புதன், 26 அக்டோபர், 2011

கொலை செய்யாதீர்கள் புலால் உண்ணாதீர்கள் !


கொலை செய்யாதீர்கள் புலால் உண்ணாதீர்கள் !

ஆனமநேய அன்புடைய அனைவருக்கும்  வணக்கம் இந்த உலகம் துன்பமும் துயரமும் அச்சமும் பயமும் அடைவதற்கு முக்கிய காரணம் வாயில்லாத உயிர்களைக்  கொன்று தினபது தான் என்பது ,புலால் உண்பவர்கள் அறியாத உண்மையாகும்,மாதம் ஒருநாள் வாரம் ஒருநாள்  தினமும் தின்பது, எல்லாம் தவறான பழக்கமாகும் உயிரின் உண்மை ,அதன் தன்மை அதன் ஆற்றல் என்ன என்பது தெரியாமல் பழக்கத்தின் காரணமாகவும் நாக்கு ருசியின் காரணமாகவும் கடவுளின் வேண்டுதல் காரணமாகவும் புலால் உண்கிறார்கள் இவை யாவும் அறியாமையாகும் மனித அறிவுக்கு குறைவான செயலாகும்

எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு ,இறைவன் குடி இருக்கும் ஆலயம் என்பதை என்பதை அறிவு மூலமாக உணர வேண்டும் அதுவே பகுத்தறிவாகும்,பகுத்தறிவு என்று பேசுபவர்களும்,இவற்றை அறியாமல்  தவறு செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை பகுத்தறிவு என்று சொல்ல முடியாது .

கடவுளை வணங்கும் வழிபாடு செய்யும் பக்தியில் உள்ளவர்களும் .ஒரு சில நாட்கள் தவிர மற்ற நாட்களில் புலால் உண்கிறார்கள் .கடவுள் அவர்களை ஏற்றுக் கொள்வார்களா என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார் அவர்களும் அறியாமையால் மூட பழக்க வழக்கத்தால் புலால் உண்கிறார்கள் அவர்களை பக்தியாளர்கள் என்று சொல்வது நியாயமாகாது .அதேபோல் எல்லா மதத்தார்களும்,சமய வாதிகளும் அதே தவறையும் ,குற்றங்களையும் செய்து வருகிறார்கள்

யோகம ,தவம தியானம் செய்யும் ஆன்மீக வாதிகளும் உயிர்களின் உண்மை தெரியாமல் புலால் உண்டுக் கொண்டு செய்கிறார்கள்  தியானம் தவம யோகம அவர்களுக்கு கை கூடுமா ,மனம் அடங்குமா என்றால் உண்மையாக எதுவும் நடக்காது அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்

ஒரு உயிரை உண்டாக்குவதற்கு கடவுளைத் தவிர மனிதர்களால் முடியாது, முடியாததை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை எனபது இயற்கையின் கட்டளையாகும் ,சட்டமாகும்

எவ்வளவு செல்வம் இருந்தாலும் பட்டம் பதவிகள் இருந்தாலும்.அவனுக்கும் உயிர்மேல் அளவுகடந்த ஆசையும் பற்றுதலும்  வருகிறது.உயிரைக் காப்பாற்ற அத்தனை செல்வங்களையும்  இழக்க தயாராகிறார்கள் .அந்த உயிரின் தன்மையும் பெருமையும் மகத்துவத்தையும் எப்படி சொல்லமுடியும்.உயிர் இருக்கும் வரைதான் அவன் மனிதன்.உயிர் போய் விட்டால் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்,அந்த உடலுக்கு பிணம என்று பெயராகும் .

அதேபோல் ஒரு உயிரை அழித்தால்,அந்த உயிர்போன பிறகு அதற்கு பெயர் பிணம என்பதாகும் ,மனிதன் இறந்தால் சுடுகாட்டில் பிதைக்கிறோம்.வாயில்லாத ஆடு மாடு,கோழி ,பன்றி ,போன்ற ஜீவன்கள் இறந்தால் மனிதன் வயிற்றில் பிதைக்கிறோம் .மனிதன் வயிறும் சுடுகாடுதான் என்பதை உணரவேண்டும்.சுடுகாட்டில் எண்ண இருக்கும்.அங்கு யார் வாழ்வார் .என்பதை நினைத்து பாருங்கள் ,மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால்.தாவர உணவுதான் சிறந்ததாகும்.

இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம்.மதவாதம் நக்சல் பார்ட்டிகள், கொலைகொள்ளைகள்.இலங்கை படுகொலை.களவு,கற்பழிப்பு,போனற,கொடுரமான செயல்கள் யாவும் செய்பவர்கள் யார் என்பதை சிந்தித்து பாருங்கள்,அனைவரும் மிருகத்தின் புலால் உணபவர்கள் என்பது தெளிவாகத்தெரியும்,மிருகத்தை தின்பவர்கள் அறிவு மிருக (அறிவு) குணமாகத்தான் இருக்கும் என்பது அறிவியல் வல்லுனர்களின் கருத்தாகும் .

ஆனால் இதை வள்ளலார் 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே தெளிவாக விளக்கியுள்ளார் .திருவள்ளுவரும் 2000,ஆண்டுகளுக்கு முன்னாடியே தெரியப்படுத்தி உள்ளார்.மனிதன் இதையெல்லாம் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளாமல் மனம் போனபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறான்

வள்ளலார் பாடல் வருமாறு '-

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பளிதர ஆடு பன்றிக் ,குக்குடங்கள்(கோழி )
பலிகடா முதலிய உயிரைப்
போலியுறக் கொண்டே போகவுங் கண்டே
பந்தி நொந்து உளம நடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில்
கண்டகாலத்தும் பயந்தேன் .

இப்படி பலபாடல்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார்கள் .

திருவள்ளுவர் திருக்குறளில் இரண்டு அதிகாரம் கொல்லாமை புலால் மறுத்தல் பற்றி மிகவும் தெளிவாக எழுதிவைத்துள்ளார்

தன்ஊன் பெருக்கற்கு பிருதூன் உண்பான்
எங்கணும் ஆளும் அருள் .
 

கொல்லான் புலால் மறுத்தானை எல்லா
உயிர்களும் கை கூப்பி தொழும் .

என்கிறார் திருவள்ளுவர் இவைபோல் இருபது குறள்கள் உள்ளன.இதையெல்லாம் ஏன் எழுதி வைத்துள்ளார்கள் என்பதை மனிதர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டாமா ?

உலகிலேயே பெரிய குற்றம் எதுவென்றால் பிற உயிர்களை கொலை செய்வதும்,அதனுடைய புலாலை (மாமிசம் ) உண்பதும் என்பதை அனைவரும் உணரவேண்டும்..இவைகளுக்கு கடவுளிடம் மன்னிப்பு கிடையாது .

நம்முடைய குழந்தைக்கு உடலில் எதாவது ஒரு கீறல் பட்டால் எவ்வளவு துடி துடிக்கிறோம்.அதுபோல் வாயில்லாத ஜீவனை கத்தியை வைத்து அறுக்கின்ற போது அந்த ஜீவன் எவ்வளவு துன்பப்படும் என்பதை உணராமல் அதை வெட்டி கூறு போட்டு தின்கிறோமே,இவை எந்த விதத்தில் ஞாயம் .

மனிதனை மனிதன் கொலை செய்தால் தூக்கு தண்டனை என்கிறது உலகியல் சட்டம்.வாயில்லாத உயிர்களை கொலை செய்தால் அதற்கு உங்கள் சட்டத்தில் என்ன தண்டனை?அனைவரும் சேர்ந்து உண்பதுதான் உங்கள் சட்டத்தின் தீர்ப்பா ?.ஆண்டவன் தீர்ப்பு எண்ண தெரியுமா ?நீங்கள் பல பிறவிகள் எடுத்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.உங்கள் வாழ்க்கையில் நிம்மதி மகிழ்ச்சி ஆனந்தம் என்பது இறுதிவரைக் கிடையாது கிடைக்காது .

மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கம், கிடைத்ததின் நோக்கம்,மரணத்தை வென்று கடவுள் நிலை அடைவதாகும் .அதாவது மரணமில்லா பெருவாழ்வு என்பதாகும்.நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்ல வேண்டும்.வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது!வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது ? என்று கண்ணதாசன் பாடல் வரிகள் சொல்லுகின்றன.

அப்படி என்றால் மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்பதை வாழ்ந்து காட்டியவர் வள்ளலார் .அவர் வாழ்ந்து வந்த பாதையை கடைப் பிடித்தால் மரணத்தை வென்று கடவுள் மயமாகலாம்.அவர் எழுதி வைத்த திரு அருட்பாவில் அனைத்து உண்மைகளும் மிகவும் தெளிவாக இருக்கிறது .அதை வாங்கி படித்து மனிதர்கன் மனிதர்களாக வாழுங்கள் .

நீங்கள் அப்படி வாழ்கிறீர்களா ?என்று கேள்வி கேட்கலாம்.நான் சத்தியமாக அப்படித்தான் வாழ்கிறேன் .
இந்த உலகத்தில் எனக்கு என்று எதுவும் இல்லை.மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை எதுவுமில்லை.
பணம் சொத்து வீடு என்று எதுவும் இல்லை.நான் யாரிடத்திலும் எதுவும் வாங்குவதில்லை .ஆனால் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

எனக்கு வேண்டியதை எல்லாம் இறைவன் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தருகிறார்.என்னை ஆண்டவர் வழி நடத்துகிறார்.அவர் வழியில் நான் செல்கிறேன் இதுதான் உண்மையாகும் .

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் ஜோதி !
எங்கு எங்கு இருந்து உயிர் ஏது ஏது வேண்டினும்
அங்கு அங்கு இருந்து அருளும் அருட்பெரும் ஜோதி

என்பார் வள்ளலார் ;-சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற பேதமில்லாமல்,அனைவரும் அனைத்து உயிர்களும் நம்முடைய சகோதரர்கள் என்ற உண்மை தெரிந்து விட்டால்.நாம் கடவுள்கள்தான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.உண்மை தெரிந்து விட்டால் எந்த தவறும் செய்யமாட்டோம்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் !அவரால்தான் இந்த உலகமும் உலக உயிர்களும் படைக்கப்ட்டுள்ளன என்ற உண்மை உணரவேண்டும்.அவர் உருவமாக இல்லை ஒளியாக உள்ளார்,அருள் அணுவாக உள்ளார் ! அதற்கு மேல் எந்த சக்திகளும் இல்லை என்பதை அறிவால் உணர்ந்தால் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக தெரியும்

மனிதன் படைத்த உருவங்களில்  எல்லாம் கடவுள் இல்லை,கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கடவுள்கள் இல்லை, கடவுள் உயிர் ஒளியாக எல்லா உயிர்கள் இடத்தும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்.அந்த உயிர் ஒளிதான் கடவுளின் ஏக தேசங்கள் என்பதை ,உண்மையுடன் உணர்ந்தால் எந்த உயிரையும் கொலை செய்யமாட்டோம்.நமக்கு வழி காட்டிய பெரியவர்கள் உண்மைக்கு புறம்பாக சொல்லியும் எழுதியும் வைத்து விட்டார்கள் அதையே உண்மை என்று நம்பி அறியாமையால் வாழ்ந்து வருகிறோம்.நம்மீது குற்றமில்லை நமக்கு வழி காட்டியவர்கள் தான் குற்றவாளிகளாகும் .அவர்கள் காட்டிய வழியில் கண்ணை மூடிக்கொண்டு பின் பற்றி வாழ்ந்து கொண்டு வருகிறோம் .

வள்ளலார் வந்துதான் எல்லா உண்மைகளையும் தெளிவு படுத்தியுள்ளார் இந்த உலகத்திற்கு உண்மையை சொன்ன ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவர்தான் ஒருவர்தான் !

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம உயிர்போல் எண்ணி யுள்ளே
ஒத்து உரிமை உடையவராய் யுவக்கின்றார் யாவர அவர் உலந்தான் சுத்த
சித்துருவாய்  எம்பெருமான் நடம புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர் தம் அடிகேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த்தாலோ !

எல்லா உயிர்களும் ஒரே தன்மை உடையது  என்று யார் உண்மை அறிவுடன் அறிந்து கொள்கிறார்களோ  நினைக்கின்றார்களோ அவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன் அவர்கள் இட்ட பணியை என்னுடைய சிரமேற் கொண்டு செயல் பட  என்னுடைய அறிவு தயாராக இருக்கிறது என்கிறார். வள்ளலார்.

உண்மையை உணர்ந்து உறுதியுடன் வாழ்வோம் .
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
. .
அன்புடன் உங்கள் ஆன்மநேயன் ;-கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு