புதன், 28 செப்டம்பர், 2011

ஊழலை ஒழிப்பது எப்படி ?

ஊழலை ஒழிப்பது எப்படி ?


நாம் வாழும் இவ்வுலகம் அனைவரும் வாழ வழி வகுத்து தந்துள்ளது.உலகில் உள்ள பொருட்கள் அனைவருக்கும் சொந்தமானதாகும்,அப்படி இருக்க ஒருவரிடத்தில் அதிகப் பொருட்களும் ஒருவரிடத்தில் குறைந்த பொருள்களும் ஒருவரிடத்தில் பொருள்களே இல்லாமலும் வாழும் வகை எப்படி வந்தது,

ஏழைப் ,பணக்காரன் ,உயர்ந்தவன், தாழ்ந்தவன் எத்தனை சாதி, சமயம், மதங்கள் சாத்திரங்கள் என்ற நிலைப்பாடு ஏன் வந்தது.இதை சரி செய்ய முடியாமல் உலகமே தவித்துக் கொண்டு இருக்க என்ன காரணம் .இதற்காக எத்தனை சட்ட திட்டங்கள் ,எத்தனை ஆட்சியாளர்கள் ,எத்தனை எத்தனை அதிகாரிகள் ,எத்தனை பாது காவலர்கள் ,எத்தனை நீதி மன்றங்கள் ,எத்தனை எல்லைப் பாது காப்புகள் .மனிதனை மனிதன் அழித்து வாழும் வாழ்க்கையை பார்க்கும் போது, மிகவும் கொடூரமான மிருகத்தை விட கேவலமாக உள்ளது.  

இதனால் மனித உயிர்கள் பேய் பிடித்த குரங்கு விளையாட்டுகள் போல் சிறு பிள்ளை விளையாட்டுத் தனமாக பல பேத முற்று,வெளிநாட்டிலும்,உள் நாட்டிலும் போரிட்டு அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.இப்படி வீண் போகாமல் பாது காக்க வேண்டுமானால் எனக்குத் தெரிந்த சில வழிகளை சொல்லுகிறேன் இவை முடிவு அல்ல அறிவாளிகளின் சிந்தனைக்கு

இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கு உண்ண உணவு ,உடுக்க உடை ,இருக்க இடம் என்ற வீடு ,இவை அனைவருக்கும் போதுமானது ,சரி உலகில் மனிதர்களால் உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் இறைவன் படைத்த இவ்வுலகத்தில் தான் கிடைக்கின்றன,இதை பகிர்ந்து கொண்டு வாழாமல் வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும் இவற்றை எப்படி சரி செய்வது என்பதைப் பார்ப்போம் ,

அரசாங்கம் செய்யும் கடமை என்ன ?
உழைப்பில் வித்தியாசம் இருக்கலாம் ஊதியத்தில் வித்தியாசம் இருக்க கூடாது .

நம் நாட்டில் படித்தவர் படிக்காதவர் என்ற இரு பிரிவுகளை அரசாங்கம் பிரித்து அனைவருக்கும் வேலை என்பதை உறுதிப் படுத்த வேண்டும் உழைக்கும்.வேலைகளில் வேறுபாடுகள் இருக்கலாம் வித்தியாசம் இருக்கலாம் .ஊதியத்தில் அதாவது சம்பளத்தில் வித்தியாசம் இருக்கக் கூடாது,கக்கூஸ் எடுப்பவர் முதல் கலைக்டர் வரையிலும்.ஆண்டி முதல் அரசாட்சி செய்பவர் வரையிலும், அனைவருக்கும் வருமானம் சமமாக இருக்க வேண்டும் ,அப்படி பகிர்ந்து கொண்டால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் துன்பம் ,துயரம் ,அச்சம் ,பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம் .,.

வாரிசுகளுக்கு சொத்து உரிமை என்பது கூடாது !

ஒரு குடும்பத்தில் ஆண் பெண் அதாவது கணவன் மனைவி திருமணம் செய்து குழந்தை பிறந்தால் அவர்களை படிக்க வைக்கவும் ,அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் வரைதான் தாய் தந்தையர்களின் கடமையாக இருக்க வேண்டும் .தாய் தந்தையர்கள் சொத்தில் பெற்றக் குழந்தைகளுக்கு உரிமைக் கிடையாது அவர்கள் மரணம் அடையும் வரை அவர்கள் சம்பாதித்த சொத்தை அனுபவித்து பின் அவர்கள் சொத்தை அரசாங்கத்திடம் கொடுத்து விட வேண்டும் .அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் .இவை அனைவருக்கும் பொதுவானதாகும் .

இதன் படி அரசாங்கம் செயல் பட்டால் ஊழல் செய்வதற்கு வாய்ப்பே இல்லை அவசியமும் இல்லை .எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உருவாகும் ...
இதைத்தான் வள்ளலார் சொல்லுகிறார் ;--

ஒருமையில் உலகெலாம் ஓங்குக என்றார் .ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் என்றார்.
உயிரெலாம் உலம்பட நோக்குக என்றார் உயிருள யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்றார் .

இதை யார் செய்வது ;-- பற்று இல்லாத பொது நோக்கம் உள்ளவர்கள் நடு நிலை உள்ளவர்கள், இறைவன் திரு அருளைப் பெற்றவர்கள் அதாவது அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க !தெருன் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெருக என்றார் ஒன்றே குலம் ஒருவனே தேவன என்ற உணர்வை அனைவரிடத்திலும் பதிய செய்ய வேண்டும் ,ஊழலால சம்பாதிக்கும் பொருள் எந்த உயிர்களையும் காப்பாற்றப் போவதில்லை,என்பதை உணரவேண்டும் ..

ஊழலை ஒழிக்கவும் அனைவரும் சரி சமமாக வாழ்வும் ஒற்றுமையுடன் வாழவும் பேராசையை ஒழிக்கவும் இதுவே வழியாகும் என்பதை உங்கள் முன் வைக்கிறேன் .சிந்திப்போம் செயல்படுவோம் .

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு