செவ்வாய், 1 நவம்பர், 2011

நல்ல ஆட்சி அமைய வேண்டும் !

நல்ல ஆட்சி அமைய வேண்டும் !

உலகம் முழுவதும் நல்ல ஆட்சி அமைய வேண்டுமானால் மக்கள் நலமுடன் வாழ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் .

உலகில் உள்ள மதங்களையும் மதக கொள்கைகளையும் அப்புறப் படுத்தவேண்டும் சமயங்களையும் ,சமயக் கொள்கைகளையும் அப்புறப் படுத்த வேண்டும் ,சாதிகளையும் சாதிக் கொள்கைகளையும் அப்புறப் படுத்த வேண்டும் கடவுள் கொள்கை உலகம் முழுவதும் ஒரே தனமையுடன் இருக்கவேண்டும் அனைத்து உலகத்திற்கும் ஒரே கடவுள் என்ற ஒளி வழிபாட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் .

ஆலயம் ,மசூதி,சர்ச்சு ,கோவில் .பிரமீடு முதலிய அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் உருவ வழிபாட்டை அகற்றி ,அனைவருக்கும் பொதுவான ஒளி வழிபாட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் .

ஆட்சி முறையை மாற்றி உலகம் முழுவதும் ஒரு குடைக் கீழ் கொண்டு வரவேண்டும் கடவுள் தரகர் குரு அர்ச்சகர் அரசர்,மந்திரி போன்ற எந்த வேறு பாடுகளும் இருக்க கூடாது.கடவுள் ஒருவர்தான் அனைவருக்கும் குருவாக இருக்க வேண்டும்

தாவர உணவு தவிர எந்த உயிர் இனங்களையும் உணவாக கொள்ளக் கூடாது..அனைத்து உயிர்களிலும் ஆன்மா என்ற உயிர் ஒளி இருப்பதால் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடை பிடிக்க வேண்டும்  

உலகம் முழுவதும் ஒரே சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வரவேண்டும் .அனைவருக்கும் வேலை வாய்ப்பு கொண்டு வரவேண்டும் .அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும் .வேளையில் வித்தியாசம் இருக்கலாம் ஊதியத்தில் வித்தியாசம் இருக்கக் கூடாது.

உலகில் அனைத்து தொழில் வளம் பெருக வேண்டும் .பசுமைப் புரட்சி செய்து அனைவருக்கும் உணவு பற்றாக் குறை இல்லாமல் சமமாக பகிர்ந்து வழங்க வேண்டும் .நோய் இல்லாமல் வாழ்வதற்கு சுகாதார வளத்தை மேம்படுத்த வேண்டும் .உலகில் உள்ள அனைத்து நிலங்களையும் அரசு உடமையாக்க வேண்டும் அனைத்து தொழில்களும் அரசின் மேற்ப பார்வையில் செயல்பட வேண்டும் .சேமிப்பு வைப்பு நிதி என்ற பெயரில் யாரும் பணத்தை சேமித்து வைக்க கூடாது.பணத் தேவையை ஒழித்து பொருள் தேவையை உண்டாக்க வேண்டும் .

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் .பேதம் அற்ற நிலை உடைய மக்களையும் பேதம் அற்ற தன்மை உடைய மக்களையும் கொண்ட ஒரு நல்ல ஆட்சி அமைய வேண்டும் .

இவை எல்லாம் நடந்தால் உலகில் உள்ள தீவிர வாதம்,பயங்கர வாதம் .நக்சல்பார்ட்டி,கொலை, கொள்ளை,லஞ்சம்,ஊழல் கற்பழிப்பு ,ஏமாற்றுதல் ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,ஏழை ,பணக்காரன்,சாதி ,சமயம் ,மதம் இனம் ,போன்ற கொடுமையான செயல்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஒழிந்துவிடும்    

இவற்றை எல்லாம் யார் செய்வது !அனைத்து உயிர்களிடத்தும் அன்பு தயவு கருணை உடைய பொது நலமே வாழ்க்கை என்னும் அருள் நயந்த சன்மார்க்கர் என்னும் நன்மார்க்கர் ஆட்சி புரிய வேண்டும் இவை எல்லாம் நான் சொல்ல வில்லை கருணையே வடிவமான அருட்பிரகாச வள்ளல என்னும் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் சொல்லியதாகும் .ஆண்டவர் நினைத்தால் அனைத்தும் நடக்கும் .

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் '=கதிர்வேலு . 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு