக்கள் தொகையை குறைக்கும் வழியாகும் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு