சனி, 8 அக்டோபர், 2011

உலகம் என் வசம இருந்தால் !


உலகம் என் வசம இருந்தால் !

1)  சாதி ,சமயம் .மதம் .என்ற கொள்கைகளையும் ,கோட்பாடுகளையும் .மக்கள் மனதில் இருந்து எடுத்து விடுவேன் .பொய்யான கற்பனைக் கதைகளை  விளக்கும் நூல்களை அதாவது புத்தகங்களை மண்ணைப் போட்டு மறைத்து விடுவேன் .

2) கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதியர் !அவர் ஒளியாக உள்ளார் அவர்தான் இந்த உலகத்தை இயக்கக் கொண்டு உள்ளார் என்பதை உலகுக்கு தெரியப் படுத்துவேன் .

3) உலகில் உள்ள ஆலயங்கள் .மசூதிகள் .சர்ச்சுகள் .போன்ற இறைவன் வழிபாட்டுத் தளங்கள் அனைத்திலும் ,உருவ வழிபாட்டை அப்புறப் படுத்தி ஒளி வழி பாட்டை அமல் படுத்துவேன் .

4) உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவன் வாழும் ஆலயம் என்பதை உணர்த்தி உயிர்க் கொலையும் புலால் உண்ணாமல் இருக்கவும் மக்களுக்கு தெளிவுப் படுத்துவேன் .

5) மக்கள் நலமுடன் வாழ்வதற்கு உணவு முக்கியம் என்பதை தெளிவுப் படுத்தி பசுமைப் புரட்ச்சி செய்து விவசாயம் தன்னிறைவு அடையச செய்வேன்

6) காடு ,வனம,மலை மற்றும் ,ஆடு,மாடு,போன்ற கால் நடைகள் முதலியவைகளை அழிக்காமல் அதனால் வரும் கழிவுப் பொருள்களை பயன் படுத்தி இயற்கை உரங்கள் தயாரித்து விவசாயத்திற்கு பயன் படுத்துவேன் .

7}மனிதன் மனிதனாக வாழ்வதற்கு சந்தைப் படிப்பை அகற்றி ,நம் சொந்தப் படிப்பான சாகாக் கல்வியை மக்களுக்கு போதிக்க செய்வேன் .

8) அனைத்து மக்களுக்கும் உண்ண உணவு ,உடுக்க உடை ,இருக்க இடம் அதாவது வீடு .சரி சமமாக வாழ்வதற்கு வகை செய்வேன் .

9) பஞ்சம் .பட்டினி ,வறுமை, ஏற்றத் தாழ்வு ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் .ஏழை ,பணக்காரன் என்ற கொடுமையான அரக்கனை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் .

10) எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் சமமான ஊதியம் அதாவது சம்பளம் வழங்குவேன் .வேளைகளில்அதாவது உழைப்பில் வித்தியாசம் இருக்கலாம் ஊதியத்தில் வித்தியாசம் இல்லாமல் இருக்க வழி செய்வேன்

11}மதுக் கடைக்களும்,மாமிசக் கடைகளும் உலகில் எங்கும் இல்லாமல் செய்து மக்களுக்கு உணர்த்தி மக்களை நல்வழிப் படுத்துவேன் .

12)காவல்துறை ,எல்லைப் பாதுகாப்பு,ராணுவம்,தனி மனித பாதுகாப்பு,நீதி மன்றங்கள் எதுவும் மக்களுக்கு தேவையற்றது என்பதை உறுதி செய்வேன் .குற்றம் செய்யாத மனித சமுதாயத்தை உருவாக்குவேன்

13) மக்களை அழிக்கும் ஆணு ஆயுதம் ஆணு குண்டு,போர்ப் படை,அதிகார துஷ்பிரயோகம் போன்ற கொடுமையான தீய சக்திகளை நாட்டை விட்டு விளக்கி விடுவேன் .

14) கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது.வேறு திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது.அதேபோல் மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது என்பதை உணர்வு பூர்வமாக உணர வைப்பேன்.

15) மக்களுக்கு இயற்கை மரணம் வரவேண்டுமே ஒழிய செயற்கை மரணம் வரக்கூடாது என்பதை பாதுகாப்பேன்.மரணம் வந்தால் உடலை புதைக்க வேண்டுமே தவிர எரிக்க கூடாது என்பதை அறிவியல் ரீதியாக உணர்த்துவேன் .

16) உலகம் இப்போது வெப்பமயமாகிக் கொண்டு இருப்பதற்கு காரணம் பிணத்தை எரிப்பதும் ஒரு காரணமாகும் .வாயில்லாத ஜீவன்களாகிய ஆடு மாடு ,பன்றி,கோழி ,மீன்கள் போன்ற உயிர்களை கொலை செய்வதால் ,உயிர்களில் இருந்து வரும் உயிர் ஆற்றல் என்னும் மின் காந்த சக்திதான் வெளியே வந்து அனுக்களோடு கலந்து வெப்பமாகிறது .அதனால் உயிர்க் கொலை செய்யாமல் உலகைப் பாது காப்பேன.   

17}உலகியல் கல்வியான சாகும் கல்வியை எடுத்துவிட்டு காகாக் கல்வியான அருள் கல்வியை அனைவருக்கும் போதிக்க வழி செய்வேன் .

18} அரசியல் என்ற கொள்கையை குழியைத் தோண்டி புதைத்து விடுவேன் .நாட்டை பாது காக்க அருள் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களை நாட்டை ஆளும் உரிமையை வழங்குவேன் .அவர்களுக்கு அருள் நயந்த நன்மார்க்கர்கள் என்ற பட்டத்தை கொடுத்து வரிசைகரமாக ஆட்சி பீடத்தில் அமர்த்துவேன் .

19}உலகில் உள்ள மனித தேகம் படைத்தவர்களை மரணம் அடையாமல் ஒளி தேகமான அருள் தேகம் பெற்று ,மெய்ப் பொருளான அருட்பெரும் ஜோதி ஆண்டவர் இருக்கும் இடத்திற்கு ஒவ்வொருவராக அனுப்பி வைப்பேன் .ஏன் என்றால் அனைவரும் அங்கு இருந்து தான் வந்தவர்களாகும் .வந்த இடத்திற்கு அனுப்பி வைப்பதுதான இயற்கை சட்டமாகும் .அந்த சட்டத்தை முழுமையாக்கப் பாடுபடுவேன் .

20} உலக உண்மைகளையும் உலகம் எப்படி படைக்கப் பட்டது ,உயிர்கள் எங்கு இருந்து வந்தன உயிர்த் தோற்றங்கள் எப்படி உருவானது ஏன் உருவானது ஏன் அழிகின்றது ,அழியாமல் அதாவது மரணம் அடையாமல் இருக்க என்ன வழி என்பதை சாகாக் கல்வியின் மூலம கற்பித்து அனைவரையும் மெய்ப் பொருளை அடையச செய்வேன்

21}உலகில் உள்ள அணுக்கள் எத்தனை வகைகள் அவைகளின் வேலைகள் என்ன ?அதன் சேர்க்கைகள் எப்படி நடை பெறுகிறது ,என்ன என்ன அணுக்கள் சேர்ந்து உருவங்களை உருவாக்குகிறது ,உயிருள்ள அணுக்கள் ,உயிர் இல்லாத அணுக்கள் ,அதன் தோற்றங்கள் மாற்றங்கள் அனைத்தையும் .அறிவியல் விஞ்ஞானம் .உளவியல் அருளியல், மூலம அறிய உலக அளவில் பல்கலைக் கழகங்கள் அமைத்து உண்மை அறியும் வகை செய்வேன் ,

22}மக்கள் அனைவரும் ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் என்ற பேதம் இல்லாமல் துன்பம் என்ன என்று தெரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அருள் நயந்த நன் மார்க்கர்களைக் கொண்டு நல் ஆட்சியை நிரந்தரமாக நடத்த செய்வேன்

23}மக்களுக்கு உண்மை என்பது எது ?பொய் என்பது எது ?என்பது தெரியாத மக்களுக்கு ஒட்டு உரிமையைக் கொடுத்து அவர்களால் தேர்வு செய்யம் அரசியலை அழித்து விடுவேன் .அவர்களால் தேர்வு செய்யும் அரசியல் வாதிகள் நாட்டை அழித்துக் கொண்டு உள்ளார்கள் எம்பதை மக்களுக்கு புரிய வைப்பேன் .

24}உண்மையை உணர்த்தும் அருள் சட்டத்தை உருவாக்குவேன் .ஒவ்வொருவரும் அருளாளர்களாக வாழ வழி வகுப்பேன்.பேராசை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவேன் .காமம் குரோதம் லோபம் ,அகங்காரம் ஆச்சர்யம் இல்லாத புனித முறு சுத்த சன்மார்க்க சமுதாயத்தை உருவாக்குவேன் .

25}எல்லோருக்கும் பொதுவான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை அமைத்து அதன் வாயிலாக மக்களை ஒழுக்க நெறியில் வாழ வைப்பேன் .மனிதனை மனிதனாக வாழ வைப்பேன் .அதன் பின் மனிதன் தெய்வ நிலைக்கு செல்லும் வழிக் காட்டுவேன் .

26} மாயை ,சாத்தான் ,சைத்தான என்பது அனைத்தும் ஒன்றுதான.அந்த மாயை உலகத்தில் வாழும் நாம அதைனிடம் இருந்து விடுபட்டு புனிதர்களாக வாழ்வதற்கு,மாயையை மனிதர்களுக்கு கட்டுபட வைப்பேன் .

27}இதுவரை மக்களுக்கு போதித்த அனைத்து,சமய, மத வாதிகளும்  அருளாளர்களும் மாயையில் சிக்குண்டவர்கள் அவர்கள் கருத்துக்கள் அனைத்தும் பொய்யான கற்பனை கதைகளாகும் சாத்தானின் வேதங்களாகும் .அதனால்தான் மக்கள் ஆன்மநேயம் ,மனித நேயம் இல்லாமல் பேதங்களும்,குழப்பங்களும் உருவாக்கி விட்டன.அதனால் மனித இனம் அழிந்து கொண்டுள்ளன .அதிலிருந்து மீட்டு மக்களை காப்பாற்றுவேன் .

28}மரணம் என்பது இன்றுவரை இயற்கை என்று இருந்தார்கள் .அவை இயற்கை அல்ல !நாம் வாழும் வாழ்க்கை முறையானது அல்ல ,அதனால் மரணம் செயற்கை யால்தான் வருகிறது ,மனிதன் மரணம் அடையாமல் அருள் தேகமான ஒளி தேகம் பெற்று பேரின்பமான பெரிய வாழ்வைப் பெற்று கடவுள் நிலையை அடையலாம் என்பதை சாகாக் கல்வி மூலம பயிற்சிக் கொடுத்து மரணம் அடையாமல் இருக்க வழி வகை செய்வேன்.

மேலும் பூக்கும் ;--
அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு.    
. ,..  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு